<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867</id><updated>2012-01-14T08:10:48.226+05:30</updated><category term='சீமான்'/><category term='முத்துராமலிங்கம்'/><category term='கட்டுரை'/><category term='தேவர் ஜெயந்தி'/><category term='சட்டக் கல்லூரி'/><category term='ஈழம்'/><category term='முதுகுளத்தூர் கலவரம்'/><category term='கவிதை'/><category term='வீரவணக்கம்'/><title type='text'>ஏகலைவா</title><subtitle type='html'>ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப்புலம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>24</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-8884960562951704303</id><published>2010-10-05T20:58:00.001+05:30</published><updated>2010-10-05T21:01:00.915+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 3</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் மலாயா இருந்தபோது, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்; தங்களது தோட்டத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கவும்; தொழிலாளர்களின் கேõரிக்கைகள் போராட்டங்களாக வளர்ந்து விடாமல் தடுக்கவும் – 1923ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இச்சட்டத்தின்படியே, தொழிலாளர் குழந்தைகளின் கல்வித் திட்டத்திற்கும் வழிவகை செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இந்நடவடிக்கைக்கு, கிறித்துவ மத நிறுவனங்களின் முன்முயற்சிகளே தூண்டுகோலாக இருந்தன. தமிழகத்தின் கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்கியதைப் போலவே, மலாய தோட்டத் தொழிலாளர் நடுவில் ஊழியம் செய்ய விழைந்த கிறித்துவ மத நிறுவனங்கள், இத்தகைய கல்விக் கூடங்களை ஆங்காங்கே உருவாக்கியிருந்தனர். 1850 இல் மலாக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளியும் 1859, 1862, 1895 என கால இடைவெளிகளில் சில தமிழ்ப் பள்ளிகளும் இந்நிறுவனங்களால் தொடங்கப்பட்டிருந்தன. 1816 இல் பினாங்கில், மழலையர் பள்ளி என்ற பெயரில் ‘ஹட்கிங்ஸ்' என்ற வெள்ளைப் பாதிரியாரால் தொடங்கப்பட்ட இலவசப் பள்ளிக்கூடமே, முதல் தமிழ்ப் பள்ளிக்கூடமென அறியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a class="highslide" href="http://www.keetru.com/images/stories/eelam/sri-lanka.jpg" onclick="return hs.expand(this)"&gt;  &lt;img align="left" alt="Eelam" border="0" src="http://www.keetru.com/images/stories/thumbs/L2hvbWUvY29udGVudC9rL2UvZS9rZWV0cnVjb20vaHRtbC9pbWFnZXMvc3Rvcmllcy9lZWxhbS9zcmktbGFua2EuanBn.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிப்படையில் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப் பணி என்ற பெயர்களில் கிறித்துவ நிறுவனங்களும், தனிப்பட்ட வகையில் சில பாதிரியார்களும் மேற்கொண்டிருந்த இத்தகைய தொண்டூழியம், ஆங்கிலேய தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களின் மனப் புண்ணுக்கு புனுகு பூசும் செயலன்றி வேறொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்றைக்கும் ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் உலகளாவிய சுரண்டலுக்கும் அதி கார அத்துமீறலுக்கும், கிறித்துவ மத நிறுவனங்களின் ‘கருணை வழியும்' தொண்டூழியத்திற்கும் இடையில் அறமற்ற வகையிலான அந்தரங்க அரசியல் உறவு பின்னப்படுகிறது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்தபோதும், அரசின் நேரடித் திட்டமாக, செயல்பாடாக எந்தவொரு சமூக நலப் பணியும் உருப்பெற – இத்தகைய தன்னார்வ நிறுவனங்களே பரிசோதனைக் களங்களாக, பயிற்சிக் கூடங்களாக அன்றைக்கும் இன்றைக்கும் செயல்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வகையில் தோட்டத் தொழிலாளர் சட்டங்கள் முறைப்படுத்துதலுக்குப் பிறகு, 1930 இல் 330 பள்ளிக்கூடங்கள் தோட்டத் தொழிலாளர் குழந்தைகளுக்கென இயங்கத் தொடங்கின. 1938 இல் 547 ஆகவும், 1947 இல் 741 ஆகவும், மலாயா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட 1957இல் 888 ஆகவும், 1970களில் ஆயிரத்தைக் கடந்தும் வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை – இன்றைக்கு 523 பள்ளிகள் என்பதாகச் சுருங்கிப் போனது. இப்பள்ளிகளில் 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் எண்ணிக்கையின்றியே மூடப்படுவதாக மலாயா அரசு கூறி வந்தாலும், இயங்கி வந்த பள்ளிகளுக்குத் தேவையான அளவில் கட்டடங்கள், பிற வசதிகள், நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படாததே காரணமென, தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் நலனுக்காகப் போராடி வருபவர்கள் கூறுகின்றனர். மய்ய அரசின் கல்வி நிதியில் 95 சதவிகிதம் மலாய் மொழிவழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கும், 1.5 சதவிகிதம் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படுவதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எஞ்சியிருக்கும் 523 தமிழ்ப் பள்ளிகளும்கூட, தேவையான அளவு வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக, மலாயா அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்த ம.இ.கா.வும், அதன் தலைவர்களும் குறிப்பாக டத்தோ சாமிவேலுவும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவாதது மட்டுமல்ல, சரிபாதியாக மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர். இவர்கள் மீது குற்றம் சுமத்த கீழ்வரும் எடுத்துக்காட்டு ஒன்றே போதுமானது. முன்னாள் மலாயா பிரதமர் மகாதீர் முகமது, அனைத்துப் பள்ளிகளிலும் கணிதம், அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்பிக்க வேண்டுமென கல்வித் துறைக்கு ஆணையிட்ட போது, சீன சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் தாய்மொழியில்தான் இப்பாடங்களைக் கற்றுத்தர வேண்டுமெனப் பல்வேறு தளங்களில் இருந்து கோரிக்கை விடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் ம.இ.கா. தலைவர்கள், அனைத்து தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, இப்பாடங்களை ஆங்கில வழியிலேயே பயிற்றுவிப்பதை வரவேற்பதாகத் தீர்மானம் இயற்றி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை அனுப்பினர். ஆக, தாய்மொழி வழிக் கல்வியை ம.இ.கா. தலைவர்களும், மலாயா வாழ் படித்த நடுத்தர வர்க்கத்தினரும் புறக்கணிப்பதன் விளைவாகவே – தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுவதும் தமிழரின் குடியேற்ற உரிமைகள் நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்களில் செல்வந்தர்களும் போதிய வாய்ப்புகள் பெற்ற நடுத்தர வர்க்கத்தினரும் மலாயா தேசியப் பள்ளிகளில் தம் குழந்தைகளுக்கு இடம் தேடிக் கொள்வதால், வசதி வாய்ப்பற்ற பிற தமிழர்கள் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். மேல்தட்டு வர்க்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரின் அரசியல் கட்சிகள் இந்தியாவைப் போலவே, தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு வேட்டையாடிவிட்டு, உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நடுத்தெருவில் வீசிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1983 ஆம் ஆண்டில் மலாயா, பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்த போது, அரசு அதிலிருந்து மீள பல்வேறு திட்டங்களைத் தீட்டியது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த டத்தோ சாமிவேலு, தமிழர்களின் பொருளாதார தற்சார்பை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு, ‘மைக்கா ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்திற்கான பங்குத் தொகையாக தமிழர்களிடமிருந்து 10 கோடி வெள்ளி (மலாயா பணம்) திரட்டப்பட்டது. தொடக்கக் காலத்தில் லாபத் தொகையில் பங்குதாரர்களுக்கு உரிய தொகையை அளித்த இந்நிறுவனம், காலப்போக்கில் ஏமாற்றத் தொடங்கியது. கையிலிருந்த சொற்பப் பணத்திலும், வீடு மற்றும் நகைகளை விற்றும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சாமானிய தமிழர்களுக்குக் கிடைத்ததோ அடி உதைதான். ம.இ.கா. விலுள்ள குண்டர்களின் பாதுகாப்பில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக செயல்படுபவர் சாமிவேலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சுரங்கத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் முன்னாள் மலாயா பிரதமர் துன் அப்துல் ரசாக், 1974ஆம் ஆண்டில் ‘தோட்டத் தொழிலாளர் வீட்டுடைமைத் திட்டம்' ஒன்றைத் தொடங்கி, அரசின் பங்காக 1 கோடி வெள்ளிப் பணத்தையும் இத்திட்டத்திற்கென ஒதுக்கினார். ஆனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ம.இ.கா.வும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும், காலனிய ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலேய முதலாளிகளிடமிருந்து பெருந் தோட்டங்களை வாங்கிய மலாய – சீன – இந்திய முதலாளிகள் காலப்போக்கில் இத்தோட்டங்களை பலநூறு துண்டு நிலங்களாக்கியதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சிவப்பு அடையாள அட்டை' எனும் வேலை அனுமதிச் சான்று வாங்கி, அன்றாடக் கூலிகளாகத் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். அடையாள அட்டை பெற இயலாத தொழிலாளர்கள் பலருக்கு, இந்தியாவிற்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ம.இ.கா.வின் தேசியத் தலைவராக இருந்த துன் சம்பந்தன் முன் முயற்சியில், ‘தேசிய நலநிதிக் கூட்டுறவுச் சங்கம்' தொடங்கப்பட்டது.இச்சங்கத்திற்கென திரட்டப்பட்ட பல லட்சம் வெள்ளிப் பணத்தில் சில தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. ஆனால், தேசியநலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் ம.இ.கா. அரசியல்வாதிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கு இச்சங்கம் வழிகோலுவதை சீரழித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது மட்டுமல்ல, நீண்ட காலமாக தோட்டங்களில் கொத்தடிமைகளாக உழன்று உடல் நலிவுற்றவர்கள், வயோதிக நிலையிலும் பணியின்போது ஊனமுற்றும் வேலை செய்ய இயலாதவர்கள் என, உழைப்பில் ஈடுபடுத்த ‘தகுதியற்ற'வர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்ப எண்ணிய பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள், 1907ஆம் ஆண்டு இவர்களுக்கென ‘தமிழர் குடியேற்ற நிதியம்' என்ற திட்டத்தைத் தொடங்கினர். 1958இல் இது ‘தென்னிந்திய தொழிலாளர் நிதி வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் 1999இல் இவ்வாரியத்தைக் கலைத்துவிட அரசு முடிவெடுத்தது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அதே ஆண்டு சூலை 13இல் பெரும்பான்மையினர் ஆதரவோடு இவ்வாரியத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மலாயா அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு ம.இ.காவும் சாமிவேலுவும் துணை போயினர் என்பதும் வரலாறு. இவ்வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமல்ல,&amp;nbsp;இன்றைக்கு வானுயர்ந்த கட்டடங்களோடும், விரிவடைந்த கட்டமைப்புகளோடும் செழித்து வளர்ந்து நிற்கும், மலாயாவின் வளர்ச்சிப் பணிகள் அனைத்திலும் கடும் உடல் உழைப்பாளர்களாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்வாதாரங்கள் நசுக்கப்பட்டு, எதிர்காலம் இழந்து நிற்பவர்கள் தமிழர்களில் அடித்தள, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே. இவர்களின் வாழ்வாதாரங்கள், தொழிற்சங்க உரிமைகள், குடியேற்ற நலன்கள் ஆகியவற்றைப் புதைகுழிக்கு அனுப்ப, மலாய அரசாங்கத்திற்குத் துணை நிற்பவர்கள் மலாய் மண்ணின் மக்களோ, சீனர்களோ அல்ல – பிழைப்பு வாதத் தமிழர்களே!&amp;nbsp;மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ, பிற தெற்காசிய நாடுகளிலோ குடியேறியிருக்கும் சீன மக்கள், எந்தவொரு நாட்டிலும் தம் இனத்தின் அடிப்படை நலன்களைக் காவு கொடுக்கும் விதத்தில் சிந்திப்பதும் செயல்படுவதும் இல்லை. சீன சமூகத்தின் இன ஓர்மையும் போர்க் குணமும்தான், இன்றைக்கு ஆசியக் கண்டத்தின் ஏகாதிபத்தியமாகவும், அமெரிக்காவின் உலகளாவிய அத்துமீறலுக்கு அச்சுறுத்தலாகவும் சீன நாட்டை வளர்த்தெடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் அரசியல் பலமாக ‘செஞ்சீனம்' பாதை வகுத்திருந்தாலும், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியப் பண்புகளில் சீன இனத்தின் ஓர்மை பொதிந்துள்ளது. செம்படையணி உருவாக்கப்பட்டதும், மக்கள் சீனம் மலர்ந்ததும் இப்பாரம்பரியப் பண்புகளின் விழுமியங்களிலிருந்துதான். மா சே துங் ஒரு தனிநபரோ அல்லது ஒரு பெயர்ச் சொல்லோ அல்ல. மாறாக, மரபார்ந்த சீன சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்; வரலாற்றுச் செழுமையில் முகிழ்த்த அச்சமூகத்தின் அரசியல் குறியீடு; வரலாற்றைக் கடக்க விழைந்த ஓர் இனத்தின் தலைமைத்துவம் அவர் என்பது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகெங்கிலும் வாழும் 130 கோடி சீன மக்களின் ஒரு குறியீட்டு அடையாளமாக மாவோவைக் குறிப்பிட இயலுமெனில், ஏறத்தாழ 10 கோடி அளவேயான உலகத் தமிழினத்தின் குறியீட்டு அடையாளம் யார்? என்ன? எது? ராவணன், திருவள்ளுவர், ராஜராஜ சோழன், கலைஞர் கருணாநிதி, கற்பு, பனைமரம், எட்டுமுழ வேட்டி, நெல்லுச்சோறு, துரோகம், நக்கித் தின்னும் பிழைப்புவாதம் என யாதாகிலுமொன்றா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நூறு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்களினம் உலகில் முக்கியத்துவம் பெறுவது, வியப்புக்குரிய ஒன்றல்ல என எளிமைப்படுத்திவிட முடியாது. எண்ணிக்கை என்பது வரலாற்றைத் தீர்மானிப்பது அன்று. உலகில் எந்த மூலையில் வாழ நேர்ந்தாலும் நூறு கோடி சீனர்களும் தங்கள் தாய்மொழியிலேயே சிந்திக்கவும், பயிலவும், பரிமாறிக் கொள்ளவும், செயல்படவும் விழைகிறார்கள். பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் என சீனர்கள் தழுவியிருக்கும் மார்க்கங்கள் அவர்களின் அரசியல் பாதைகளில் தடையணிகளாக நிற்பதில்லை. ஆனால் சீனர்களின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் கூட இல்லாத தமிழ்ச் சமூகம், வாழ நேர்ந்த இடங்களிலெல்லாம் வதைபட்டுச் சாகிறதே என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன ஓர்மைக்கான முன் நிபந்தனைகளை, இன வீழ்ச்சிக்கான காரணிகளை ஆய்வதிலிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இக்கட்டுரையிலேயே ஓரிடத்தில் குறிப்பிடுவது போல, தமிழர்கள் தம் முதன்மையான அடையாளமாக மதங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதிலும் பவுத்தம் உட்பட பார்ப்பனியச் சாரம் பிழியப்படாத தனித் தன்மையுடன் எந்தவொரு மார்க்கமும் இங்கு இல்லை. இந்து மதம் கற்பிக்கும் ஏற்றத் தாழ்வுகளை, சாதிய மன உணர்வை இஸ்லாமியர்கள் கூட, அறிந்தும் அறியாமலும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே நடைமுறை உண்மை. தாய்த் தமிழகத்திலோ, இலங்கையிலோ, முஸிலிம்கள் ‘தமிழர்' எனும் அடையாளத்துள் இணைய மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டுபவர்கள், பெரும்பான்மைத் தமிழர்கள் இன அடையாளத்தை விட, ‘இந்து' மத அடையாளத்தின் வழியாகவே அறியப்படுகிறார்கள் என்பதை மறுக்க இயலுமா? மலாயாவில் கூட ‘இந்துத் தமிழர்கள்' என்றே தமிழர்கள் தம்மை அறியப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மொழி வழியிலான இன அடையாளம் கூர்மையடையாமலிருக்க, முனை முறிக்கும் வேலையை இந்து மதமும் பார்ப்பனியமும் சூழ்ச்சி செய்து வருகின்றன. இவையே தமிழர்களை நெறிப்படுத்தும் ஆன்மீகமாகவும், வழிநடத்தும் அரசியலாகவும் இருக்கின்றன. பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்வியல் பண்புக் கூறாக பிழைப்புவாதத்தை ஊட்டி வளர்த்து வருவதையே பார்ப்பனியம் செய்து வருகிறது. சங்ககாலப் புறநானூற்று வீரம் பிற்காலச் சோழர்களின் அந்தப்புரங்களில் நிர்மூலமாக்கப்பட்டதற்கும், கடையேழு வள்ளல்களின் அகநானூற்று எச்சங்கள் ஆயிரமாண்டுக்கால சூழ்ச்சிகளில் திரிந்து நச்சாக்கப்பட்டதற்கும் – தமிழரின் உதிரத்துள் ஊறித் ததும்பும் பார்ப்பனியக் கூறுகளே காரணமென்பதை யாவரும் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="highslide" href="http://www.keetru.com/images/stories/leaders/Annadurai.jpg" onclick="return hs.expand(this)"&gt;&lt;img align="right" alt="Anna" border="0" src="http://www.keetru.com/images/stories/thumbs/L2hvbWUvY29udGVudC9rL2UvZS9rZWV0cnVjb20vaHRtbC9pbWFnZXMvc3Rvcmllcy9sZWFkZXJzL0FubmFkdXJhaS5qcGc=.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையிலோ, மலாயாவிலோ அல்லது குடியேறிய பிற தேசங்களிலோ மாறுபட்ட இட – காலச் சூழல்களில் வாழ்வதனாலேயே, பன்முகப்பட்ட பண்புக் கூறுகளைத் தாங்கி நிற்கும் தமிழினம் என தற்பெருமை கொள்வதற்கு ஏதேனும் மிச்சமிருக்கிறதா? தாய்த் தமிழகத்தின் மிச்ச சொச்சங்களாகத் தான் உலகத் தமிழினத்தின் பன்முகங்களையும் காண முடியும். அனைத்து முகங்களிலும் அதனதற்கே உரித்தான நயவஞ்சகமும் துரோகமும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. உலகத் தமிழினத்தை இணைக்கும் உறவுப் பாலம் பிழைப்புவாதமெனும் பார்ப்பனியக் கண்ணிகளால் கட்டியெழுப்பப்பட்டதே. ஈழத் தமிழரின் அறுபதாண்டுகாலப் போராட்டங்களில் பிடுங்கிய வரை தனக்கான லாபமென்ன என கணக்குப் பார்ப்பவர்களே இங்கு ஏராளம். ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் இப்படிப்பட்டவர்களின் ஊழலிலும் காட்டித் தருதலிலும்தான் ரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உ.வே.சாமிநாதய்யரில் தொடங்கி ‘மைக்ரோசாப்ட்' அல்லது ‘நாசா'வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் வரை, தமிழர்களின் உச்ச அடையாளம் என அறியப்படுபவர்களில் சரிபாதிப்பேர் பார்ப்பனராகவே இருக்கின்றனர். தமிழர்களாக மட்டுமல்ல, எந்தவொரு மொழிவழி இன அடையாளத்துள்ளும் பார்ப்பனர்கள் தம்மைக் குறுக்கிக் கொள்வதில்லை. ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்த ஏனைய தமிழர்களின் உச்ச அடையாளங்கள் யாவரும் பார்ப்பனர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் பயணித்தவர்களே. பார்ப்பனியக் கறைபடியாத தனித்தவொரு தமிழின அடையாளமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்களையும் தமிழர்கள் புறந்தள்ளியே வைத்திருக்கின்றனர். உயர்திணையோ அக்றிணையோ, ஒட்டுமொத்தத் தமிழினமும் இவ்விடயத்தில் ஒருமுகப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராமன் வழிபடப்படுகிறான்; ராவணன் தூற்றப்படுகிறான். கம்பன் கொண்டாடப்படுகிறான்; வள்ளுவன் பிழைத்தால் போதும் என்றிருக்கிறான். மரபார்ந்த அறநெறிகள் வீழ்த்தப்படுகின்றன; மநுதர்மப் போதனைகள் நடைமுறையிலிருக்கின்றன. உழவு தரிசாக்கப்படுகிறது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அரண்கள் எழுப்பப்படுகின்றன. உடல் உழைப்புக்கு பட்டினியே மீந்தது; மூளை தந்திரங்களுக்கோ இம்மை – மறுமை பித்தலாட்டங்களின் வழியே முழு நிறைவான வாழ்வு கொழுத்தது. சென்னை, நவநாகரிக மனிதர்களுக்காகப் புனரமைக்கப்படுகிறது; சேரிகள் நண்பகலில்கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. மலாயாவில் தமிழ்ப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன எனில், இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? இந்தியாவில் ஆங்கில வழியில் கல்வி பயில்பவர்களில் மும்பை (மகாராட்டிரம்), டெல்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களே 60 சதவிகிதம் என்ற அளவைக் கடந்து முன்னணியில் இருக்கின்றன. அதிலும் தமிழகம் 2010 ஆம் ஆண்டில் முதலிடம் பெறப் போவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தலித் மாணவர்களும் மட்டுமே, இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சாதி இந்துக்களில் பெரும்பான்மையினர், ஆங்கில மோகத்திலும் இறக்குமதியாக்கப்பட்ட பண்பாட்டு நுகர்வுகளிலும் வெறி கொண்டு அலைகின்றனர். பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து அதிகார மய்யங்களையும் ஆளும் வர்க்க லாபங்களையும் தமக்குள் பங்கிட்டுக் கொள்கின்றனர். தேவைப்படின், பார்ப்பனர்களிடம் ஆலோசனைகளும் பெற்றுக் கொண்டு எதிர் வரும் தலைமுறைகளுக்கும் செல்வம் சேர்க்க, ஏய்த்துப் பிழைக்கும் புதிய உத்திகளை உருவாக்கி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா, டத்தோ சாமிவேலு, கலைஞர் கருணாநிதி இவர்களைப் போன்றவர்கள் சாதி இந்துக்களின் குறியீட்டு அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் ‘தாழ்ந்த தமிழகமே!' என விசனப்படுவதும் பொருளற்றதாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கும்பகோணம் கூரைக் கொட்டகையில் பள்ளிக் குழந்தைகள் எரிந்து சாம்பலானது, தமிழனைப் பொருத்தவரையில் ஒரு விபத்து மட்டுமே. திட்டமிடப்படும் படுகொலை களை, எதிர்பாராத விபத்துகளாக தமிழர்கள் கடந்து செல்வதால்தான், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளும், தன்னாட்சி பல்கலைக் கழகங்களும், மென்பொருள் பூங்காக்களும் தமிழ்த் திருநாட்டின் பெருமைகளாக வளர்ந்து நிற்கின்றன. சுரண்டிக் கொழுப்பவனும் ஏமாற்றிப் பிழைப்பவனும் சொந்த சாதிக்காரனாக இருந்தால் போதும், அவனவன் சாதிக்கூட்டம் அணி திரண்டு பின்னால் நிற்கும். ஏமாற்றப்பட்டவன் இன்னொரு சாதிக்காரனாக இருக்க வேண்டுமென்பது கூட அவசியமல்ல; வலுத்தவன் பிழைத்து விட்டான். சாதிக் கொடி பறக்கிறதா? அது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்ச் சமூகம் கடைந்தெடுத்த கழிசடைத்தனத்தை உயர்தொழில் நுட்பமாக வளர்த்தெடுத்துள்ளது. படிநிலை அடுக்குகளில் எவன் சாதிக்கு எந்த இடம் என்பதில்தான் சாதி இந்துக்களுக்குள் போட்டியே நிலவுகிறது. ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற பூச்சாண்டிக்கெல்லாம் சாதித் தமிழன் அச்சம் கொள்வதாக இல்லை. ‘எவன் செத்தால் எனக்கென்ன?' என்பதே ஒவ்வொரு தமிழனின் தன்னல தம்பட்டமாக ஒலிக்கிறது. ரத்தமும் சதையுமாகக் கண்முன் நிகழ்ந்து முடிந்த இந்நூற்றாண்டின் மாபெரும் துயரமாக, தம் இனத்தின் அழிவுப்படலம் இருந்தது என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரூபாய் அய்நூறுக்கும் ஆயிரத்திற்கும் தம் அடிப்படை உரிமைகளை, அவமானகரமான முறையில் விற்றுக் கொண்டிருந்தது தாய்த் தமிழினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன வீழ்ச்சிக்கான, அவலங்களுக்கான, இழிவுகளுக்கான மூல காரணிகளைத் தேடிப் புறப்பட்டால், அது ஆயிரமாண்டுக் கால நெடும்பயணமாக நீள்கிறது. பொன் (பெண்ணாகவும் இருக்கலாம்)னுக்கும் பொருளுக்கும் காட்டித் தந்த முதல் காலம் எதுவென்று அறுதியிட முடியாதுதான். ஒருவனையொருவன் அடிமை கொள்ள எத்தனித்து, சூழ்ச்சி செய்து, போர் தொடுத்து, இன்ன பிறவற்றிற்குப் பின், அடிமை வாழ்வின் சுக துக்கங்களில் தோய்ந்து தேர்ந்து, அதுவே வரலாற்றின் ஓர் நாள் அற்புதமான கோட்பாடென்று தமிழன் கண்டடைந்திருப்பானோ? பார்ப்பனனுக்கு சாதித் தமிழனும், சாதித் தமிழனுக்கு ஆதித் தமிழனும் என்று ‘எழுதப்பட்ட' ஒப்பந்தமாக இந்த அதியற்புதக் கோட்பாடு உயிரோடிருக்க, ‘உணர்ச்சி கெட்ட தமிழனே' என உசுப்பேற்றும் மேடைக் கச்சேரி இன்னும் முடிந்த பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கச்சேரி என்றவுடன் பார்ப்பன இசைக் கச்சேரியா, தமிழின தலைவரிசைகளின் லாவணிக் கச்சேரியா? என்ற குழப்பத்தின் நடுவில் ஒளிவீசும் கீற்றென ‘பேரறிஞர்' அண்ணா நம் ஞாபகங்களில் எழுகிறார். தமிழ்த் தேசிய உணர்ச்சிக் காவியத்தின் தலைமகன் இவரன்றோ எனும் விழிப்பில் காலம் நம்மை நிலைநிறுத்துகிறது. சொற்கள் எனும் லாவகம் பேச்சாகப் பரிணமித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நவதமிழர் காலத்தில் ‘வாய்ச் சொல் வீர'மென கதிர் முற்றி சாய்ந்து கிடக்கிறது. களத்தில் அடித்துப் பார்த்தால், விதை நெல்லுக்கும் தேறாத விளைச்சலாகத்தான் இருக்குமென உறுதிபடக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரியாருக்கு துரோகமிழைத்து கருஞ்சட்டை இயக்கத்திலிருந்து அண்ணா வெளியேறிய போது, தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏதுமில்லை. தம் ஆடைக்கு ஏற்ற அணிகலன் என சூடிக் கொண்டனர். வாராது வந்த மாமணியென, தாம் தேடிக் கொண்டிருந்த தலைவனாக முடிசூட்டி மகிழ்ந்தனர். தமிழர்தம் பார்ப்பனிய சமரசங்களின் மேதாவிலாசம் அறிஞர் அண்ணா என நாம் குற்றம் சாட்டுவதை, சாதித் தமிழர்கள் ஒருவேளை பெருமிதமாகவும் கொள்ளக்கூடும்! ஏனெனில், அண்ணா வகுத்துத் தந்த பாதையில் பயணித்துதான் ஆதிக்க சாதித் தமிழர்கள் ஊழலிலும் லஞ்ச லாவண்யத்திலும் ஊறித் திளைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘அண்ணாயிசம்' வெற்றிகரமான சூத்திரமாக திராவிடக் கட்சிகளுக்கு இருப்பதை, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, கோட்டையில் கொடி நாட்டலாம் என்ற நப்பாசையை – சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் அணி திரண்ட ஆதித் தமிழர்களிடம் விதைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். இது போக முடியாத மட்டுமல்ல, போகக் கூடாத ஊருக்கும் வழிகாட்டும் பரப்புரை என்பதை – ஆதிக்க சாதித் தமிழர்களால் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் உழலும் மூத்தகுடித் தமிழர்கள் உணர வேண்டும். மேடையிலிருந்து நாற்சந்தி வரை வாய்ச்சவடாலுக்கு சீழ்கையடித்தும் போக்கிரித்தனத்திற்குப் புறமுதுகு காட்டியும் பிழைத்துக் கிடக்கிறது கனகவிஜயனைக் கல் சுமக்க வைத்த வீரப்பரம்பரை (!) கல்வியில் சிறந்தோங்கும் தமிழினம், அறிவை காலனிய காலத்திற்கு முன்பே வந்தேறிகளிடம் அடகு வைத்து விட்டு, அடிமைத் தனத்தை புத்திசாலித்தனம் என தன்னைத்தானே உச்சிமோந்து கொள்கிறது. கல்லாதவனின் முரட்டுத்தனத்தைவிட, கற்றவனின் கயமைத்தனமும் ஒதுங்கிப் போதலும் ஆபத்தானவை. அய்யோவென்று போகிறானோ? இல்லையோ? சூதும் வாதும் செய்வது, படித்தவனின் முதல் தகுதியாகிவிட்டது. படித்த தமிழனுக்கோ இதுவே முதன்மைத் தகுதியாகவுமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்களைக் குற்றம் கூறுவதாக முற்போக்காளர் கருதுவர். இனத்தைப் பழிப்பதாக இனவாதிகள் குமுறுவர். பக்கச் சாய்வென சார்புநிலை கொண்டோர் தூற்றுவர். ஆனால் வலியையும் வேதனையையும் அடிபட்டவனே உணர முடியும் என்பதே யாவருக்குமான நம் பதிலாக இருக்கும். பன்னெடுங்கால தலைமுறை வரலாற்றில், ஒரே இனத்துள் ஆதிக்குடி மக்களை ஆதிக்க சாதிக் குடிகள் என்றென்றைக்கும் தம்மை அண்டிப் பிழைக்க வேண்டுமென்ற, மனப்பிரயாசைதானே இத்தனை அவலத்திற்கும் வழி கோலுகிறது. இலங்கையிலாயிலும், மலாயாவிலாயிலும், தாய்த் தமிழகத்திலும் கூட அடிப்பøடக் கல்வி பெற அடித்தள மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருப்பதற்கும், ஆரிய – திராவிட இனப்பகையே காரணமெனும் அரதப் பழசான பரப்புரையில் தப்பித்துக் கொள்கிறது சாதித் தமிழினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒடுக்கப்பட்டவனிடம் மிச்சம் மீதியிருக்கும் குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் ‘சந்தை விலை' ஒன்றை தானே நிர்ணயித்து வாங்கி, ‘ரியல் எஸ்டேட்' வணிகம் செய்கிறது, இனத்திற்குள் ஓர் உளுத்தர் கூட்டம். நிலம் இழந்த அல்லது நிலமற்ற ஏழைத் தமிழனுக்கு, அபகரித்த சாதிகளின் ஆட்சி அதிகாரம் தரிசுக் காடுகளைக்கூட தாரை வார்க்கப் போவதில்லை. ஏனெனில் ஊழலில் திரட்டிய பணத்திற்கு நிலம் வாங்க, ஊரெல்லாம் – தமிழ் நாடெல்லாம் அலைகிறது இனத்துள் ஓர் வர்க்கம். மண்ணெல்லாம் இன்றைக்குப் பொன். சென்னை மட்டுமல்ல, அழகுபடுத்த முடிவெடுத்தால் எல்லா நகரங்களுமே அழுக்குகளைக் கழுவ வேண்டும்; அழுக்கானவர்களைக் களைய வேண்டும். இந்திய நகரங்களின் அழுக்குகள் சேரிகள். இந்து நாட்டின் – சமயத்தின் – பண்பாட்டின் அழுக்குகள் ஒடுக்கப்பட்ட மக்கள். இது தானே வழமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்கள் இந்துக்கள் எனில், அம்பேத்கர் அறிவுறுத்தியவாறு ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்லர். இந்துக்களாக தமிழர்கள் சீரும் சிறப்புமாகப் பிழைக்கும் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதித் தமிழர்களாக அறியப்படினும் ‘தமிழினம்' என உறவு கொள்வது எங்ஙனம்? ஊருக்கு இளைத்தவன் எந்தக் கோயிலிலும் ஆண்டியாகத்தான் இருக்க முடியும்; எந்த இனத்திலும் ஒடுக்கப்பட்டவனாகத்தான் இருக்க நேரிடும்; எந்த நாட்டிலும் வாழத் ‘தகுதி'யற்றவனாகத்தான் உழலக்கூடும் என்பது பார்ப்பனிய – முதலாளித்துவ நீதி. எனில், இந்துவாகப் பிறக்க நேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மனிதன் தன்னை இழிவுபடுத்தும் மதத்திற்கும், சாதிப் பிணக்குகளிலும் வர்க்கச் சுரண்டலிலும் தன்னைக் கீழ்மைப்படுத்தும் இனத்திற்கும், அதன் மூலதனக் குவிமய்யத்திற்கும் எதிராகப் போராடுவதென்பது வரலாற்றின் இயங்கியல் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையின் வவுனியா நிலப்பரப்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் பேரினவாத ராணுவ பயங்கரவாதத்தின் கீழ் முள்வேலிக்குள் அகதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தளை ஓர்மைப்படாத தமிழினத்தின் மீதான புறநிலைக் குறியீடு. அகநிலையில் தமிழரைப் பிணைக்கும் முள்வேலியாக, சாதியம் கால எல்லைகளைக் கடந்து நிறுவனப்பட்டுள்ளது. உலகத் தமிழினத்தை இணைக்கும் இக்குறியீட்டின் தத்துவப் பின்புலமாக உரமிடப்பட்டிருப்பது பார்ப்பனியம். தமிழினத்தின் பிழைப்புவாதத்திற்கு, சோரம் போதலுக்கு, ஆதிக்கசாதி அதிகாரத்திற்கு அரணாகியிருக்கும் சாதியம் அடிமைத் தளையே என உணர வேண்டிய கடப்பாடு சாதித் தமிழர்களுக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த முள்வேலியை தங்கக்கூண்டு என பார்ப்பனியம் பசப்பும். ஈழத்தின் அகதி முகாம்கள் நாம் கவலை கொள்வதற்கு ஏதுமின்றி சிறப்பாகவே இருக்கின்றன என ‘இந்து' ராம் சாட்சியம் தரவில்லையா? விடுதலை என்பது, ஒருவன் இன்னொரு மனிதனை ஒடுக்காமல் இருப்பதே. ஒடுக்குகிறவனுக்கு இந்த உண்மையை ‘உணர்த்தும்' கடமை, சாதி – இன – வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு ஆளான ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. செயற்கரிய செய்யப்படும் இக்கடமையின் வழியேதான் பார்ப்பனிய ‘தங்கக் கூண்டு' உடைபடும். தமிழகத் தாயகத்திலோ, இலங்கையிலோ, மலாயாவிலோ, இன்ன பிற தேசங்களிலோ பரவி வாழும் தமிழின மக்களைப் பிணைக்கக் கூடாத, இம்முள்வேலி அறுபடும்போது தான், வன்னியில் மட்டுமல்ல, ஈழ நிலத்தையே தளைப்படுத்தியிருக்கும் பருண்மையான முள்வேலியும் வெடித்துச் சிதறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;- கா.இளம்பரிதி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-8884960562951704303?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/8884960562951704303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=8884960562951704303' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8884960562951704303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8884960562951704303'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2010/10/3.html' title='தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 3'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-7215513184131718601</id><published>2009-09-22T00:57:00.003+05:30</published><updated>2009-10-22T01:00:00.470+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 2</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பகுதி - 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="contentpane"&gt;மலாயா தீபகற்பத்தில் குடியேறிய இந்திய வம்சாவளியினரின் குடியேற்றப் பின்புலத்தில் மறைக்கப்பட முடியாத வரலாற்றுச் சுவடுகளாக, வறுமைக் கொடுமைகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் சம விகிதத்தில் பதிந்துள்ளன என்பதே, இக்கட்டுரையின் இதுவரையான செய்திகளின் சாரமாகும். மலாய பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஆர். ராமசாமி, "இந்தியத் தமிழர்களின் மலாயக் குடியேற்றத்தில் சாதியின் பங்கு' என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி உள்ளார். இலங்கையில் ஈழ மக்களின் விடுதலைக் கான ஆயுதப் போராட்டம் தலை தூக்காத கால கட்டத்தில், அம்மண்ணில் நிலவிய சாதிக் கொடுமைகளையும், அதை எதிர்த்து நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களைப் பற்றியும் – இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் எவரும் மறுக்க முடியாது.  &lt;a href="http://www.keetru.com/images/stories/people/malaysia_340.jpg" class="highslide" onclick="return hs.expand(this)"&gt;  &lt;img style="" alt="Dalit lady in Malaysia" src="http://www.keetru.com/images/stories/thumbs/L2hvbWUvY29udGVudC9rL2UvZS9rZWV0cnVjb20vaHRtbC9pbWFnZXMvc3Rvcmllcy9wZW9wbGUvbWFsYXlzaWFfMzQwLmpwZw==.jpg" align="right" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="contentpane"&gt; &lt;/span&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;இன்றைக்கும் கூட, ஈழத் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் சாதி, சமய, சடங்குகளைக் கைவிடாத நிலையிலேயே இருப்பதாகப் பல ஆதாரப்பூர்வ செய்திகள் உள்ளன. ஈழ சமூக வாழ்க்கையிலும் சரி, விடுதலைப் போராட்ட அரசியலிலும் சரி, யாழ்ப்பாண வெள்ளாள சாதியினரின் தலைமைத்துவம் – அதிகாரத்துவம் – ஒடுக்குமுறை ஆகியன பற்றி நேர்மையாக உரையாடல் நிகழ்த்தும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது. ஆனாலும் இந்தியõவைப் போல, தமிழ் நாட்டைப் போல "எங்கட நாட்டில் சாதிப் பிரச்சனை இல்லை' என்பதாகவே இலங்கைத் தமிழர்கள் பலரும் கதைத்து வருகின்றனர்."இலங்கையைப் போலவே, மலாயாவிலும் தமிழர்கள் இன ஒற்றுமையோடுதான் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பாகுபாடெல்லாம் எங்கள் நாட்டில் இல்லை' என்பதாகக் கூறும், மலாய இந்திய வம்சாவளியினர் அதாவது, இந்து தமிழர்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;1920களில் பிழைப்புக்காக பெருமளவில் குடியேறத் தொடங்கிய அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1980களில் மலாயாவில் சாதிச் சங்கங்கள் முளைவிடத் தொடங்கின. தமிழகத்தைப் போலவே, மலாயாவிலும் "மலேசிய முக்குலத்தோர் பேரவை', "மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம்', "மலேசிய யாதவர் சங்கம்' என ஆதிக்க சாதி சங்கங்கள் கட்டப்பட்டன. ஆகஸ்ட் 11 மற்றும் 12, 2007 ஆகிய நாட்களில் பினாங்கு நகரில், மலேசிய முக்குலத்தோர் பேரவையின் "பத்தாவது தேசியப் பேராளர் மாநாடு' முன்னாள் இந்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் சிறப்பாளராகக் கலந்து கொள்ள நடைபெற்று முடிந்தது. திருநாவுக்கரசர் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். இது போன்ற ஒரு மாநாட்டில் இதற்கு முன்னர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் கெடா மாநில முக்குலத்தோர் சங்கம் "முத்துராமலிங்கத் (தேவர்) தின் 95 ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்பு மலர்' வெளியிட்டு, சாதிப் பெருமைகளைக் கொண்டாடியது.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;"மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் புதிய செயலவை தேர்வு' ("மக்கள் ஓசை' 27.4.2007), "சிலாங்கூர் முத்துராஜா வழியினர் சேவை அலுவலகம்' திறக்கப்பட்டது, "உலுதிராமில் மருதுபாண்டியர்கள் குருபூஜை' ("மலேசிய நண்பன்' 27.10.2007), "வன்னியர் கூட்டுறவு கழகத்திற்கு பங்குப் பணம் வழங்குதல்' ("மலேசிய நண்பன்' 15.8.2007), "மலேசிய சம்புகுல சத்திரியர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுக் கூட்டம்' ("தமிழ் நேசன்', 23.9.2006), "உலுதிராம் சிறீகருமாரி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் விழா' "போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!' ("மலேசிய நண்பன்' 31.10.2007) என செய்தித் தாள்களும் சாதி வளர்க்கத் துணை புரிந்து வருகின்றன.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியன உத்தரவாதம் செய்யப்பட்டு விட்டால், அவனுக்கு வாழ்வின் அடுத்த நிலையாக லவுகீகங்கள் தேவைப்படுகின்றன. அவ்வகையில் ஒரு சராசரி தமிழனின் லவுகீக வாழ்வு – கோயில் வழிபாடு, திருவிழா, களியாட்டம், தமிழ் சினிமா ஆகியவற்றிலேயே லயித்துக் கிடக்கிறது எனச் சொன்னால், எளிமைப்படுத்துவதாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நவீன கால தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் குறித்து நாம் சற்றே சிந்திக்க முற்பட்டால், இவ்வகையான எளிமைப்படுத்துதலைக் கடந்து சமூகம் எங்கே வளர்ந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக – "இந்து தமிழர்'களாகவும் "சாதித் தமிழர்'களாகவும்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கிற தமிழர்களின் பெருமை இருக்கிறது. பெருந் தெய்வக் கோயில்களும் அவற்றில் பூசனை செய்ய குருக்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களும், வீதிதோறும் சிறு தெய்வக் கோயில்களும் அவற்றில் ஆண்டுதோறும் கொண்டாட்டங்களும் இல்லாமல் – இன்றைய உலகியல் தமிழன் எங்கும் இல்லை.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;மலாயாவில் நாகரிகப் பெண்கள் அணியும் மேலாடையில் அனுமன் உள்ளிட்ட சில உருவப்படங்களை (வர்த்தக நோக்கிலும் ஆன்மீகம்) அச்சிட்டு துணிக்கடைகளில் விற்பனை செய்து வந்தனர். இந்து மத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டதாக, பல திசைகளிலிருந்தும் கொதித்து எழுந்து விட்டனர் தமிழர்கள். "சமயத்தை மதிக்காத வியாபாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்' என "பினாங்கு பயனீட்டாளர் சங்க' கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ்&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;("மக்கள் ஓசை' 12.7.2007) எச்சரிக்கை விடுத்தார். "இந்துக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அரசாங்கம் தலையிட வேண்டும்' என மகரம் எண்டர்பிரைசஸ் டத்தோ மு. வரதராஜு ("மக்கள் ஓசை' 10.7.2007) வேண்டுகோள் விடுத்தார். "தெய்வத் திருவுருவப் படங்களோடு திருவிளையாடல்கள் வேண்டாம்' என டத்தோ சுப்ரமணியம் கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைத்தார்.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;மலேசியாவின் சுதந்திரப் பொன் விழா 50ஆவது ஆண்டை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் சிறப்பு பூஜைகளும் ("தமிழ்நேசன்' 6.9.07), பத்துமலை வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகமும் ("மக்கள் முரசு' 23.9.07), "சிப்பாய் சுங்கை பீலேக்'அதிசய விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 9.9.06), சிறீ பத்திர காளியம்மன் ஆலய 27ஆவது வருடாபிஷேகத் திருவிழாவும் ("மலேசிய நண்பன்' 6.9.07), கோலாலம்பூர் சிறீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் சிறீ நாகேஸ்வரி அம்மன் ஆலய ஏற்பாட்டில் டத்தின் சிறீ இந்திராணி சாமிவேலு தலைமையில் இரண்டாயிரம் பெண்கள் ஆன்மீக பால்குட ஊர்வலமும் ("த ஸ்டார்' 30.7.07), சிறீ சுருதி மகளிர் நலமன்ற தேசியத் தலைவரும் புனித நடை ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தின் சிறீ இந்திராணி தொடங்கி வைக்க, சுமார் அய்நூறு பேர் கலந்து கொள்ளும் ஆன்மீகப் பயணமும் ("தமிழ் நேசன்' 29.3.07), ஈப்போ குங்குமாங்கி மகா காளியம்மன் ஆலயத்திற்கு சுமார் பன்னிரண்டு லட்சம் வெள்ளி செலவில் கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 7.7.06), ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் தேர்தலில் வெற்றிபெற கூச்சால் சிறீ மகா பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையும், இவ்வாலயத்தில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசை பூர்த்தியுடன் 108 சங்காபிஷேகமும் ("தமிழ் குரல்' 19.3.06) என தமிழகத்தைப் போலவே, மலேசிய மாநிலங்களிலும் தமிழர்களின் ஆன்மீகக் கொண் டாட்டங்கள் சளைத்தவையல்ல.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;இந்து சமயத்தின் தொங்கு சதைகளாக வளர்ந்து வரும் யோகா – தியான மய்யங்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் மலேசியாவிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த உலகின் ஒரு பகுதியல்ல. இந்த உலகம் என்னுடைய ஒரு பகுதியாகும்' என்ற உளறல் பேச்சுக்கெல்லாம் ஆன்மீக மடங்கள் உருவாகிவிட்டன. இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக, "இந்து சமயத்தை இழித்துப் பேசுவதா?' என மகா மாரியம்மன் தேவஸ்தானம் கண்டனம் தெரிவிக்&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;கிறது. இவருக்கு எதிராக 123 பேர் போலிசில் புகார் தெரிவித்தனர். "போலிஸ் விசாரணை வரை அனைவரும் பொறுமை காப்பீர்' என இந்து சங்கம் கோரிக்கை (12.3.07 "மக்கள் ஓசை') வைக்கிறது. ஆனால் தாய்த் தமிழ் நாடோ, இம்மூடநம்பிக்கை முரண்பாடுகளையெல்லாம் களைந்து இன்னும் முன்னேறிவிட்டது. இங்கே நடமாடும் கடவுள்கள் பலர், அங்கே இப்போதுதான் முளைவிடத் தொடங்கியுள்ளனர். நட்பு முறையில் இம்முரண்பாடுகளை இந்து மதம் (சங்கம்) தீர்த்து வைக்கும். ஏனெனில், மூடத்தனங்களே இந்து மதத்தின் மூலதனம் என்பது அறிவியல் சான்று.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;"ஆலயங்களில் பூஜைகள் மட்டுமன்றி, சமயக் கருத்தரங்கம், பாலர் கல்வி, நன்னெறிச் சொற்பொழிவு ஆகியவற்றை நடத்தி மக்களுக்கு சமயத் தெளிவு ஏற்படுத்தினால், இது போன்றவர்களிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்து சமயத்தை சிறுமைப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று சிறீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஆலய மண்டபத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் "இந்து சமயத்தைப் பற்றி ஓர் இந்துவே பழிப்பதை சில இந்துக்கள் கேட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது வேதனைக்குரியது' என்றார் தொழிலதிபர் டத்தோ முனியாண்டி என்பவர் ("மலேசிய நண்பன்' 16.3.07). மேற்குறிப்பிட்ட கருத்தாளர்களின் வார்த்தைகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவில் மத வெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்பரிவார அமைப்புகளின் கருத்தைப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன. இந்துமத உணர்வை அரசியல் நடவடிக்கைகளாக மாற்ற, இதுபோன்ற சமய சந்தர்ப்பப் பேச்சுக்கள்தான் அவர்களுக்கு உதவுகின்றன. இவர்களைப் போன்றவர்களிடையிலிருந்து தான் "இந்து நடவடிக்கைகள் குழு' போன்றவை உதித்திருக்கும் என சந்தேகிக்க இடமுண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களிடத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களிடத்திலும் மதரீதியான பிளவை ஏற்படுத்தி, இந்து உணர்வின் மேல் பார்ப்பனிய – சாதிய மேலாண்மையை நிறுவ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் உறுப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.keetru.com/images/stories/people/malaysia_400.jpg" class="highslide" onclick="return hs.expand(this)"&gt;  &lt;img style="" alt="Malaysia's tamils" src="http://www.keetru.com/images/stories/thumbs/L2hvbWUvY29udGVudC9rL2UvZS9rZWV0cnVjb20vaHRtbC9pbWFnZXMvc3Rvcmllcy9wZW9wbGUvbWFsYXlzaWFfNDAwLmpwZw==.jpg" align="left" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு சரா சரித் தமிழனின் லவுகீக வாழ்க்கை – கோயில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் ஆகியவற்றைப் போலவே பொதிந்திருக்கும் இன்னொரு அம்சம் தமிழ்த் திரைப்படங்கள். வளர்ச்சி பெற்றிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களோடு, திரைப்படத்திற்கு இருக்கும் முதன்மையான தொடர்பு, உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரே நாளில் திரைப்படங்களை வெளியிடும் அளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு வெளியாகி மிகுந்த லாபம் ஈட்டிய ஒரு திரைப்படமாக, ரஜினி நடித்த "சிவாஜி' படத்தை எடுத்துக் கொள்வோம். "குறித்த நேரத்தில் இப்படம் காட்டப்படவில்லை என்பதற்காக திரையரங்க உடைப்பு, எரிப்பு, நச்சு மாவு வீச்சு, அடிதடி முதலானவையும் நடந்துள்ளன' என ("மக்கள் ஓசை' 20.6.2007) திருமாவளவன் என்பவர் எழுதுகிறார். மலாயாவை விடுங்கள். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் எரிந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் இப்படத் தைக் காண, பத்து நாட்களுக்குப் பின்னரும் திரையரங்க வாயில்களில் நீண்ட வரிசையில் தமிழர்கள் காத்துக் கிடந்தனர் என்ற செய்தி, தமிழர்களின் மன உணர்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இல்லையா? "வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் மன இயல்பினராக, தமிழர்கள் வாழ்வதே இதற்குக் காரணம்' என்கிறார் திருமாவளவன். &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;ஆனால் "சிவாஜி' திரைப்படத்திற்கு வரவேற்பும் கொண்டாட்டமும் இப்படி இருக்க, தமிழக அரசு தயாரித்த "பெரியார்' திரைப்படமோ மலேசியாவில் படாதபாடுபட்டு விட்டது. திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலிருந்தே "பெரியார்' படத்திற்கு எழுந்த கண்டனங்களும் எதிர்ப்பும் தமிழர்களைப் புரிந்து கொள்ளப் போதுமானவையாயிருந்தன. "இந்துக்கள் மனம் புண்படும்படி பாடல் எழுத வேண்டாம்' என வைரமுத்துவிடம் இந்து அமைப்பினர் வேண்டுகோள் ("மலேசிய நண்பன்' 3.4.07) விடுத்தனர்.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;""தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம்ஆண்டு மலாயாவிற்கு வந்த போது, "அவர் இந்நாட்டிற்குள் நுழையக் கூடாது' என்று இந்து மத அமைப்பினர் தீர்மானம் போட்டு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். அந்த எதிர்ப்பை உடைத்தெறிந்து தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் உறையாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்பினார். மலேசியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும் கூட பெரியாரை அவர்தம் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொள்ளாமல், ஒரு மரியாதைக்காக அவர் மீது மதிப்பு வைக்கின்றனர். பெரியார் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததும், பகுத்தறிவு உணர்வை வளர்த்துக் கொள்ளாததுமே, தமிழர்களின் குழப்பமான சிந்தனைக்கு வழிகோலுகின்றன.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;மலேசிய இந்திய காங்கிரஸ் இன்றைக்கு பலவாகப் பிளவுபட்டிருப்பது சாதிப் பிரச்சனைகளை முன்வைத்துதான். "ம.இ.கா. தேர்தலைச் சந்தித்த போதெல்லாம் சாதி அரசியல் நடத்துபவர் டத்தோ சிறீ சாமிவேலுதான்' என பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ம.இ.கா.விலிருந்து பிரிந்து அய்.பி.எப். என தனிக்கட்சி தொடங்கிய டத்தோ எம்.ஜி. பண்டிதனின் ("மக்கள் ஓசை' 2.2.06) அறிக்கை கூறுகிறது. ம.இ.கா.விலிருந்து நீக்கப்பட்ட அம்பாங் முனியாண்டி என்பவரும், "ம.இ.கா.வில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருபவர்கள் சாமிவேலுவின் உறவுக்காரர்கள்தான். ம.இ.கா.வில் ஒரு ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே பட்டம், பதவி' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;"சாதிப் பித்து பிடித்தவர்களுக்கு ம.இ.கா.வில் இனி இடமில்லை' என சாமிவேலு ("தமிழ் குரல்' 28.1.06) இவர்களுக்கு பதில் சொல்லியிருந்தாலும், ம.இ.கா.வின் பிளவுகளுக்கும், இறுதியாக நடைபெற்ற மலேசிய தேர்தலில் ம.இ.கா. குறிப்பாக, சாமிவேலு பெற்ற தோல்விக்கும் முதன்மைக் காரணம், இவர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதி உணர்வுதான் என்பதை ஆராயத் தேவையில்லை.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;தமிழர்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளில் இந்து மத மூட நம்பிக்கைகள் மேலாதிக்கம் செலுத்துவதால்தான், தமிழர்கள் இன்றைக்கு சாதி சங்கங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இத்தகைய சாதி சங்கங்களை வளர்த்துக் கொண்டே தான், மறுபுறம் இந்துத்துவ ஒருமைப்பாடு பற்றியும் இந்து சங்கங்கள் போதித்து வருகின்றன. ஒரு தமிழனோ, இந்தியனோ சாதியாகப் பிளவுபடாமல் இந்துவாக மட்டும் இங்கு இருக்கலாகாது. நாளுக்கு நாள் சாதி சங்கங்கள் பலம் பெற்று வருவதால்தான், மலேசியாவில் இன்று கல்விக் கூடங்களில் கூட சாதி சங்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற போர்வையில் நுழையும் அவலம் நேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், பண்பாட்டு நிகழ்வுகள் என சாதி சங்கங்கள் தங்களது சங்கங்களின் முகவரியிலேயே மாணவர்களுக்கு "சான்றிதழ்கள்' வழங்குவதும், பரிசுப் பொருட்கள் தருவதும் இன்றைய மலேசிய கல்விக் கூடங்களில் இயல்பாகி வருகின்றன.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;""இன்று பள்ளிகளில் அரசியலோடு சாதியும் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒத்துப் போகாததற்கு, சாதிப் பிரச்சனையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் தாங்கள் படித்துக் கொடுக்கின்ற பிள்ளைகள் கீழ் சாதிக்காரர்கள் என்பதால், தன் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். சில பிள்ளைகளை ஏசும் பொழுது, சாதிப் பெயரை குறிப்பிட்டுக் கொள்வதில் சில ஆசிரியர்களுக்கு கரும்பு கடிக்கிற மாதிரி. இன்றோ பல பிள்ளைகள் படிப்பை சுமையாகவும் ஆசிரியரை எதிரியாகவுமே நினைக்கின்றனர்'' என ("செம்பருத்தி', சூன் 07) இதழில் எழுதுகிறார் கா. கலைமணி.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;புதிய தலைமுறை மாணவர்களிடம் கல்வி பயிலும் பிஞ்சுப் பருவத்திலேயே சாதி உணர்வை, நஞ்சாய் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளன மலேசியாவின் சாதி சங்கங்கள். அடுத்த தலைமுறையில் மலேசியத் தமிழர்களிடையே சாதிச் சண்டைகள் பெருமளவில் நடக்க இப்போதே விதை தூவப்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை என அங்கலாய்ப்பதில் எவ்விதப் பயனுமில்லை.பெரியார் சொல்வது போல, இந்து மதம் ஒழியாத வரை சாதியம் ஒழியப் போவதில்லை. "மதம் ஒரு அபின்' என்று கார்ல் மார்க்ஸ் விமர்சித்தது, சாமானிய மனிதனுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சாதியின் பெயரால் பிளவுக்கும், சண்டை சச்சரவுக்கும், இந்திய / தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கும், வீழ்ச்சிக்கும் வழிகோலுவது இந்து மதம் அன்றி வேறொன்றுமில்லை! சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு தேரோட்டம் என தமிழ்ச் சமூகத்தில் உட்பூசல்கள் பெருகி வளர, சாதி சங்கங்களை அரவணைத்து அழியாது காப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான்,உலகம் முழுவதும் இந்து மத சங்கங்களும் இயக்கங்களும். இதைப் புரிந்து கொள்ளாதவரை, உலகின் எந்த மூலையில் வாழும் தமிழர்களும் இன – பண்பாட்டு – மொழி அடிப்படையில் ஓர்மை கொள்வது கடினமே.&lt;/p&gt; &lt;p class="contentpane" style="text-align: justify;"&gt;(அடுத்த இதழிலும்)&lt;/p&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;- கா.இளம்பரிதி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-7215513184131718601?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/7215513184131718601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=7215513184131718601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7215513184131718601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7215513184131718601'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/10/blog-post.html' title='தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 2'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-5375334699265055267</id><published>2009-09-17T22:03:00.000+05:30</published><updated>2009-09-28T22:04:31.248+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரவணக்கம்'/><title type='text'>வீரவணக்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRboY2otI/AAAAAAAAADc/pU1rkowCtN8/s1600-h/Poster+colour+final.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 364px; height: 496px;" src="http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRboY2otI/AAAAAAAAADc/pU1rkowCtN8/s400/Poster+colour+final.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379991133754925778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-5375334699265055267?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/5375334699265055267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=5375334699265055267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/5375334699265055267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/5375334699265055267'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/09/blog-post_17.html' title='வீரவணக்கம்'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRboY2otI/AAAAAAAAADc/pU1rkowCtN8/s72-c/Poster+colour+final.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-2179776383259443541</id><published>2009-09-11T05:20:00.005+05:30</published><updated>2009-09-28T22:03:48.332+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரவணக்கம்'/><title type='text'>போராளிகள் மாதம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRrng_M0I/AAAAAAAAADk/6hGBrb5wJnQ/s1600-h/Poster+black.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 346px; height: 476px;" src="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRrng_M0I/AAAAAAAAADk/6hGBrb5wJnQ/s400/Poster+black.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379991408398512962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRboY2otI/AAAAAAAAADc/pU1rkowCtN8/s1600-h/Poster+colour+final.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-2179776383259443541?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/2179776383259443541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=2179776383259443541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/2179776383259443541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/2179776383259443541'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/09/blog-post.html' title='போராளிகள் மாதம்'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SqmRrng_M0I/AAAAAAAAADk/6hGBrb5wJnQ/s72-c/Poster+black.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-8943862124584137990</id><published>2009-08-31T13:55:00.000+05:30</published><updated>2009-08-31T13:56:15.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>தமிழரைப் பிணைக்கும் முள்வேலி - 1</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஈ&lt;/span&gt;&lt;/span&gt;ழத்தமிழர், இலங்கைத் தமிழர், அயலகத் தமிழர், புகலிடத் தமிழர், தாயகத் தமிழர் என எடுத்தாளப்படும் எந்தவொரு சொற்பிரயோகமும் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. கோடிக்கணக்கான மனிதர்களை அல்லது லட்சக்கணக்கான மக்கள் தொகுதியை அடையாளப்படுத்தும் வலிமை இவ்வார்த்தைகளுக்கு இருப்பதால், அதே வன்மையோடு இச்சொற்களுக்குள் நாம் ஊடுறுவ விழைகிறோம். வன்மத்தோடு இச்சொற்களை உடைத்து நொறுக்க வேண்டுமென்பது எமது திட்டமோ, நோக்கமோ அல்ல. ஈழத் தமிழர்கள் குறித்தும், உலகத் தமிழினம் குறித்தும் அக்கறை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழர்களின் வீழ்ச்சிக்கும், தமிழினத்தின் பின்னடைவுக்கும், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் குணங்களாகப் புரையோடிப் போயிருக்கும் துரோகமும், ஊழலுமே முக்கியக் காரணிகளெனப் பரவலான குற்றச்சாட்டு இப்போதும் முன்வைக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SptsbCKixEI/AAAAAAAAADM/YfThQxcHAp4/s1600-h/Mulveli.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 264px;" src="http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SptsbCKixEI/AAAAAAAAADM/YfThQxcHAp4/s400/Mulveli.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5376009791890179138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் துரோகமும் ஊழலும் எளிதில் நிகழ்ந்து விடும் வாய்ப்புள்ள, பதப்படுத்தப்பட்ட நிலமாக, தமிழ் இனம் பலநூறு ஆண்டுகள் நிலைப் பெற்றிருப்பதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது பார்ப்பனிய மநு தர்மம். இதுவே, வர்ணங்களை உருவாக்கி, சாதிகளைத் தோற்றுவித்து, இனக்குழுப் பகைமைகளை ஊட்டி வளர்த்து, நவீன காலம் தொடங்கும் போது இந்துத்துவ அரசியலாக வடிவம் பெற்றது. இந்தியா – இந்து – இந்திய ஒற்றுமை என செயற்கையாகக் கட்டியமைக்க முயல்வது போலவே, &lt;span style="font-weight: bold;"&gt;"நாம் தமிழர்' என பாவனை செய்வதும் கூட, தனி நபர்களின் பிழைப்புவாதத்திற்கே மீண்டும் மீண்டும் இட்டுச் செல்லும். &lt;/span&gt;"ஈழத் தமிழர் வரலாறு' என வெகுசனப் பத்திரிகைகள் வணிகம் செய்யும் அரசியல் வரலாற்றைத் தாண்டி, எந்தவொரு நாட்டில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் அல்லது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூக வரலாறே, நமது மீளாய்விற்கும் திறனாய்விற்கும் அவசியமாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழரின் அரசியல் வரலாறும் சமூக வரலாறும் பெருமிதங்களை மட்டுமல்ல; அவலங்களையும் கழிவுகளையும் உள்ளடக்கியவைதாம். பெருமைகளில் மூழ்கித் திளைப்பவர்கள், தங்கள் கழிவுகள் தம் வீட்டு முற்றத்திலேயே நாறிக் கிடப்பதை உணர வேண்டும். நாம் குப்பையைக் கிளறுவதாக அங்கலாய்ப்பவர்கள், அதை எரித்துச் சாம்பலாக்க முன்வர வேண்டும். மநுதர்மத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தும் "சாதி இந்துக்கள்' அழுகிப்போன தம் சமூக வரலாற்றின் கழிவுகளைத் தூய்மைப்படுத்தும் செயல்திட்டங்களை முன் நிபந்தனைகளாகக் கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாகவே, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியத் தமிழர்கள் குறித்தான வாழ்வியல் சிக்கல்கள், அவர்களின் போராட்டங்கள் வழியே தமிழகத்தில் கவனப்படுத்தப்பட்ட நிலையில், செய்திகளின் மீதான உடனடி கவனம் என்பதைக் கடந்து சமூக ஆய்வுக் கண்ணோட்டம் என்ற அளவிலும், "தோட்டத் தொழிலாளர்கள்' என்ற வகையினத்துள் கூலி உயர்வுக்காகப் போராடிய போது, தாமிரபரணி ஆற்றில் அரசப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாஞ்சோலை மலையக மக்களின் நினைவை மீட்டெடுக்கும் நோக்கிலும் இக்கட்டுரை காலப்பொருத்தமாகவும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மலேசியத் தமிழர்கள் மீது தாக்குதல்; இந்திய வம்சாவளியினர் மீது மலேசிய அரசாங்கத்தின் அடக்குமுறைகள்; மலேசியாவில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன... என்றெல்லாம் கடந்த 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று இந்திய – அய்ரோப்பிய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்துப் பேசுகின்ற அளவிற்கு செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. மலாய் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவுக் குரல் தந்தனர். இப்பிரச்சினை குறித்த தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கைக்கு, மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், "இது எங்கள் உள்நாட்டுவிவகாரம். யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை' என பதிலடி தருமளவுக்கு பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழர்கள் மலேசியாவில் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தே, இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்துவதாக செய்திகள் அறிவிக்கின்றன. இதுபோல இன ரீதியிலான உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம்தான் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்து, இரண்டு லட்சம் தமிழர்களை யுத்த சவக்குழியில் புதைத்தது. 10 லட்சம் ஈழ மக்களை உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறும் ஏதிலிகளாக புலம்பெயர வைத்தது. இலங்கையின் வரலாற்றை, துன்பியல் அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால், இந்நேரத்தில் இøதப்பற்றி இங்கு குறிப்பிட நேர்கிறது. இந்திய வம்சாவளியினராக தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறிவிட்ட மலேசியா மட்டுமல்ல, மாலத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இன்னும் சில நாடுகளில்கூட, இந்திய வம்சாவளியினரின் குடியுரிமைகள் குறித்த அக்கறையும் இந்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. ஆனாலும் இன அடிப்படையின் உணர்ச்சி வழி கூட்டு மன அரசியல் தொகுதியாய், திராவிட இயக்கத்தினரால் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கும் தாயக தமிழ்ச் சமூகத்தில் இந்திய வம்சாவளியினரின் வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து அணுகப்படும் வழமையான கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவரும் மலேசிய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான டத்தோ சாமிவேலு, "எங்கள் நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றனர். இதில் அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள். 7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். மலாய், சீனர்கள், இந்தியர்கள் மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவரும் மலேசிய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான டத்தோ சாமிவேலு, "எங்கள் நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றனர். இதில் அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள். 7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். மலாய், சீனர்கள், இந்தியர்கள் என மூன்று இனங்களுக்குள்ளே செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, இந்தியர்களுக்கு முழு குடியுரிமை வழங்க முடிவானது' என்கிறார். ஏறத்தாழ 8 சதவிகித இந்திய வம்சாவளியினரில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள் ஆகியோரும் மதம் என்ற வகைப்பாட்டில் 90 சதவிகிதத்தினர் இந்து மதத்திலும் ஏனையோர் கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதங்களிலும் உள்ளனர். ஆனாலும் இந்திய வம்சாவளியினரில் மத – இன பெரும்பான்மையினராக வாழும் இந்து தமிழர்களையே மலேசியத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என பெரிதும் குறிப்பிடும் சூழல் நிலவுகிறது. இக்கட்டுரையின் பேசு பொருளாக "இந்து தமிழர்'களையே நாமும் கவனப்படுத்த எண்ணுகிறோம். ஆக, மலேசிய மக்கள் தொகையில் இவர்கள் சற்றேறக்குறைய 7 சதவிகிதத்தினர் எனக் கொள்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிரிட்டிஷ் காலனி ஆட்சியரிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அங்கிருந்த இந்திய வம்சாவளியினரைவிட, மக்கள் தொகையில் பத்து மடங்கு அதிகமிருந்த மலாய் இன மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ந்து கிடந்தது எனவும், மண்ணின் மைந்தர்களான அவர்களுக்குத் தம் வாழ்வின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வெகுகாலம் ஆனது எனவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியர்களோடு ஒப்பிடுகையில், கல்வியறிவு பெற்ற மலாய்காரர்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில்தான் மலாய்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் முன்னேறி உள்ளனர். ஆனாலும் மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும் மலாய் மக்களின் முன்னேற்றத்திலும் இந்திய வம்சாவளியினரான தமிழர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடலாகாது. மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்களைத் திரட்டிப் போராடி வரும் "இந்து உரிமை நடவடிக்கைக் குழு' என்ற அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி குறிப்பிடுவது போல ("குமுதம் ரிப்போர்ட்டர்', 13.12.07) "பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவை மேம்படுத்த – அங்கு தோட்ட வேலை உட்பட பல்வேறு வேலைகளைச் செய்வதற்காக – இந்திய மக்களை அழைத்துச் சென்றது. மலேசியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்றியதில் இந்திய மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அடிமை வேலைகளைச் செய்ததற்காக, நமது மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு தர வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளோம்' என்ற சொற்களில் வரலாற்று ரத்தம் தோய்ந்து கிடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வரலாறு குறித்து ஒரு மீளாய்வுக் கண்ணோட்டத்துடன் நாம் தொடர்ந்து செல்லலாம் என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழர்கள் "இந்துக்கள்' என வேதமூர்த்தி போன்றவர்களால் குறிக்கப்படுவதும், மலேசிய நாட்டை வளப்படுத்த அடிமை உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட "தமிழர்கள்' எவர் என்பதும் நாம் அறிய வேண்டிய முதற்கண் சமூக – அரசியல் – வரலாற்றுப் புலம். ""காலங்காலமாக தங்களது குலதெய்வங்களாக வழிபட்டு வரும் கோவில்களை இடிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கின்ற வேலையில் அரசு செயல்படுகிறது. எங்களுக்குத் தெரிந்து பத்தாயிரம் இந்துக் கோயில்களை இடித்துள்ளனர். முருகன் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற அய்ந்தாயிரம் பேரை போலிசார் அடித்துத் துன்புறுத்தி யுள்ளனர்'' என்கிறார் "குமுதம் ரிப்போர்ட்டர்' நேர்காணலில் வேதமூர்த்தி. இதற்குப் பதிலளித்துப் பேசும் டத்தோ சாமிவேலு, அதே "குமுதம் ரிப்போர்ட்டர்' (6.1.2008) இதழில், ""அங்குள்ள மக்களின் எண்ணிக்கையோ பதினெட்டு லட்சம். ஆனால் இருக்கும் கோயில்களோ இருபத்து நான்கு லட்சம். இதில் பதிவு செய்யப்பட்டவை மூன்றாயிரம் கோயில்கள்தான். தினமும் ஒரு கோயிலைக் கட்டுவது, ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?'' என்று கேட்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆயிரத்து அறுநூறு ஆலயங்களையும் நூற்று எட்டு சமய அமைப்புகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு, இந்து மக்களின் பேராதரவோடு இயங்கி வரும் இயக்கமாக "இந்து சங்கம்' மலேசியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய வம்சாவளியினர் – தமிழர்கள் – இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் இந்திய நாட்டிலோ அல்லது குடியேறிய நாட்டிலோ அல்லது புலம் பெயர்ந்த நாட்டிலோ"ஓர் இந்து' தன் உயிருக்கு நிகராகக் கொண்டாடும் / பாதுகாக்கும் / நிறுவும் முக்கிய அம்சமாக இருப்பது தன்னுடைய மத அடையாளமாகவே இருக்கிறது. இதுவே காலப்போக்கில் கிளை பரப்பி தனித்த சாதிக் குழுமங்களில் அவனை நிலைநிறுத்தி விடுகிறது. சாதி சங்கங்களை நிருவகிக்கும் தலைமைப் பீடமாகவே "இந்து சங்கம்' செயலாற்றி வருகிறது எனலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிரிட்டிஷ் காலனிய காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவில் கரும்பு, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை பெருமளவில் உருவாக்கி வளர்க்க, வறுமையில் சிக்குண்டு தவித்த தமிழர்கள் – எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி அழைத்துச்செல்லப்பட்டனர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், செங்கற்பட்டு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பெருமளவில் தமிழர்கள் மலேசியாவில் குடியமர்த்தப்பட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மலேசியாவில் இந்தியர்கள் குடியமர்த்தப்பட்டது (1786 – 1957) தொடர்பான ஓர் ஆய்வில் கேர்நைல் சிங் சாந்து (K.S.Sandu) என்பவர், இவ்வாறு அழைத்து வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை "விவசாயத் தொழில் சாதியினர்' என வகைப்படுத்தி எழுதுகிறார். தமிழகத்தில் பண்ணை அடிமை, பண்ணை வேலையாள், படியாள் என மூன்று வகை வேலைப் பிரிவினைகளில் இத்தகைய தொழிலாளர்கள் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறு நடத்தப்படுவதற்கு அவரவர்களின் சாதி அடையாளமாகப் பயன்பட்டதாகவும், இவர்கள் தமிழகத்திலிருந்து மலாயாவிற்குக் குடிபெயர்க்கப்பட்ட போதும், இதே அடையாளத்துடனும் சாதிப் பாகுபாட்டுடனும்தான் மலாயத் தோட்டங்களில் நடத்தப்பட்டதாகவும் இவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் விவசாய பண்ணைத் தொழிலை நிர்வாகம் செய்ய பயன் பாட்டிலிருந்த "கங்காணி' முறையே இங்கும் பின்பற்றப் பட்டது எனவும், இக்கங்காணி உரிமம் சாதி அடிப்படையிலேயே வழங்கப்பட்டது எனவும் இவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1892 ஆம் ஆண்டின் சென்னை வருவாய்த் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின்படி, விவசாயத் தொழிலாளருக்கான கூலி வேறுபாடுகள் சாதியின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த பள்ளர், பறையர் ஆகியோர் நியாயமற்ற அளவிலும், சமூக ரீதியாக ஒதுக்கப்படாமலும் விவசாயத் தொழிலாளர்களுமாக இருந்த ஏனைய சாதியினர், "நியாயமான' என்று சொல்லத்தக்கஅளவிலும், கூலி பெற்றதன் விளைவாக, பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வு சாதி ரீதியான வேறுபாடுகளைத் தாங்கி நிற்கும் சமூகப் பின்புலமாக நிலவியது. இன்னும் சொல்வதானால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாலை முதல் இருள் கவியும் வரை என கொடூரமான வேலை நேர நிர்பந்தத்தின் கீழ் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். ""ஏனைய சாதியினரைவிட அதிகமான வேலை நேரத்தை "மிராசுதாரர்கள்' என அழைக்கப்பட்ட பண்ணையார்களுக்காக செலவிட்டபோதும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியானது, மிகவும் குறைவாக, நியாயமற்றதாக இருந்தது. கடுமையாக உழைக்க இயலாதவர்கள் பண்ணையார்கள் மற்றும் பண்ணை அடியாட்களால் கம்பு மற்றும் இரும்புத் தடிகள் கொண்டு தாக்கப்பட்டனர்'' என "இந்தியாவில் சாதிகள்' என்ற தன் நூலில் ஜே.எச். ஹட்டன் (J.H.Hutton) என்பவர் குறிப்பிடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொருளாதார ரீதியில் ஏழ்மையான குடிமை வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உழன்றதால், தங்கள் மனம் போன போக்கில் அவர்களை மிரட்டி வேலை வாங்குவதும், எதிர்க்க முற்படும் நேரங்களில் அவர்கள் மீது வன்கொடுமைகளை ஏவுவதும் ஆதிக்க சாதியினருக்கு இலகுவாக இருந்தது. இப்படியான கொடுமைகளே, அம்மக்கள் தமிழகத்தின் விளை நிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து செல்லக் காரணமாகவும் இருந்தன. "நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்திற்கு செல்வதாக நினைத்துக் கொண்டுதான் மலாய தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாகக் குடி பெயர்ந்தனர்' என்கிறார் கே.எஸ். சாந்து. "சீனர்களை விட குறைவான கூலியையும், தரம் குறைந்த வாழ்நிலையையும் ஏற்றுக் கொண்ட திறமையான வேலையாட்கள்' என மலாய அரசாங்கமும் தோட்டப் பண்ணை முதலாளிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழக விவசாயக் கூலிகளை மதிப்பிட்டு இருந்தனர். தமிழக விவசாய நிலங்களில் நிலவிய பண்ணையடிமைக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி, மலேசியத் தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாக குடிபெயர்ந்த ஒடுக்கப்பட்ட தமிழர்கள் மீது – அதே வகையான சாதிப் பாகுபாடுகளும், கூலி முறைமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளுமே மலாயாவிலும் சுமத்தப்பட்டு, சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1844 – 1941 காலகட்டத்தில் மலாயாவிற்குக் குடியேறிய இந்தியத் தொழிலாளர்களின் (அரசு புள்ளி விவரப்படி) எண்ணிக்கை 2,725,917 ஆகும். கோலாலம்பூர் தொழிலாளர் துறையின் 1923 – 1935 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இக்காலகட்டங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 55,804 பேரும், வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1,45,844 நபர்களும், ராமநாதபுரத்திலிருந்து 19,366 பேரும், தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 59,593 பேரும், திருச்சியிலிருந்து 93,698 நபர்களும், தஞ்சை மாவட்டத்திலிருந்து 66,937 நபர்களும் மலாயாவிற்குக் குடியேறியிருந்தனர். மிக அதிக எண்ணிக்கையில் 1926 இல் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து மட்டும் 38,360 பேர் மலாயாவிற்குக் குடியேறினர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலும் குடியேறிய சாதிகளாக வன்னியர்களும் பறையர்களும் இருந்தனர். தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து பள்ளர், பறையர், மறவர், கள்ளர், அகமுடையார் போன்ற சாதிகள் குடியேறினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SptsiqROUBI/AAAAAAAAADU/lVBubUgvSOM/s1600-h/Tea+Estate.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 256px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SptsiqROUBI/AAAAAAAAADU/lVBubUgvSOM/s400/Tea+Estate.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5376009922914701330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;தேயிலை தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒன்றில் தமிழர்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;விரைந்து வளர்ந்து வந்த மலாயா மாநிலங்களின் நிர்வாகத் துறைகளுக்கு எழுத்தர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட படித்த வர்க்கத்தினர் தேவைப்பட்டபோது, மலையாளிகளும் இலங்கை ஆதிக்க சாதித் தமிழர்களுமே 1920களிலிருந்து பெருமளவில் குடியேறத் தொடங்கினர். சாதி ரீதியாகக் கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இத்தகைய வேலைவாய்ப்புகளைப் பெறுவது என்பது, கனவிலும் நடக்காத ஒன்றாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மிகவும் படித்த சாதியினராக இருந்த பார்ப்பனர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திலும் இந்திய மன்னர்களின் அரண்மனைகளிலும் போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதால், அவர்கள் அக்கால கட்டங்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் நேரவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதனால் தென்னிந்திய பிரிட்டிஷ் நிர்வாகங்களில் பார்ப்பனர்களோடு போட்டியிட்டு பதவிக்கு வர இயலாத, "சாதி இந்துக்கள்' (Non-Brahmins) என்று அழைக்கப்பட்ட ஏனைய சாதி இந்துக்கள் மலாயா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறி நிர்வாகத் துறை போன்ற பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1921 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரப்படி, பார்ப்பன ஆண்களில் 71।5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 28.21 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். செட்டியார்களில் 39.5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.34 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், நாடார்களில் 20 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 0.75 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், வெள்ளாளர் (பிள்ளை, முதலியார்)களில் 24.2 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.37 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மலாயா போன்ற நாடுகளுக்குக் குடியேறி நிர்வாகப் பணியிடங்களை ஆக்கிரமித்தசாதியினராக, செட்டியார்களும் வெள்ளாளர்களும் இருந்தனர். இலங்கையிலிருந்து மலாயாவிற்கு இதுபோன்ற பணிகளுக்கு வந்தவர்களும் வெள்ளாளர்களே. இவர்களே தென்இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு விவசாயக் கூலிகளாக, உழைக்கும் மக்களை "நைச்சியம்' பேசி அழைத்துச்(கடத்தி) சென்ற முகவர்களாக செயல்பட்டுள்ளனர். காலப் போக்கில் இவர்களில் சிலரே, மலாய தோட்டப் பண்ணைகள் சிலவற்றின் உரிமையாளர்களாகவும் வளர்ந்து, உழைக்கும் மக்களைச் சுரண்டி தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;தலித்முரசு ஜீலை 2009ல் எழுதியது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;– அடுத்த இதழிலும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-8943862124584137990?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/8943862124584137990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=8943862124584137990' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8943862124584137990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8943862124584137990'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/08/1_31.html' title='தமிழரைப் பிணைக்கும் முள்வேலி - 1'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SptsbCKixEI/AAAAAAAAADM/YfThQxcHAp4/s72-c/Mulveli.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-8886698336483115102</id><published>2009-05-25T20:46:00.007+05:30</published><updated>2009-08-26T00:28:56.753+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் - 3</title><content type='html'>&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style=";font-family:Latha;font-size:12px;"  &gt;&lt;center&gt;&lt;span class="bltxtbold" style="font-weight: bold; color: rgb(0, 0, 0); text-decoration: none;font-family:Latha;font-size:15px;"  &gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;- இளம்பரிதி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/center&gt;&lt;center style="text-align: right;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;a href="http://egalaiva.blogspot.com/2009/03/blog-post_27.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈழம்: குருதியில் பூக்கும் நிலம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/center&gt;&lt;center style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;a href="http://egalaiva.blogspot.com/2009/04/2.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஈழம்: குருதியில் பூக்கும் நிலம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/center&gt;&lt;p align="justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்தபோது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும் போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.keetru.com/images/eelam_282.jpg" alt="Eelam" width="400" align="right" border="0" height="281" /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமது அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சியையே முதன்மையான ராணுவ முகாமாக அமைத்துக் கொண்டனர். ஆனையிறவு ராணுவத் தளத்தை வெற்றி கொண்டமை, முல்லைத் தீவில் பாரிய ராணுவ முகாமொன்றைத் தகர்த்தமை போன்றவை, புலிகள் கிளிநொச்சிக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு ராணுவ ரீதியாகக் கிடைத்த முக்கிய வெற்றிகள். இந்த வெற்றிகளின் பின்னணியில் பலமடைந்த நிலையிலேயே – அரசியல் பேச்சுகளுக்கும், 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் புலிகள் முன்வந்திருந்தனர். இலங்கைத் தீவில் கொழும்புக்கு அடுத்த பெரிய நகரமான யாழ்ப்பாணத்தின் புகழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, "கிளிநொச்சி' உலக நாடுகள் பலவும் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாறியிருந்தது. இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கருத்துருவின் அடையாளமாக யாழ்ப்பாணமும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக கிளிநொச்சியும் இருப்பதாகவே குறியீட்டளவில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே, இலங்கை அரசு தனது ராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசின் உதவிகளும், கருணாவின் ஆலோசனைகளும் – கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தின் வெற்றிகளுக்கு மிகவும் துணை புரிந்துள்ளன. கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பூநகரியில் நுழைந்த இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போரே – இரு படைப்பிரிவினரும் மோதிக் கொண்ட கடைசிக் களமாக இருக்கிறது. பூநகரியிலிருந்து பின்வாங்கிய விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை அரண் போலக் காப்பர் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இலங்கை ராணுவம் 2.1.09 அன்று இலங்கையின் தேசியக் கொடியை கிளிநொச்சியில் பறக்க விட்டபோது, அடுத்த பேரிடியாக இருந்தது. பூநகரியில் கடுமையான போரை எதிர்கொண்ட இலங்கை ராணுவம் கிளிநொச்சியில் நுழைந்தபோது, தமிழீழத்தின் அந்த அரசியல் தலைநகரம் – பொதுமக்களோ, புலிகளின் படைப் பிரிவினரோ எவருமற்று வெறிச்சோடிப் போயிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் "தேசியக் கனவை' வெறுமை சூழ்ந்துவிட்டதாகவே நாம் உணர முடிந்தது. இதனாலேயே சனவரி 5 அன்று கிளிநொச்சி வீழ்ந்ததை, இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் வெற்றி விழாவாகக் கொண்டாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவு இலங்கை ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட கணத்திலேயே, இரண்டரை லட்சம் மக்கள் வடக்கு வன்னிப் பகுதியில் சிக்கியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜபக்சே அரசு, புலிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையிலும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து ஈழ மக்களை அந்நியப்படுத்தும் நோக்கத்திலும் – "விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்' என்ற குற்றச்சாட்டை சுமத்தி, போர் என்ற பெயரில் மக்களையே கொன்றழித்தது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்களை உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கி விட்டது. 2009 சனவரியிலிருந்து இன்று வரை 9,500 பேர் இலங்கை ராணுவத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கை, கால்களை இழந்து ஏறத்தாழ 30,000 பேர் நிரந்தர ஊனமாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சரிபாதியினர் குழந்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் இயங்கும் "உலக வன்முறைகள் கண்காணிப்பு மய்யம்', “பொதுமக்களுக்கு எதிரான போர் வன்முறையில், உலகத்திலேயே இலங்கை அரசுதான் முதலிடம் வகிக்கிறது'' என அறிக்கை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை ஒன்று, ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து வரும் கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழர் – சிங்களர் இரு தரப்பிலும் ஏறத்தாழ 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத் தரப்பில் மட்டும் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1995இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கைப் படைக்குத் தலைமையேற்றிருந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை துன்புறுத்தி, இறுதியில் கொன்று ஒரே இடத்தில் புதைத்து விட்டான். ஈழ வரலாற்றில் "செம்மணி' படுகொலைகள் என அழைக்கப்படும் இக்கொடுமை குறித்து இதுவரை எவ்வித நீதி விசாரணையும் இலங்கை அரசால் நடத்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களான பசில் ராஜபக்சே, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா ஆகிய இருவர் மீதும் அமெரிக்க அரசின் முன்னாள் துணை அட்டார்னி ஜெனரல் புரூஸ் பெயின், 3,700 தமிழர்களைக் கொன்றது, 10,000க்கும் மேற்பட்டோரைக் காயமடையச் செய்தது, 13 லட்சம் மக்களை இடம் பெயரச் செய்தது'' உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வவுனியா கொண்டு வரப்பட்டு, நிரந்தரத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு வரப்படும் வழியில், இடைத்தங்கல் முகாம்களில் விசாரணை என்ற பெயரில், இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கும், கர்ப்பிணிப் பெண்களை கருவழிப்பிற்கும், இளைஞர்களைக் கடும் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தி, சிங்கள ராணுவத்தினர் பழி தீர்த்து வருகின்றனர். யூத இனப்படுகொலைகளின் மரண முகாம்களைப் போலவே, இலங்கையின் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபேன்ட், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பிரான்ஸ், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை பேரினவாத அரசின் வரைமுறையற்ற படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தும் கூட, இன வெறியாடும் வார்த்தைகளில் ராஜபக்சே "விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது' என ஆணவத்துடன் மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரித்தானிய அரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட போது, 75 லட்சமாக இருந்த சிங்கள மக்கள் தொகை இன்று இரு மடங்காகிவிட்டது. ஆனால் 26 லட்சமாக இருந்த தமிழர்களின் மக்கள் தொகை அதே அளவில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக் காலமாக உள்நாட்டிலேயே தொடரும் இடப்பெயர்வுகள், படுகொலைகள், நிரந்தரமற்ற வாழ்க்கை ஆகியவற்றால் தமிழ் மக்களின் பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, சிறுபான்மைச் சமூகமாக அதிகாரமோ, உரிமைகளோ கோர முடியாத எண்ணிக்கையில் பலவீனப்படுத்தும் கொடூர நடவடிக்கையாகவே கர்ப்பிணிப் பெண்களின் மீதான கருவழிப்பு வரை, சிங்களப் பேரினவாத வெறியை இலங்கை அரசுகள் வளர்த்தெடுத்தன. கிழக்கு மாகாணத்தில் மட்டும் 38,000 இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, புனர் வாழ்வுக்கான வழியற்று இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு வேளை கிளிநொச்சியை மட்டுமல்ல, முல்லைத் தீவையும் சேர்த்தே ராணுவம் பிடித்தாலும், ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் ஓயாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். காரணம், அது மக்களின் போராட்டம். தொடர் போரால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து, சோமாலியாவைப் போன்ற நிலைமை அங்கு உருவாகும். ஆனாலும், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழப் பழகியிருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைத்தே தீரும்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ("குமுதம் ரிப்போர்ட்டர்' 4.11.2008) நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்ற போதும், கடந்த காலத்தைப் போலான நம்பிக்கைகளையே, வெறுமை சூழ்ந்திருக்கும் இத்தருணத்திலும் விதைத்துக் கொண்டிருக்க முடியாது. "வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல' என மீளவும் ஒரு சகாப்தம் முன்னெடுக்கப்படுமாயின் இயக்கம் – அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இழைத்த தவறுகளும் வரலாற்றுப் பிழைகளும் கூட – முதன்மையாகக் கணக்கிலெடுக்கப்பட வேண்டும். "சோமாலியாவைப் போன்ற நிலைமை' அங்கு இப்போதே தொடங்கிவிட்டது. ஆனால், அந்நிலைமை "மீளவும் ஒரு சகாப்தம்' உருவாவதற்கான மனித ஆற்றலையும் அரசியல் உறவையும் இழந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் போர் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வரப்போகிறது என "முடிவு' செய்து கொண்டு, தமிழகத்திலும் புலம்பெயர் சூழலிலும் ஆளுக்கு ஓர் அரசியல் தீர்வையும் ஆரூடத்தையும் தத்தமது சார்பு நிலைகளுக்கொப்ப வெளிப்படுத்தி வருகின்றனர். "ஆயுத வழிப் போராட்டமா? மக்கள் திரள் அறப்போராட்டங்களா?' எனத் தொடங்கிய ஈழ விடுதலைப் போராட்ட விவாதம், "விடுதலைப் புலிகளா? ஏனைய அமைப்புகளா?' என வளர்ந்து, "விடுதலைப் புலிகள் ஆதரவா? எதிர்ப்பா?' என கடந்த இருபது ஆண்டுகளாக நிலை கொண்டிருந்தது. "புலி இளைத்தால்...' என்ற வழக்குமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. "புலிகளுக்கு முன், புலிகளுக்குப் பின்' என்ற கருத்தமைவுகளை பலர் இப்போதே அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவரை?' என்ற லண்டனிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழில் (ஏப்ரல் – மே 2009) அ. மார்க்ஸ், "புலிகளுக்குப் பிறகு' எனத் தலைப்பிட்டே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “முல்லைத்தீவில் மேலும் மேலும் புலிகளின் ஆடற்களம் சுருங்கிக் கொண்டே போகிறது. வெகு விரைவில் அவர்களின் கதை முடிக்கப்படலாம் எனப் பத்திரிகைகள் ஆருடங்கள் எழுதுகின்றன. கொரில்லாப் போர் முறைக்குத் தாவலம் அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடலாம் என்கிற ஊகங்களும் சொல்லப்படுகின்றன.... புலிகள் ஒழிக்கப்படுவதோடு பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை'' என ஒரு வெகுஜன தமிழ் சினிமாவின் இறுதிக் காட்சிகளை முன் அனுமானிப்பது போல லகுவாக, கொச்சையாக எழுதிச் செல்கிறார். எவ்வளவுதான் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும், ஒரு விடுதலை இயக்கத்தை இவ்வளவு தூரம் எளிமைப்படுத்துவது அறமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையிலிருந்து "கள்ளத் தோணி'யில் தமிழகம் தப்பி வர ஒரு நபருக்கு குறைந்தது 25,000 ரூபாய் வேண்டும். ஒரு குடும்பம் தப்பி வர ஒரு லட்சம் ரூபாயாவது வேண்டும். ஆனால், அதே காலத்தில் "அகதி' எனப் பெயர் தாங்கி அய்ரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புக, 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இக்குறிப்பை கவனத்தில் இருத்தி, “மட்டக்களப்புப் பகுதியில் படைபலம் அதிகம்; யாழ்ப்பாணப் பகுதியில் பணபலம் அதிகம். வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்கள் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் எனக் கேட்டால், பணம் தந்து சமாளித்து விடுவார்கள் அல்லது புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். போரில் மடிந்த, 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கில் மக்கள் தொகை அதிகம். கிழக்கில் குறைவு. ஆனால் படைப்பிரிவில் கிழக்கு மாகாணப் போராளிகள்தான் அதிகம். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை'' என்ற கருணாவின் விமர்சனம் ("தினமலர்' 14.1.09) ஒன்றை அவதானித்தால், கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டக் காலத்தில், வேளாளர்கள் மற்றும் பிற சாதியினரின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாவின் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வதாலேயே, துரோகத்தின் பக்கம் நிற்பதாகப் பொருளல்ல. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில் நின்றும், அதே வேளையில் தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் – ஓர் ஒடுக்கப்பட்ட தன்னிலையாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துமே, இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் நிலமற்றவர்களாக, குறைவான வருவாய்ப் பிரிவினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர், பல லட்சங்கள் கொடுத்து அகதியாகக் கூட அந்நிய நாடுகளுக்குச் செல்ல இயலாதவர்களாக, யுத்தக் களங்களில் இடம் பெயர்ந்து கொண்டு, போராட்டமே வாழ்க்கையென மடிந்தும், ஊனமுற்றும் உருக்குலைந்தும் போகிறார்கள். கடந்த காலங்களில் போருக்குப் புறமுதுகிட்டு, புது வாழ்க்கை தேடிப் போனவர்கள் மிகுதியும் வேளாளர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;“ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக் கொள்ள முடியாது, இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். போராட்டத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் வெளியேறிவிட்டு, மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். அதன் வடிவமாகத்தான் லட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், அய்.நா. வாசலில் தீயிட்டுச் செத்துப் போனான்'' என "ஆனந்த விகடன்' இதழுக்கு (1.4.2009) கனடாவிலிருந்து எழுதிய பெயர் தெரியாத ஒரு தமிழ்ச் சகோதரியின் கடித வரிகள் எம்மை ஆற்றுப்படுத்த முடியாது. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை "சாதிக் கண்' கொண்டு பார்ப்பதாகக் குற்றம் சுமத்தி விடவும் இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்கச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்த தமது உறவினருக்கு 1983இல் எழுதிய கடிதம் ஒன்றில், “அவ்விடம் இருந்து வரும் நளம், பள், பறை (நளவர், பள்ளர், பறையர்) ஆகியதுகளுடன் இங்கு கலந்து அவமானப்படும் தலையெழுத்தைத் தவிர, மற்றபடி வாழ்க்கை எல்லா விதத்திலும் பரவாயில்லை'' (மனோன்மணி சண்முகதாஸ் – மேற்கோள் : சாதியும் துடக்கும்) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஈழத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. 1983இல் இருந்த சாதி மேலாதிக்க மனநிலையில், தேசிய இன விடுதலைப் போராட்டச் சூழல் மாற்றங்களைத் தந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும், பாரிய அளவில் சாதிய உளவியல் தகர்க்கப்பட்டதற்கான வாய்ப்புகள் ஈழத்தைப் போல, புலம் பெயர்ந்திருக்கும் தமிழகத்திலோ, அயல் நாடுகளிலோ உருவாக்கப்படவில்லை. நேர்மையோடு பரிசீலனை செய்யும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் அகதி முகாம்களில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஏதிலிகளைப் பற்றிய உணர்வு ஏதுமற்று, கனடா, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா இன்னும் பல நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு "ஆன்மீகச் சுற்றுலா' வரும் ஆதிக்கச் சாதி ஈழத் தமிழரின் உணர்வை – "போகிறான் போ மூட நம்பிக்கை' என ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனென்றால் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை "வெள்ளாள நயினார்'களால் "அடிமைக் குட்டிகள்' என அழைக்கப்பட்டு, வேளாளப் பரம்பரையின் சிறைக் குடிகளாக அடிமை ஊழியம் செய்து வந்த கோவிலர், நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் மட்டுமல்ல, தேச வழமைச் சட்டப்படி கீழ் சாதியினராகவே மதிப்பிடப்பட்ட கரையாளர் உட்பட ஒடுக்கப்பட்ட இனக் குழுக்களே – இன்றைக்கும் போர்க் களத்தில் பொடியன்களாக, கரும்புலிகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்த போது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும்போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது? சாவு வீட்டில் யாம் சாதி பாராட்டுவதாகக் குற்றம் சுமத்த முயன்றால், இழவு சொல்லி, சடலம் காவி, மாரடித்து அழுது, வெள்ளை கட்டி – மாற்றுக் கொடுத்து, மயிர் நீக்கி, தீச்சட்டி காவி, பொரி எறிந்து, சவம் எரிக்க விறகு வெட்டி, தென்னை மேய்ந்து, பறை மேளம் கொட்டி, பிணத்தை எரிப்பது வரை, எம் மக்களுக்கு சாவு வீட்டிலும் பணிகளைப் பிரித்துத் தந்து ஊழியம் செய்ய வைத்த உங்கள் கொடுமைகளைச் சொல்லி அழுவதைத் தவிர, எமக்கு வேறு நாதியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“தன்னை ஏற்றுக் கொள்ளாத தலைவர்களையெல்லாம் கொன்றவர் பிரபாகரன். தமிழ் ஈழம் உருவானால் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தவே விரும்புவதாக பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனையோ, வேறு எந்தத் தனிப்பட்ட நபரையோ தி.மு.க. ஆதரிக்கவில்லை. ஈழத்தில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தகுதி, பற்று, பாசம், தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்களுக்கு அதற்கான உரிமை சிறிதும் இல்லை'' (3.2.09, தி.மு.க. பொதுக்குழுவில்) என பார்ப்பன அதிகார வர்க்கத்திற்குக் காட்டித் தரும் வேளாள சாதி இந்துக் கட்சியின் தலைவரான மு. கருணாநிதி உரிமை கொண்டாடும் போது, அனைத்தையும் இழந்து, வரலாற்றின் கொடும் கரங்களில் வாழ்வை ஒப்புவித்திருக்கும் எம் மக்கள் பேசக்கூடாதா? ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, இந்திய மண்ணில் நிகழ்ந்து வரும் அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கவும், தீர்வு காணவுமான தகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை, மு.க. உள்ளிட்ட எவருக்கும் நாம் முரசறைந்து சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“விடுதலைப் புலிகள்தான் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தலைமை ஏற்க வேண்டும் என்று நான்கு கட்சிக் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறோம். அந்தக் கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான் என்ற முடிவில் இருக்கிறார்கள்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுவதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். குருதி கொப்பளிக்கும் இயக்க வரலாற்றின் ஊடாகத்தான், ஈழ மக்களின் கனவும் எதிர்காலமும் தளும்பி நிற்கிறது. தேர்தல் வாக்குறுதி, கூட்டணி தர்மம் என எல்லாவற்றையும் நன்கு அறிந்த கருணாநிதியும், ஈழத் துயரத்தின் "முடிவை' எதிர்நோக்கியிருக்கும் மனித உரிமைக் காவலர்களும், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்ற வகையில் ஈழ மக்களுடனான உரையாடலிலிருந்து – விடுதலைப் புலிகளைப் பிரிக்கவோ, தவிர்க்கவோ இயலாது என்பதை உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் 26.12.2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு, 15.1.2009 அன்று மறைமலை நகரில் ஈழத் தமிழரின் துயர் நீக்க உண்ணா நோன்பு, 2.4.2009 முதல் தமிழர் நடைபயணம் என உணர்வுப் பூர்வமாகச் செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளையும் தொல். திருமாவளவனையும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே' எனத் தலைப்பிட்ட நாளிதழ்களின் (6.2.2009) விளம்பரம் வழியே, “இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில் ஒன்றாக இருப்போம் வாரீர்'' என நைச்சியம் பேசி, "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்'திலிருந்து "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'க்குள் உட்செரித்துக் கொண்டதைப் போல, எம் மக்களின் குருதிச் சேறாகிப் போன வரலாற்றை – கலைஞரால் உண்ணவோ, விழுங்கவோ அல்ல; முகரவோ கூட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;“தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், சிங்கள மாநிலம், பொதுவான மய்ய அரசு, கூட்டாட்சி அரசியலமைப்பு'' என 1949லேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் முன் வைத்த அரசியல் தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் – ஆயுதவழிப் போராட்டமோ, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் பாரிய மனித இனப் படுகொலையோ நிகழ்ந்திருக்க முடியாது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், அய்க்கிய தேசியக் கட்சியும் சிங்கள தேசிய இன அரசியலைப் பாசிச வரலாற்றோடும், சிங்கள உழைக்கும் மக்களை மீள முடியாத குற்ற உணர்ச்சியிலும் புதைத்து விட்டன. ஆனால், இதை உணர்ந்திருப்பவர்கள் மிகச் சிலரே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் பல்லின மக்களின் அடிப்படைத் தேவைகள், சிறப்புரிமைகள், அரசியல் போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய கோரிக்கைகள் இவற்றை கவனத்தில் கொண்டு, விடுதலை வரலாறு நகர்ந்து சென்றிருக்க வேண்டிய பாதைகளையும் நம்பிக்கையையும் மீளாய்வது என்ற அக்கறையின் பொருட்டே, நாம் விவாதிக்கத் தளைப்படுகிறோம். அடிப்படையில் "தனித் தமிழீழம்' அதன் கருத்தியல் பின் புலத்தில், நிலப்பிரபுத்துவ எச்சங்களைக் கைகழுவாத, ஒரு முதலாளித்துவக் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டுமானம் குறித்தும் மிகை மதிப்பீடுகளையே எப்பொழுதும் முன்வைத்து வந்த தமிழ்த் தேசியவாதிகள், “தெற்காசியாவில் அமையப் போகும் முதல் சோசலிசக் குடியரசு – தமிழீழம்'' என்றெல்லாம் மிகையுச்சமாய் (தியாகு, சுப.வீரபாண்டியன், பெ. மணியரசன் போன்றோர்) எழுதியும் பேசியும் வந்தனர். மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரமாக, சோசலிசம் தமிழ்த் தேசியவாதிகளின் நாவில் சுழன்று கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் சோசலிசக் குடியரசுகளை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் யாவும், எந்தவொரு நாட்டிலும் மக்கள் திரள் போராட்ட வடிவங்களோடு இணைந்தே நின்றன. ஆனால் திலீபனின் உண்ணா நோன்பு தியாகத்திற்குப் பிறகு, தமிழீழ விடுதலையின் ஏகபோக பாத்திரத்தை விடுதலைப் புலிகள் கைக்கொண்டு, மக்கள்திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை மழுங்கடித்து விட்டனர். புகலிடங்களில் வாழ்ந்து வருபவர்கள் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தி வந்தனர். ஈழத்தில் புலிகளின் அரசியல் துறை ஒரு நிர்வாக எந்திரம் போல மட்டுமே செயல்பட்டு வந்தது. அனைத்து மக்களின் விருப்பங்களும் பங்கேற்பும் ராணுவத் துறையிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனமான மக்கள் போராட்டத்தினின்று அந்நியப்பட்டு, நம்பிக்கைகளிலேயே காலம் கழித்து வந்தனர். இத்தகைய நம்பிக்கைகளின் ஊடாகத்தான் இந்து மதமும், சாதி அணிகளும் தம்மைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன. எப்பொழுதும் குப்பி கடிக்கத் தயாராக இருந்த இயக்க உணர்வில் சாதி பாராமுகத்துடனேயே இருந்தது. ஆனால் தேங்கிக் கிடந்த வாழ்வு தழைக்குமென்ற கனவிலும், சமூகக் கட்டுமானத்திலும் சாதியம் குடிகொண்டேயிருந்தது. புகலிடங்களிலோ காதலிலும், மண நிகழ்வுகளிலும், சடங்கு – சம்பிரதாயங்களிலும், தோழமையிலும் கூட சாதி கொடிகட்டிப் பறந்தது; பறக்கிறது. நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்திலும் அபின் மயக்கத்திலும் வீழ்ந்து கிடந்த மங்கோலியப் பேரினத்தை நெடும் பயணங்களில் கடந்து, உணர்வெழுப்பி, அறிவூட்டி, செம்படையாக்கிய பிறகே மாவோவின் "சீன மக்கள் குடியரசு' மலர்ந்தது. சீனத்தில் மத நம்பிக்கைகளின் இடத்தை "விடுதலைக் கனவு' பதிலீடு செய்தது. ஈழத்திலோ விடுதலைக் கனவை மத – சாதி விருப்பங்கள் ஊடறுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.keetru.com/images/mukilan_400.jpg" alt="Mukilan" width="377" align="right" border="0" height="400" /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தமிழர்களின் "இந்து மத அடையாளமே' மக்களின் நான்கில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களை விடுதலைப் போராட்டத்தினின்றும் அந்நியப்படுத்தியது. கூடுதலாக, முஸ்லிம்களும் மொழியை விட மத உணர்வுகளையே முதன்மைப்படுத்தினர். மலையக மக்கள் தமிழீழத்துடன் இணைய நிலம் தடையாகிப் போனது எனில், முஸ்லிம்களுக்கு மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சோசலிசத் தமிழீழம்' என 80களில் இயக்கங்களில் விவாதிக்கப்பட்ட சொற்றொடர், செயல்திட்டமாக வளர்த்தெடுக்கப்படவில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தத்துவ அடித்தளம் குறைந்த அளவேனும் மதச் சார்பற்றதாகக் கூட முன்மொழியப்படவில்லை. துரோக முத்திரை குத்தப்பட்ட – தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய – சில கொலைகள், சகோதர உயிரழிப்புகள், முன்னணிகளும் மக்களும் அரசியல் கல்வியால் பயிற்றுவிக்கப்படாதது போன்ற உலகின் பார்வைக்கு வந்த செயல்கள் – இயக்கத்தை ராணுவ வாதம், பாசிசம் என விமர்சித்து, இறுதியில் "பயங்கரவாதம்' என்ற முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், சித்திரவதைகள், வன்புணர்ச்சிகள், கருவழிப்புகள், கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், கிளஸ்டர் குண்டுகள், பதுங்கு குழிகள், நெருப்புக் (பாஸ்பரஸ்) குண்டுகள், எறிகணைகள், பட்டினிச் சாவுகள் எனப் பேரின கொலை வெறியின் யுத்த பயங்கரத்தையும் மரண வாழ்வின் உச்ச நிலையையும் தமிழீழ சமூகம் மலையை விழுங்குவது போல கடந்து வந்திருக்கிறது. தடை செய்யப்பட்ட நாடுகளிலெல்லாம் இயக்கத்தின் கொடியேந்தி, ஈழமக்கள் கடந்த சில மாதங்களாக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்து விட்டதாக, இலங்கை அரசும் இந்திய சூழ்ச்சியும் இறுமாந்திருக்கின்றன. ஆனால், இயக்கம் அரசியல் ரீதியாக வென்று விட்டதாக நாம் உறுதி கொள்ளலாம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களாக உலகெங்கும் வாழும் ஈழ மக்கள் மாறியிருக்கின்றனர். அவ்வகையில் இது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியும் கூட. "வாளெடுத்தவன் வாளால் வீழ்வான்' என முதலாளித்துவ ஜனநாயகம், போராடும் மக்களை எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தைப் போராடும் மக்களின் "எதிரிகளே' தீர்மானிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழவிடுதலைப் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் உலகின் கவனத்திற்கு வந்திருக்கும் காலகட்டம் இது. "தனி ஈழமே தீர்வு' எனும் முக்கியத்துவம் உலக நாடுகளால் உணரப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை நோக்கி நகர்ந்தால், பவுத்தம் மட்டுமே அரச மதம் என்ற மேலாதிக்கம் நீக்கப்பட்டு, இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படவேண்டும். தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சிப்பகுதிக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். மத – இன அடிப்படையிலான மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் அமைப்புகளைத் தடை செய்து, மத உரிமைகளை தனி மனித உரிமையாக்கி, அனைத்து மக்களுக்குமான அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய, புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களை மொழிவழி குடிமக்களாக அங்கீகரித்து, அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். வடக்கு – கிழக்குப் பகுதிகளை இணைத்து பூர்வீகக் குடிமக்களின் தாயகமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஈழ மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் அய்.நா. தலைமையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைப்படின், வடக்குப் பகுதி, கிழக்கு மாகாணம், இசுலாமிய சமூகம் மற்றம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் கருத்துக்களை அறிய கிழக்கு திமோர், கொசோவா ஆகிய நாடுகளில் நடந்ததைப் போன்ற வாக்கெடுப்புகளை அய்.நா. மேற்கொள்ள வேண்டும். போர்க் குற்றங்கள் குறித்து உலக நீதி மன்றம் முழுமையான விசாரணை ஒன்றையும் நடத்த முன் வரவேண்டும். அமைதி திரும்புவதற்கான இந்நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுமாயின், "விடுதலைப் போராட்டம்' இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதாகவே பொருள் கொள்ளப்படும். சிங்கள அரசு பெற்றிருப்பது ராணுவ ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக அது கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. "வெற்றிக் களிப்பு' சிங்களப் பேரினவாதத்தை மீண்டும் நிலைநாட்டுமெனில், “இலங்கை நிம்மதியாக இருக்க முடியாது'' என்ற விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை சிங்கள சமூகமும், உலக நாடுகளும் அலட்சியப்படுத்தக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மனித விழுமியங்களும் ஜனõயகக் கோட்பாடுகளும் தழைக்கும் நாடாக, இலங்கையை மாற்றியமைக்கும் வரலாற்றுக் கடமை – இன்று சர்வதேச சமூகத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கென தார்மீக ரீதியாகப் போராட வேண்டிய பொறுப்புணர்வு தாய்த் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமானது. "அண்டை வீட்டுக்காரன் பசியோடிருக்க, நீ மட்டும் உண்ணலாமா?' எனும் (திருக்)குர்ஆனின் வலியுறுத்தலை, மதம் கடந்த குற்றவுணர்ச்சியாக ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் உணர வேண்டும். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;" align="justify"&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தலித்முரசு ஏப்ரல் 2009ல் எழுதியது.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-8886698336483115102?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/8886698336483115102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=8886698336483115102' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8886698336483115102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/8886698336483115102'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/05/3.html' title='ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் - 3'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-173078715021415119</id><published>2009-04-29T22:05:00.002+05:30</published><updated>2009-08-26T01:12:38.114+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் 2</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் உரிமைகளைத் தீவிரமாக முன்னெடுக்க 1971இல் தமிழ் மாணவர் பேரவையும், 1972இல் தமிழ் இளைஞர் பேரவையும் – நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே – சில இளைஞர்களால் தொடங்கப்பட்டன. இவை முறையான அமைப்பு வடிவமோ, கொள்கைத் திட்டமோ இன்றி செயல்பட்டு வந்தன. இச்சூழலில்தான் 1974 சனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, எவ்வகை அரசியல் சார்புமற்றுத் தமிழறிஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் இறுதி நாளன்று, இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் கலவரத்தை ஏற்படுத்தி, 9 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு, தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இருவர் உட்படப் பதினொரு தமிழரின் படுகொலைக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவைப் பழிதீர்க்க, வெடிகுண்டுகளுடன் சென்ற தமிழ் இளைஞர் சிவக்குமரன், தனது நடவடிக்கை தோல்வியைத் தழுவியதால், காவல் துறையின் பிடியிலிருந்து தப்பிக்க "சயனைட்' விழுங்கி உயிர் நீத்தார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "சயனைட்' குப்பி கடித்த முதல் போராளி எனும் பெருமையோடு, இவரது சிலை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் உரிமை பறிப்பு, தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தடை, தமிழ் மக்கள் வாழ்வின் மீதான நெருக்கடி எனச் சிங்கள அரசின் இனவெறி மேலாதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இச்சூழலில்தான்  14.5.1976 அன்று வட்டுக்கோட்டை – பண்ணாகம் என்ற இடத்தில் தமிழ்த் தலைவர்களும் மக்களும் ஒன்று கூடி, "தனி ஈழமே' தீர்வு என மாநாட்டுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தனர். இத்தீர்மானத்தை முன்னிறுத்தி, 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் 19 இடங்களில் 18 இல் தமிழர் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.  இது, தனி ஈழக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கணிக்கப்பட்டது. இதற்கு முன்னரே, ஆயுதம் தாங்கிப் போராடுவதே விடுதலைக்கு வழிவகுக்கும் என முடிவெடுத்து, சில இளைஞர் குழுக்கள் தலைமறைவாகச் செயல்படத் தொடங்கி யிருந்தன. ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்த   விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 மே மாதத்தில் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு வடிவத்தோடு, தமது இயக்கத்தைத் தொடங்கியது. இதையொட்டியே, 1979 சூலையிலிருந்து இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடையே தமிழீழக் கோரிக்கை செல்வாக்குப் பெற்றதை, தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் அறிவுச் செயல்பாடாகவே சிங்கள அரசு கருதியது. இதனை முறியடிக்கும் வகையில் தென் ஆசியாவின் மிகப் பெரியதும் மிக அரிய நூல்களைக் கொண்டதுமான, தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நூலகம் 31.5.1981 அன்று நள்ளிரவில் இலங்கை ராணுவம் மற்றும் காவல் துறையால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1933 இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா என்பவரின் முயற்சியால் 844 நூல்களுடன் தொடங்கப்பட்டு, 1959இல் பொது நூலகமாக விரிவடைந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களும், தமிழர் வரலாறு கூறும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளும் தீக்கிரையாகின. இதிலிருந்தே, தமிழர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களைத் துடைத்தழிப்பதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பேரினவாத வெறியைப் புரிந்து கொள்ள முடியும். 1983இல் வெலிக்கட சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 56 போராளிகள் கடும் துன்புறுத்தலுக்குப் பிறகு கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் தமிழ் இளைஞர்களைப் பெருமளவில் ஆயுதப் போராட்டப் பாதைக்கு அணி திரட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "கறுப்பு சூலை' என அழைக்கப்படும், 1983ஆம் ஆண்டின் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலுக்குக் கொழும்பு நகரத்தில் மட்டும் 3000 தமிழர்கள் பலியாகினர். தமிழர்களுக்கு உடைமையாயிருந்த ஆலைகள் உட்படப் பல்வேறு சொத்துகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில் தொடங்கிய ராணுவத் தாக்குதல், 1987ஆம் ஆண்டு மே மாதம் "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற பெயரில் யாழ்குடா நாட்டை முற்றுகையிட்டு, தமிழர் உயிர் வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் அழிக்கும்வரை நீண்டது. இக்கால கட்டங்களில்தான் இலங்கையிலிருந்து ஏறக்குறைய பத்து லட்சம் தமிழர்கள் அகதிகளாக, இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.&lt;br /&gt;1970களின் இறுதியிலிருந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை அல்லது படுகொலை செய்யப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;காலம்வரை – எல்.டி.டி.ஈ., பிளாட், ஈராஸ், இ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ என அனைத்து ஈழப் போராளிக் குழுக்களும் இந்திய ராணுவத்தின் உதவியோடு, "ரா' உளவுப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இந்திய ஆளும் வர்க்க அதிகாரிகளால் சில ஆண்டுகள் கையாளப்பட்டதன் விளைவாக, இப்போராளிக் குழுக்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட, சகோதரச் சண்டைகளில் போராளிகள் பலரும் ஒன்றுமறியா மக்களும்கூடக் கொல்லப்பட்டனர். 1971இல் பாகிஸ்தான் மீது படையெடுத்து "பங்களாதேஷ்' என்ற நாட்டை உருவாக்கியது; பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டியது; அணிசேரா நாடுகளுக்குத் தலைமையேற்று அமெரிக்க – அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கு இணங்க மறுத்தது; தெற்காசியத் துணைக்கண்டப் பகுதியில்இந்திய நாட்டின் மேலாதிக்கத்தை நிறுவுவது என இந்திரா காந்தியின் அயலுறவுக் கொள்கைகள் சார்ந்த அரசியல் தலைமைப் பாத்திரமே, ஈழ விடுதலைக்கு ஆதரவு நல்கும் விதமாக, இந்திய அரசின் அப்போதைய நிலைப்பாட்டைத் தீர்மானித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் காந்தி காலத்தில் 1987இல் யாழ்குடா முடக்கப்பட்டு, அன்றாட வாழ்வே கேள்விக்குறியான சூழலில், உடனடித் தேவையான உணவுக்கும் வழியின்றித் தவித்த மக்களுக்கு, 1987 சூலை 3 அன்று இந்திய அரசு ராமேஸ்வரத்திலிருந்து உணவுப் பொருட்களைக் கடல் வழியே அனுப்பி வைத்தது. இலங்கை அரசு அக்கப்பல்களை அனுமதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பியது. ஆனால், இந்திய அரசு அடுத்த நாளே விமானங்கள் மூலம் யாழ் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கியது. தனது நாட்டின் எல்லைக்குள் அனுமதியின்றிப் பறந்து, தரையிறங்கிய இந்திய ராணுவத்தை எதிர்க்கும் வலிமை இலங்கை அரசுக்கு அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;1961 இந்திய – சீன எல்லைப் போரில், இலங்கை அரசு சீனத்தை ஆதரித்தது. இலங்கை சீனத்தை ஆதரிப்பதற்கான அடித்தளம் பவுத்தமாக இருந்தால், இந்திராவின் இந்தியா ஈழத்தை ஆதரித்ததற்கான அடித்தளம் இந்து மதமாகத்தானே இருக்க முடியும்? ஆனாலும் இந்திராவுக்குப் பிறகு, இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை அரசியல் மற்றும் ஈழ விடுதலை குறித்தான நிலைப்பாடுகளைப் படிப்படியாக மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டது. இந்திரா அளவிற்கு அரசியல் தேர்ச்சியும், சூழ்ச்சியுமற்ற அவரது புதல்வர் ராஜிவ் காந்தி, இந்திய ஆளும் வர்க்கத்தின் உயர் அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட, "கார்ப்பொரேட்' நிறுவனமொன்றின்  தலைமை இயக்குநர் போலவே செயல்பட நேர்ந்தது. இயல்பிலேயே தமிழ்த் தேசிய அரசியலால் வெறுப்புற்றிருந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவைக் கை கழுவி,  இலங்கை அரசையும் போராளிக் குழுக்களையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கும்படி ராஜிவுக்கு ஆலோசனை கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்னணியில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு – கிழக்குப் பகுதிகளை அங்கீகரிக்கவும், அதிகாரப் பரவலுடன் சம உரிமைகளுக்கு வழி வகுக்க வும் இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து, 1987இல் ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், இலங்கை அரசு மற்றும் ஈழப் போராளிகளுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் எனக் காரணங்கள் பூசப்பட்டு, "அமைதிப்படை' என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர் வாழிடங்களில் அத்துமீறி அம்மக்களை அழித்தொழித்து, ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவில் உயரதிகாரியாகப் பணியாற்றிய கர்னல் ஹரிஹரன், "த சண்டே இந்தியன்' வார இதழுக்கு, அளித்த நேர்காணலில் (25।1।09), ""ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து, 15.9.1987 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான திலீபன், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியபோது, இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களைப் புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினர். ஆனால் புது டில்லி இந்த சிக்கலைக் கையாளும் பொறுப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. இறுதியாக செப்டம்பர் 26, 1987இல் திலீபன் மரணமடைந்த போது, புலிகளுக்கும் இந்தியப் படையினருக்குமான உறவு மேலும் கசப்படைந்தது'' எனக் கூறியிருக்கிறார். இது, ஈழத் தமிழர் நலனில் இந்திய அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருந்த அக்கறையின்மையையும், இந்திய "அமைதிப் படை'யின் நோக்கத்தையும் அம்பலப்படுத்துவதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், இலங்கை ராணுவத்தின் அத்தனை பாசிசக் கழிசடைத்தனங்களை இந்திய ராணுவமும் செய்தது. இதன் விளைவாக, அவர்களை விடுதலைப் புலிகள் நேர் நின்று எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்திய ராணுவத்தைச் சிலபோராளிக் குழுக்கள் ஆதரித்து நின்றாலும், இந்திய ராணுவம் தன் "யோக்கியதை'யையும் படை வலிமையையும் இழந்து, இலங்கையிலிருந்து பெருத்த அவமானத்துடன் நாடு திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் 13ஆவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட ராஜிவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை உச்ச நீதிமன்றம் தடைசெய்துவிட்டது. 1991 மே 21 அன்று ராஜிவ் காந்தி தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது கொல்லப்பட்டார். இக்கொலையின் புலனாய்வுக்குப் பிறகு, குற்றம் சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஈழ விடுதலைக்கு வீதியில் இறங்கிப் போரõடிய தமிழக மக்களின் மனங்களில் அச்சமும் அந்நியத் தன்மையும் குடி கொண்டன.  இதன் பின்னணியில் ஈழ விடுதலைக்கு எதிரான  தம் விருப்பங்களுக்கேற்ப, இந்திய ஊடகங்கள் – நடுவண் உளவுப் பிரிவு – அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது பார்ப்பன ஆளும் வர்க்கம்; அல்லது மேற்சொன்னவற்றின் துணையோடு, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் திரைமறைவுத் திட்டங்களினூடே ஒழிக்கவும் இன்றுவரை முயன்று வருகிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் தொழில் நுட்பமும், முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடுகளும் ஒருங்கே கைகோத்தபோது, அமெரிக்க – அய்ரோப்பிய நாடுகள் தம் அரசியல் மேலாதிக்கத்திற்கும் பொருளியல் சுரண்டலுக்கும் புதிய பாதைகளைக் கண்டறிந்தன. இதன் முதற்கட்டமாக, உலக வர்த்தகக் கழகமும், பன்னாட்டு நிதியமும் உலக முதலாளிகளுக்கு வகுத்துத் தந்த திட்டம்தான் "டங்கல் – காட் ஒப்பந்தம்'. உற்பத்தித் திறனிலும் மூலதனத் திரட்டலிலும் பின்தங்கி, பொருளாதாரத் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியா போன்ற வளர்முக நாடுகளைத் தம் கைப்பிடிக்குள் சிக்க வைக்க,  இத்திட்டம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரிதும் உதவியது. உலக அரங்கில் முதலாளித்துவப் பெருமிதங்களின் அடையாளங்களில், தாமும் தன்னால் வழிநடத்தப்படும் இந்தியாவும் இடம் பெற வேண்டும் என்ற ராஜிவ் மற்றும் அவரை உயர்த்திப் பிடித்த இந்தியத் தரகு முதலாளிகளின் கனவு, இயக்கப் போக்கில் இத்திட்டங்களை வரித்துக் கொள்வதில் நிலைத்தன. இந்தியாவின் "இளம் தலைவர்' எனக் கொண்டாடப்பட்ட ராஜிவ், புதிய பொருளாதாரக் கொள்கைகளை இந்திய உற்பத்தித் துறைக்கும், சந்தைக்கும் அறிமுகப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வங்கியின் அறிவுத் துறை தரகர்களாகப் பயிற்சி பெற்ற, மன்மோகன் சிங்கும் ப. சிதம்பரமும் ராஜிவ் காந்தியின் கரங்களாகச் செயல்பட்டனர். இந்தியாவின் நட்பு நாடாக விளங்கிய சோவியத் ரஷ்யா கெடுவாய்ப்பாக, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு நாட்டைத் திறந்துவிட, தாராளவாத நெகிழ்வுத் தன்மையில் உடைந்து நொறுங்கி, சர்வதேச அதிகார பலத்தை இழந்தது. உலக அரசியல் – பொருளியல் – ராணுவ மேலாதிக்கத்திற்குத் தலைமை தாங்க, அமெரிக்கா போட்டியின்றித் தேர்வானது. சோவியத் ரஷ்யாவின் தோழமை நாடு என்ற பிம்பம் மெல்ல மறைந்து, அமெரிக்காவின் தீவிர ஆதரவு நாடுகளில் ஒன்றாக, இந்தியா தனது அடையாளத்தைப் பேணி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பொருளாதார நலன்களுக்காக அமெரிக்கா, இந்தியாவின் முகத்தைப் புனரமைப்பது போல, இந்தியாவும் இலங்கையின் முகத்தை தன்னுடைய மேலாதிக்க நலன்களுக்கேற்பவே புனரமைக்க விரும்புகிறது. இலங்கையின் நெல் உற்பத்தியில் மூன்றிலொரு பங்கும், மீன்பிடித் தொழிலில் 90 சதவிகிதமும், கடல்சார் ஏற்றுமதியில் பெரும்பங்கும் ஈழத்தைச் சார்ந்தே இருந்ததும், மொழி வழி தேசிய இனமாக இந்தியாவோடு தொடர்பு கொண்டிருந்ததும், நவீனத் தொழிற்நுட்பம் வளர்ச்சியடையாத இந்திரா காலத்து இந்தியாவுக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய தாராளவாத முதலாளித்துவக் கோட்பாடுகள் – பரந்துபட்ட சந்தையையும், மூலதன வளர்ச்சிக்கான திறன்மிக்க (உற்பத்தி சக்திகளை) மனித ஆற்றல்களையுமே முதன்மையாகக் கோருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;15.2.2009 அன்று, சென்னையில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் பேசிய சிங்களப் பத்திரிகையாளரும் இடதுசாரியுமான சிறீதுங்க ஜெயசூர்யா, ""உலகம் முழுவதும் பிரபலமான இலங்கைத் தேயிலை என்பது, உண்மையில் "சிலோன் டீ' அல்ல; அது "டாடா டீ'. இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 60 சதவிகிதம் "டாடா' குழுமத்திற்கே சொந்தமானது. மேலும், இலங்கையின் எந்திரத் தொழில்துறையும் ஊர்திச் சந்தையும் கூட அசோக் லேலண்ட், பஜாஜ்,&lt;br /&gt;டாடா, மகிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன. இந்திய முதலாளிகளின் பரவலான வணிகச் சந்தைக்கும், நீண்டகால வர்த்தகத்திற்கும் ஒன்றுபட்ட இலங்கையே முக்கியமானது'' என்று குறிப்பிட்டதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அண்மையில் கூட, ராஜபக்சேவின் தொழில் நுட்ப ஆலோசகராக "இன்போசிஸ்' நாராயணமூர்த்தியை இந்திய அரசு நியமித்தது. சில நாட்களுக்குப் பிறகு நாராயணமூர்த்தி அதை ஏற்க மறுத்து விட்டாலும், பின்னாளில் இலங்கையின் தொழில் நுட்ப உள்கட்டுமானங்களை நிர்மாணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் இந்தியாவின் தலையீட்டு உரிமையை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். இப்போதுகூட திரிகோணமலையில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை இந்திய அரசு நிர்மாணித்து, நிர்வகித்து வருகிறது. மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெட்ரோலிய வள ஆய்வுகள் பின்னாளில் குஜராத் எண்ணெய்க் கிணறுகளைப் போல, அம்பானி குழுமத்திற்குத் தாரை வார்க்கப்படலாம். இவ்வகையில் இந்தியாவின் பொருளியல் பயன்கள் ஈழப்பிரச்சனையை ஒருபுறம் அணுக, இன்னொரு புறத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் கேந்திர முக்கியத்துவமாக வினையாற்றுகின்றன. இதையும் ஒரு பார்ப்பன வாக்குமூலத்தின் வழியாகவே இங்கு புரிந்து கொள்வது எளிதாகயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திய – இலங்கை பிரகதி சன்சதியா' என்ற அமைப்பு அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரியும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய சேஷாத்ரி, ""இலங்கை விவகாரத்தில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவு தராத நாடுகள் இலங்கையும் பூடானும்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையில் நல்ல பயன்பாடு உண்டு. பொருளாதார ஒப்பந்தங்கள் போட நல்ல சூழல் வர வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனத்தில் வைத்துத்தான் முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கும் ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விசயங்கள் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் பலம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிபர் ராஜபக்ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி.யாக இருந்தபோதே, 1999இல் பா.ஜ.க. ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தபோது, டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் என்பதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில் மொழிவாரியாகவோ, இனவாரியாகவோ அல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி (பஞ்சாயத்து ராஜ்) அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே, இலங்கைத் தமிழர்களுக்குப் பலன் கிடைக்கும். சிங்கள மக்களை எதிர்த்துத் தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது'' என சிங்கள இனவாதத்தின் குரலாகவே ("ஜுனியர் விகடன்' பிப்ரவரி.4. 2009) தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன – இந்துத்துவவாதிகளின் "இந்து ஒற்றுமை' என்பது, இந்தச் சமூகத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் இந்திய அதிகார வர்க்கத்திற்கான முதலாளித்துவ நலனும்தான் என்பதே, சேஷாத்ரி போன்றவர்களின் வாக்குமூலத்திலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மையாகும். ஆனால், தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசியவாதிகளோ பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் என இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அண்டை நாடுகள் இருக்கும் சூழலில், தமிழீழமே இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும் என இந்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாக உருவாக்கியதைப் போல, இலங்கையிலிருந்து தமிழீழத்தை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையைப் போல ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையிலும், ஏறக்குறைய 3 லட்சம் கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுல்பிகார் அலி புட்டோவின் அரசால் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அகதிகளாகக் குடியேறினர்.   இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபடும் ராஜபக்சே அரசும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "ஜனநாயக' அரசுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உருது மொழியே, கல்வி – நிர்வாகம் – ஆட்சியதிகாரம் ஆகியவற்றின் மொழியாக இருக்கும் என பாகிஸ்தான் அரசு செயல்படுத்த முனைந்ததே, அம்மக்களைப் பெரும் கிளர்ச்சியில் இறங்கத் தூண்டியது. டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வெறியர்கள், ஒட்டுமொத்த மாணவியர்களையும் கடத்திச் சென்று வன்புணர்ச்சியில் சீரழித்த கொடுமை ஒன்றே, பாகிஸ்தானின் ராணுவ பாசிசத்தைப் புரிந்து கொள்ள உதவும். பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற நாளில் மக்களிடம் உரையாற்றியபோது "பாலியல் பலாத்காரத்தில் பாதிப்புக்குள்ளான நம் இளம் பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்' என முஜிபுர் ரகுமான் கண்ணீரோடு குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அரசியல் அதிகார வெறிக்கு இந்துத்துவம் இந்தியாவில் பங்களிப்பதைப் போல, இஸ்லாமிய மத அடையாளமோ, உணர்வோ பாகிஸ்தான், பங்களாதேஷ் உறவுக்குப் பயனளிக்கவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த&lt;br /&gt;மக்களையே கொடூரமாகக் கொன்றழித்தும், ராணுவ முகாம்களில் பெண்களை வல்லுறவுகளில் சிதைத்தும் பாகிஸ்தான் ராணுவம் நரவேட்டையாடியதும், இந்தியப் படையெடுப்புக்கு நியாயமான காரணங்களாக சொல்லப்பட்டன। ஆனாலும் பங்களாதேஷை உருவாக்கியது, இந்தியாவிற்கு வெளியே பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும்பலவீனப்படுத்துவதற்கேயன்றி வேறல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்ற போதிலும், தனி ஈழத்தை உருவாக்க இந்திய அரசு விழையவில்லை। காரணம் வெளிப்படையானது: அப்போதும், இப்போதும் இலங்கைத் தீவின் மீதான மேலாதிக்கத்தால் விளையும் பொருளாதாரப் பயன்கள்। மற்றொன்று, இலங்கையின் இந்து சமூக மேலாதிக்கத்தில் பார்ப்பனர்களின் நேரடிப் பங்கு இல்லாதது. தமது மேலாதிக்கத்திற்கான நேரடிப் பயன்இல்லாதபோது, பார்ப்பனர்கள் சூத்திரர்கள் குறித்தோ, பஞ்சமர்கள் குறித்தோ இந்து எனும் உணர்வில் கவலை கொள்வதில்லை. ஈழ விடுதலைக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், நிராகரித்தும் "இந்து' நாளேடு தொடர்ந்து எழுதி வருவது இவ்வகைப்பட்டதே. ஆக, பார்ப்பன ஆளும் வர்க்கமும் இந்திய முதலாளிகளும் தமக்கான நேரடிப் பயன்பாட்டிலிருந்தே, இந்திய அரசுக்கான உள்விவகார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்குப் பின்னே அடித்தளமாக இருப்பது, பெரு முதலாளித்துவமா?  தரகு முதலாளித்துவமா? என்ற ஒற்றைக் கேள்வியே, இந்தியக் கம்யூனிஸ்டுகளின் விவாதப் பொருளாக இருக்கிறது. தேசிய இனங்களை ஒடுக்கும் "இந்திய தேசியம்' ஒரு கற்பிதமே என முழங்கி வரும் தமிழ்த் தேசியவாதிகள், இக்கற்பிதத்தைக் கட்டமைத்துக் காத்து வரும் கருப்பொருளைக் குறித்துக் குழப்பமான அல்லது வேறுபட்ட வரையறைகளையே முன்வைத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆளும் வர்க்கத்தை உருவாக்குவது இந்திய (தரகு/பெரு) முதலாளிகள் எனில், இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது இந்து மதமும், பார்ப்பனிய அரசியலுமே। இந்து மதத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டும், பார்ப்பனிய அரசியலுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டும்தான் – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் – இந்தியப் புரட்சி குறித்தோ, தேசிய இன விடுதலை குறித்தோ ஓயாது "வியாக்யானம்' செய்து வருகின்றனர்। இந்து மத எதிர்ப்பைத் தவிர்த்தும் பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடித்தும்,  உழைக்கும் மக்களின்அறியாமைக்கு ஊறுவிளைவிக்காமல், தத்தமது புரட்சிகரக் கோட்பாடுகளை வென்றெடுத்து விடலாம் என்ற இவர்களின் செயல்திட்டம் பிழைப்புவாதமாகவே முடிந்து போகும்।&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாராம்சத்தில் வர்ணாசிரமத்தையும், சாதி – தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்ப்பது மற்றும் அவற்றை அழித்தொழிப்பது என்ற சமூக, அரசியல் பண்பாட்டுச் செயல் திட்டத்தை முன்வைப்பதுமேயாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பார்ப்பனத் தலைமையில் இயங்குகின்றன; அதனால் அவர்களுக்கு இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பில் அக்கறையில்லை எனவும், இந்தியத் தேசியத்தின் கருத்தியல் அடித்தளமே இந்துத்துவம்தான் எனவும் குற்றம் சுமத்தும் தமிழ்த் தேசியவாதிகள், இந்துமத – பார்ப்பனிய எதிர்ப்பைச் செயலாக்குவது தமது புரட்சிகர வாய்ச்சொற்களில் மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;வறட்டுச் சூத்திர நாத்திகவாதமாகவும், மிகைப்படுத்தப்பட்ட இந்துமத – பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரமாகவும் திராவிட இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது எனக் குறைகூறி, திராவிட தேசிய(?)த்திற்கு மாற்றாகப் பரிணமித்த தமிழ்த்தேசியவாதிகள், இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பை ஏறத்தாழக் கைகழுவிவிட்டனர் என்றும், அவர்களின் கருத்தியல் அடித்தளமாக சைவ சிந்தாந்த நெறிகளே இயங்குகின்றன என்றும் குற்றம் சாட்டலாம். பார்ப்பன வேத மத மறுப்பில் சைவ சிந்தாந்த நெறிகள் வளர்ந்தன என்றாலும், சைவ – வைணவக் கலவியில் செழித்ததே இந்து மதமும் பார்ப்பனிய தர்மங்களும். இதனைப் புரிந்து கொண்டால், தமிழீழ விடுதலையை  முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் பிற்போக்குத் தன்மையையும், நவீன  அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில்  ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right; font-weight: bold;"&gt;– அடுத்த இதழிலும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;font-family:Latha;font-size:12px;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;font-family:Latha;font-size:12px;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style=";font-family:Latha;font-size:12px;"  &gt;&lt;strong&gt;அழிக்கப்படும் இலங்கை ஊடகங்களின் உரிமைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;யாழ்ப்பாணத்தில் 1981இல் "ஈழ நாடு' பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதில் தொடங்கி, 1987இல் இந்திய ராணுவம் "அமைதிப்படை' என்ற பெயரில் அட்டூழியங்கள் நிகழ்த்திய காலத்தில், யாழ்ப்பாணத்தில் "சாட்டர்டே ரிவ்யூ' வார இதழ் அலுவலகத்தில் குண்டு வீசியது; இந்திய ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் "ஈழமுரசு', "முரசொலி' ஆகிய பத்திரிகைகளின் அலுவலகங்களைத் தகர்த்தது மட்டுமின்றி, ரிச்சர்ட் பி கொய்சா (1990), "சரிநிகர்' செய்தியாளர் குருமூர்த்தி (1990), யாழ் பத்திரிகையாளர் நிமல்ராஜன் (2000, அக்டோபர்), "வீரகேசரி' செய்தியாளர் அய்யாத்துரை நடேசன் (மே, 2004), "தமிழ் நெட்'&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் தர்மரத்னம் சிவராம் (ஏப்ரல், 2005), சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர் சம்பத் லக்மால் (சனவரி, 2006), சரிநிகர் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகர் (2007), யாழ் செய்தியாளர் ரஜிவர்மன் (ஏப்ரல், 2007), யாழ் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் பரநிரூபசிங்கம் தேவகுமார் (மே, 2008), யாழ் "நமது ஈழ நாடு' ஊழியர் சிவமகா ராஜா (ஆகஸ்ட், 2006) மற்றும் "தினமுரசு'ஆசிரியர் அற்புதராஜா நடராஜா, வானொலிக் கலைஞர் கணேசபிள்ளை, கே.எஸ். ராஜா, அன்ரனி ஜேசுதாசன், ரேலங்கி செல்வராஜா, பாலநடராஜ அய்யர் என இன்றுவரை – ஈழ விடுதலைப் போராட்டச் சூழலில் படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-173078715021415119?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/173078715021415119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=173078715021415119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/173078715021415119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/173078715021415119'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/04/2.html' title='ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் 2'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-7936385868066435411</id><published>2009-03-27T15:38:00.007+05:30</published><updated>2009-08-26T01:08:06.716+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழம் - குருதியில் பூக்கும் நிலம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;" class="bltxtbold1"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;“இறுதியாக நான் கொல்லப்படும்போது அரசாங்கம்தான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். எனது மரணம் சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படக் கூடாது என்று நான் விரும்புகிறேன். தனி மனித விடுதலைக்கான ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதற்கான சக்திகளை எனது மரணம் திரட்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் பேசவில்லையென்றால், பேச முடியாதவர்களுக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; – லசந்த விக்ரமதுங்க,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தி சண்டே லீடர்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்த லசந்த விக்ரமதுங்க, 8.1.2009 அன்று காலை தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இலங்கை அரசப்படையின் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;“என் உடலைக் காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; – முத்துக்குமார்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/images/eelam_women_400.jpg" alt="Eelam women" width="400" align="right" border="0" height="288" /&gt; "பெண்ணே நீ' என்ற வார இதழில் கணினி தட்டச்சு ஊழியராகவும் திரைத்துறையில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்த முத்துக்குமார், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் 29.1.2009 அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் நீத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, எதேச்சதிகாரமாய் இலங்கை அரசு ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கி, அதற்குப் பதிலடியாய் அநுராதபுரம் ராணுவ விமானத் தளத்தை விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் கடந்த அக்டோபர் 22, 2007 அன்று முற்றுகையிட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, இலங்கை ராணுவத்தின் பயங்கரவாத வியூகம் தீவிரத் தன்மையடைந்தது. நார்வே அரசின் சமாதானத் தூதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு (இலங்கை அரசாலும்), விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளராக செயற்பட்டு வந்த, சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை ஒட்டியே, தமிழகத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் குரல்களும், ஈழ ஆதரவுப் போராட்டங்களும் மீண்டும் எழத் தொடங்கின. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வருக்கும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்களைத் திறக்க தமிழ்ச்செல்வனின் படுகொலையும், இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்களை வலுப்படுத்த, சிங்களப் பத்திரிகையாளரான லசந்தாவின் படுகொலையும், ஈழ மக்களுக்கு ஆதரவான குரல்களை ஒருங்கிணைக்க முத்துக்குமாரின் (தற்)கொலையும் பெரிதும் உதவியதில் முக்கியத்துவம் பெற்றன. இம்மூவரையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நடுவில் வரலாற்றுத் தேவைகளாக எழுந்த பரப்புரையாளர்களாக, இறுதிப் போரென வர்ணிக்கப்படும் இக்காலகட்டத்தில் குறிப்பது அவசியமெனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன விடுதலை அரசியலானது, படுகொலைகளின் ஊடாகவே தன் வரலாற்றை எழுதிச் செல்கிறது; அல்லது படுகொலைகளின் வரலாறாகவே பதிவு செய்யப்படுகிறது. உலகின் அனைத்து வரலாறும் படுகொலைகளின் வழியாகவே ரத்தத்தால் எழுதப்பட்டவை தாம் என்ற புரிதல் இருந்த போதிலும், இலங்கை இனப்படுகொலை அல்லது விடுதலைப் போராட்டமானது, நம் சமகாலத்தின் வரலாறாக இருப்பதால் நாம் பங்கேற்பாளராகவோ, பார்வையாளராகவோ இடம்பெற வேண்டியது கட்டாயமாகிறது. அதிலும் மொழி, இனம், சாதி என்ற அடித்தளத்தில் வேறு எவரையும் விட இந்தியத் தமிழராகிய நாம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இணைப் பயணிகளாக இருக்க வேண்டிய நெருக்கடியில், மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நெருக்கடியைச் சமாளிக்க வரலாற்றை ஆய்வு செய்வது இங்கு அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ நிர்பந்திக்கும் சிங்கள இனவெறியர்கள், தம்மை மட்டுமே இலங்கைத் தீவின் தொல்குடியினர் என கருதிக் கொள்கின்றனர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் இன்றைய ஒரிசா பகுதியிலிருந்து "விஜயன்' என்ற ஆரிய இன வழிவந்த மன்னன், தம் படையினரோடு இலங்கையில் குடியேறியதைக் குறிக்கும் வகையில், 1983ஆம் ஆண்டு அவனது வருகையின் 2500 ஆம் ஆண்டு நிறைவு அஞ்சல் தலையை இலங்கை அரசு வெளியிட்டது. விஜயனைத் தம் மூதாதையனாக ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள இனம், இந்தியாவிலிருந்து பின்னர் இறக்குமதி செய்து கொண்ட பெருஞ்செல்வமாக பவுத்தம் இருக்கிறது. ஆனால் ஈனயானம், மகாயானம் என ஆரியர்களால் ஊனமாக்கப்பட்டதைப் போலவே, இலங்கையிலும் பவுத்த நெறி ஊனமாக்கப்பட்டு, இன்று மரணப் படுக்கையில் வீழ்ந்துள்ளது. சிங்களம் பவுத்தத்தை இறக்குமதி செய்து கொண்டது எனில், தமிழர்கள் தமக்கென பெரும் கேடாய் இந்து மதத்தைத் தருவித்துக் கொண்டனர் என்றால் மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மன்னர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் இடையிலான ஆயிரமாண்டுகாலப் போர்களின் தொடர்ச்சியில், அய்ரோப்பியர்களின் உலக மேலாதிக்கத்திற்கான படையெடுப்புகளின் வரலாற்றுக்காலம், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவுடனான வணிகத் தொடர்புடன் தொடங்கியது. 1505ஆம் ஆண்டு சிங்களர்களோடு வணிகத் தொடர்பு கொள்ள, போர்ச்சுக்கீசியர்கள் தம்மை எதிர்த்துப் போரிட்ட தமிழ் மன்னன் சங்கிலியனை சிறைப்பிடித்து பின்னர் தூக்கிலிட்டனர். 177 ஆண்டு போர்ச்சுக்கீசியர்களின் காலனி ஆதிக்கத்தை, 1659ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கண்டி மன்னனோடு வணிக ஒப்பந்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஏறத்தாழ 112 ஆண்டுகள் நிலைப்பெற்றிருந்த டச்சுக்காரர்களின் ஆதிக்கம், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையோடு முற்றுப் பெற்றது. ஆங்கிலேயரைக் கடைசிவரை எதிர்த்துப் போரிட்ட பண்டார வன்னியன், இன்னொரு தமிழ் மன்னனின் காட்டிக் கொடுப்பால் இறுதியில் கொல்லப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;1833இல் தமிழ் மற்றும் சிங்களப் பகுதிகளை இணைத்து ஆங்கிலேயர் ஒற்றையாட்சியைக் கொண்டு வந்தனர். தமது ஆட்சியதிகாரத்திற்கென கோல்பு×க் ஆணைக்குழு (1833)வை நியமித்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட நிர்வாக மற்றும் சட்ட நிரூபண சபைகளை உருவாக்கிக் கொண்டனர். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையின் மலையக நில வளத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கில ஏகாதிபத்தியம் மலையகப் பயிர்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்தது. அதற்கென 1800களின் தொடக்கக் காலங்களில் தென் தமிழ் நாட்டிலிருந்து மலையகத்தை மேம்படுத்த, பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழர்கள் இலங்கையிலும் மலேசியாவிலும் குடியமர்த்தப்பட்டனர். பள்ளர், பறையர், முக்குவர், மீனவர், நாடார், வன்னியர், மருத்துவர் மற்றும் குறைந்த அளவில் முக்குலத்தோர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், இம்மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ 70 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் செப்பனிடப்பட்டு, காப்பி, ரப்பர், தேயிலைத் தோட்டங்களும், இத்தொழிலாளர்களின் குடியிருப்புகளும் உருவாகின. இக்காலகட்டங்களில் இத்தோட்டங்களின் கூலி உழைப்புக்காக, இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்த தமிழர்களில் 3 லட்சம் மக்கள் கடல் பயணங்களின் போது – நடுக்கடலில் மூழ்கியும், குடியிருப்புகளில் போதிய மருத்துவமின்றி நோய்களிலும், வேலையிடங்களில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்ட நச்சுப் பிராணிகளால் தீண்டப்பட்டும் மரணமடைந்திருக்கின்றனர். கடுமையான உடலுழைப்பு ஆற்றல் கொண்ட இம்மக்களைக் கொண்டே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தரைவழிச்சாலை, ரயில்வே இருப்புப்பாதை, பாலங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள், ஏரிகள் போன்றவற்றை ஆங்கில ஏகாதிபத்தியம் நிர்மாணித்தது. இன்றைக்கும் இலங்கையின் வருவாயில் 60 சதவிகிதம் வரை ஈட்டித்தரும் தேயிலை, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை விளைவித்துத் தருகிற மலையக மக்கள் – இலங்கையின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமலும், தாய்நாடான தமிழகத்தில் தமது வேர்களை இழந்தவர்களாக திரும்பிவர வழியற்றவர்களாகவும் "நாடற்றவர்கள்' என்ற வகையினத்துள் வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடும் சுரண்டலுக்கு ஆட்பட்டு, தமது உரிமைகளுக்குப் போராடிய போதெல்லாம், இன மற்றும் மொழி அடிப்படையில் மலையக மக்களின் துயர் துடைக்க இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் முன்வரவில்லை. மாறாக, இலங்கையிலும் மலேசியாவிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இத்தமிழர்களைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கிலேயர்களுக்குக் கங்காணி வேலையும், கணக்கன் வேலையும் செய்து, தம் வளத்தைப் பெருக்கிக் கொண்ட சாதியினராக, வெள்ளாளர்களும் செட்டியார்களுமே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு, மலேசியாவிலும் இலங்கையிலும் இதே மலையகத் தோட்டங்கள் பலவற்றை இச்சாதியினர் தமது உடைமையாக்கிக் கொண்டனர். இத்தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை கொடும் சுரண்டலுக்கு உட்படுத்தியதோடல்லாமல், இம்மக்களின் மீது சாதிய ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். மலையக உழைக்கும் மக்கள் தொழிலாளர்களாக ஒன்றிணைவதைத் தடுக்க, இம்மக்களிடையே சாதி பாகுபாடுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், இந்துமத மூட ழமைகளையும் வளர்த்தெடுத்தனர். மேலும் சிறுவணிகம், வட்டித் தொழில், கொத்தடிமைத் தரகு ஆகியவற்றிலும் பெருஞ்செல்வம் சேர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மலேசியாவிலும், இலங்கையிலும் ஒன்றுமறியா மக்களின் உழைப்பில் கொள்ளையடிக்கப்பட்ட இப்பெரும் பணத்தைத் தான், தமிழகத்தின் விளைநிலங்களிலும் வட்டிக் கடை, நகைக்கடை, வளர்ந்து வரும் தொழில்கள் ஆகியவற்றிலும் மூலதனமாக்கி, இந்திய – தமிழக அதிகார வர்க்கத்தின் மய்யங்களாகத் தம்மை நிறுவிக் கொண்டனர். ஆயிரம் ஜன்னல் வீடு, பழமையின் எச்சம், பழந்தமிழர் அடையாளம் என்றெல்லாம் பெருமை பாராட்டப்படும் "செட்டிநாடு' வீடுகள் சுட்ட செங்கற்களாலும், பர்மா தேக்கு மரங்களாலும் கட்டப்பட்டவை அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குருதியாலும் சதையாலும் கண்ணீர் பிசைந்து நிர்மாணிக்கப்பட்டவை. குடியிருக்கக் குடிசை இல்லõத மக்கள் நடுவில் கொழுப்பெடுத்த சாதித் திமிரைப் பறைசாற்ற, மாட மாளிகைகளை வீடுகளெனக் கட்டி வாழும் செட்டி நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்கள் எனில், வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் உண்டு செரித்து இளைப்பாறும் "தமிழ்த் தேசியம்' – ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயிரமாண்டு கால அவலம் அன்றி வேறென்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1883இல் புத்தளம் முதல் கண்டி வரையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்ந்த மேற்குப் பகுதியும் தொல்குடி தமிழர்கள் வாழ்ந்த வடக்கு – கிழக்குப் பகுதிகளும் சிங்களர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த தென் இலங்கையும் ஆங்கிலேய காலனி ஆட்சியின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டன. இந்தியாவில் 526 சமஸ்தானங்களும் பல்வேறு பிரதேசங்களும் இணைக்கப்பட்டு, ஒரே நாடென ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டது போலவே, இலங்கையின் அதிகார அமைப்பும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1880இல் கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுக்கும் பவுத்தர்களுக்கும் இடையே மூண்ட மதக் கலவரத்தில் சிங்கள மற்றும் தமிழ் கிறித்துவர்கள் மத அடையாளம் வழி இணைந்தே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான தேச உணர்வு இந்தியாவைப் போலவே, இலங்கையிலும் முகிழ்த்தது. ஆனால், அவ்வுணர்வு பிரித்தானிய பிரித்தாளும் சூழ்ச்சியில் நாளடைவில் இந்தியாவில் இந்து – முஸ்லிம் என வகைப்படுத்தப்பட்டது போல, தமிழர் – சிங்களர் எனப் பிளவுண்டது. ஆனால், இப்பிளவிற்கு இருவேறு தேசிய இனமாக தமிழர்களும் சிங்களர்களும் இருந்ததே அடிப்படைக் காரணமாகவும் இருந்தது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கையின் சுதந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி தொடங்கப்பட்டது. பொன்னம்பலம் அருணாச்சலம் என்ற தமிழரே அதன் முதல் தலைவரானார். 1920 இல் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின்படி, சட்ட சபையில் 13 சிங்களர், 3 தமிழர் என பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைமைக்குள் முரண்பாடுகள் எழுந்து, பொன்னம்பலம் அருணாச்சலம் வெளியேறினார். இதனைத் தொடர்ந்தே, தமிழர்களின் உரிமைகளைப் பேசுவதற்கான அவசியத்தில் "தமிழர் மகாசனசபை' உருவாக்கப்பட்டது. 1931இல் வயது வந்தோர் அனைருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1927–1931 காலகட்டத்தில் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட டெனாமூர் ஆணைக்குழு, தமிழர்கள் முன்வைத்த விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1944இல் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதே ஆண்டில் சோல்பரி பிரபு தலைமையில் பிரித்தானிய அரசுக் குழு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்து இரு தரப்பினரையும் சந்தித்து. “இலங்கையில் ஆட்சியுரிமை இருபெரும் மொழிவழி சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சம குடியுரிமை பெற்றவர்களாக வாழ்வதையே தமிழர்கள் விரும்புகின்றனர்'' என பொன்னம்பலம் தலைமையில் தமிழர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் 1945 அக்டோபர் 9இல் சோல்வரி ஆணைக்குழு, இலங்கைக்கு ஒற்றையாட்சியைப் பரிந்துரைத்துச் சென்றது. எவ்வித சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்படாத நிலையில் 1948 பிப்ரவரி 4இல் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் கையளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/images/eelam_400.jpg" alt="Eelam women" width="400" align="right" border="0" height="300" /&gt; உடனடியாக, 15.11.1948 அன்று பத்து லட்சம் மலையக மக்களும் இலங்கையின் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 1953 இல் நடந்த ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் தமிழும் சிங்களமும் ஆட்சி மொழியாக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது. 1954இல் இலங்கையின் பிரதமராகயிருந்த ஜான் கொத்தலவலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உரையாற்றும் போதும், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியதிலிருந்து இதே தீர்மானத்தை வலியுறுத்தி வந்த பண்டாரநாயகா, தமது வாக்குறுதியைக் கை கழுவிவிட்டு 5.6.1956இல் சிங்களமே ஒரே ஆட்சி மொழி என சட்டம் இயற்றினார். 22.5.1972இல் பவுத்தமே முகாமை பெற்ற அரச மதமாகவும் நடைமுறைக்கு வந்தது. சிங்களர்கள் மொழி வழியாகவும், மத அடிப்படையிலும் ஒன்றிணைக்கப்பட்டனர். ஆனால் தமிழர்கள் பூர்வீக ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என வரலாற்றுக் காலம், வாழிடம், பின்பற்றும் மதம் எனும் வகைப்பாடுகளில் பிரிந்தே நின்றனர். மொழி, தமிழர்களை ஒன்றிணைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களிடையே இன வேறுபாடுகளைக் கடந்து அவர்களை உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்டும் நோக்கத்தோடு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஈழத்திலும் மலையகத்திலும் காலூன்றியது. உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களே அணி திரண்டனர். இத்தகைய அணி திரட்டல் இயல்பிலேயே, தமிழர்களிடையே சாதி – தீண்டாமைகளுக்கு எதிராகவும், ஆதிக்கச் சாதித் தமிழர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கருக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்டவர்களின் – தீண்டத்தகாத மக்களின் கட்சியென ஆதிக்க சாதியினரால் பிரச்சாரம் செய்யப்பட்டு, கட்சியின் ஊழியர்கள் தாக்கப்படுவதும் சில நேரங்களில் கொல்லப்படுவதும் நடந்தது. 1950 – 1970களுக்கு இடைப்பட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளால் நிகழ்த்தப்பட்ட சாதி எதிர்ப்பு – தீண்டாமை ஓழிப்புப் போராட்டங்களுக்கான வரலாறும் முதன்மையானதாகவே இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும். இலங்கையின் தமிழ்ச் சமூகத் தலைமைப் பாத்திரத்தை அரசியல் – பொருளியல் அம்சங்களில் வகித்து வந்தவர்கள் (சைவ) வேளாளர்களே. தமிழகத்தில் பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகத் தொடங்கி, பின்னாளில் வேளாள சாதியினரின் அரசியல் தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் 1949 செப்டம்பரில் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதே காலத்தில்தான் 1949 டிசம்பரில் தந்தை செல்வாவால் தமிழரசுக் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது. மொழியை முன்னிறுத்தி, தமிழர்களை ஒன்றிணைக்கவும், தமது சமூக – அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேளாளர்கள், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கினர். தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, சைவத் தமிழ் அறிஞர்கள் 1800களின் நடுவிலிருந்தே இந்து மத வளர்ச்சியையும் தமிழை செம்மொழியாகத் தரப்படுத்துவதையும் இணைத்தே செய்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு சைவத் தமிழ் கருத்துருவாக்கம் அரசியல் எழுச்சிக்காக, தேசியக் கோட்பாடாக முன்மொழியப்பட்டபோது – "மதநீக்கம்' செய்யப்படாததாகவே இருந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் இந்துமத எதிர்ப்புப் பணிகள் நடைமுறையில் இருந்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கருத்தாடல் முற்றாக மதநீக்கம் செய்யப்படாவிட்டாலும், நடைமுறையில் இந்து மதத்திலிருந்து விலகி நின்றது. ஆனால், ஈழத்திலோ சைவத் தமிழ்த் தேசியம் அரசியல் ரீதியாக, இன்னும் மேன்மைப்படுத்தப்பட்ட – இந்துமயமாக்கப்பட்ட கருத்துருவமாகவும் கோட்பாடாகவுமே முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாட்டில் "மதநீக்கம்' செய்வதும் பகுத்தறிவுவாதம் முன்வைக்கப்படுவதும், தமது சமூக மேலாதிக்கத் தலைமைக்குத் தாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி என்பதை யாழ்ப்பாண வேளாளத் தலைமை உணர்ந்தே இருந்தது. இந்து மதத்தைக் கட்டிக் காப்பதில் பார்ப்பனர்களுக்கு இருக்கும் சமூகப் பதற்றமும், முனைப்பும், பெருவிருப்பும் ஈழத்தில் வேளாளர்களுக்கு இருந்தது. இன்றும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1956இல் தமிழ் உரிமை மறுப்புச் சட்டத்தை எதிர்த்து, அறப்போராட்டம் நடத்தக் கூடியிருந்த தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் எதிர்பாராதவொரு தாக்குதலை நிகழ்த்தியதன் விளைவாக ஏறத்தாழ 150 தமிழர்கள் பலியாயினர். 26.7.1957இல் பண்டாரநாயக – செல்வா ஒப்பந்தமும் 24.3.1965இல் டட்லி சேனநாயக – செல்வா ஒப்பந்தமும் தமிழர் உரிமைகளை முன்மொழிந்து போடப்பட்டன. 1972இல் சிறீமாவோ பண்டார நாயக ஆட்சிக் காலத்தில் சிங்கள பவுத்தர்கள் மட்டுமே இலங்கையின் அதிபராக முடியும் என குடியரசுச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்களவர்களை விட, படித்தவர்களாகவும் அரசுப் பணிகளில் இருப்பவர்களாகவும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதை முடக்கும் விதமாக, கல்வியைத் தரப்படுத்துதல் என்ற போர்வையில் சிங்களர்களுக்கு மதிப்பெண் சலுகைகளும் பாடத் திட்ட முறைகளில் மாற்றமும் சிங்கள மொழிக்கு முக்கியத்துவமும் தரப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் 1964இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக, இந்தியப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், மூன்றில் ஒரு பங்கினரின் வாழ்க்கைக்கு மட்டுமே உத்திரவாதம் அளித்தது. ஏனையோர் மூன்றாம் தரக் குடிமக்களாகவே மலையகத்தில் இருத்தப்பட்டுள்ளனர். இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழக மலைக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர், கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள குண்டுப்பட்டி என்ற ஊரில் வாழ்கின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மலையக மக்கள் சாலை வசதி கேட்டு "தேர்தல் புறக்கணிப்பு' செய்தார்கள் என்ற காரணத்தினால், 1997இல் வேளாள – சாதி இந்துக் கட்சியான தி.மு.க. தன் குண்டர்களை ஏவி, அம்மக்களின் குடியிருப்பைத் தாக்கி அழித்து, கடும் உழைப்பில் சேகரித்து வைத்திருந்த பொருட்களை நாசமாக்கியும் கொள்ளையடித்தும், இரு அப்பாவிகளைக் கொன்றும் பழி தீர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட குண்டர்கள் பலரும் பிழைப்பதற்காக மதுரை உசிலம்பட்டிப் பகுதியிலிருந்து மலையேறி வந்த, குண்டுப்பட்டிக்கு சற்றே தொலைவில் வசித்து வருகிற பிரன்மலைக் கள்ளர் சாதியினரே. இதே போன்றதொரு தாக்குதலும் வன்முறையும் கொடியங்குளம் என்ற ஊரில் இன்னொரு வேளாள – சாதி இந்துக் கட்சியான அ.தி.மு.க. காலத்தில் நிகழ்த்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் யாவரும், சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட மக்களே. ஆக, &lt;span style="font-weight: bold;"&gt;ஈழத்திலும் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்கி காலடியில் வைத்துக் கொண்டுதான், வெள்ளாள – சாதி இந்து தலைமை தமிழ்த் தேசிய கருத்துருவாக்கங்களைச் செய்து வருகிறது। ஆனால், செயற்கையானதொரு தமிழின ஒற்றுமைக்கு அறைகூவும் அரசியல் சூழ்ச்சிக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் காலங்காலமாகப் பலியாகி வருவதும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;தொடரும்......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-7936385868066435411?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/7936385868066435411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=7936385868066435411' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7936385868066435411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7936385868066435411'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/03/blog-post_27.html' title='ஈழம் - குருதியில் பூக்கும் நிலம்'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-2496176160325279623</id><published>2009-03-16T13:09:00.004+05:30</published><updated>2009-08-26T01:07:11.768+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டக் கல்லூரி'/><title type='text'>வன்முறையின் வேர் எது?</title><content type='html'>&lt;span style="font-weight: bold;" class="bltxtbold"&gt;&lt;center&gt;&lt;span class="bltxtbold1"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;வன்முறையின் வேர் எது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- இளம்பரிதி&lt;/span&gt; &lt;/center&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt; ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் வலுப்பெற்று வரும் சூழலில் இக்கவனத்தை திசை மாற்றியது, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அதற்கு மறுநாள், தமிழக சட்டமன்றம் களை கட்டியது. அதற்கு முன்னரே, இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக, உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள காவல் நிலைய அனைத்து மட்ட காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல் துறைக்குப் புதிய ஆணையரும் நியமிக்கப்பட்டார். சட்டக்கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென ஜெயலலிதாவும், வைகோவும் 356 ஆவது முறையாக, புளித்துப் போன பல்லவியையே மீண்டும் பாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தரங்கெட்ட திரைப்படங்களின் வரன்முறையற்ற வன்முறைக் காட்சிகளையும் ஆபாச பிம்பங்களையும், ‘சேனல்'களின் கூத்தடிப்புகளையும் தொலைக்காட்சிகளில் அள்ளிப்பருகிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை-ஒப்பனையோ, ஒத்திகையோ இல்லாமல், ஆனால் ஒட்டி வெட்டப்பட்ட சில நிமிட காட்சித் துண்டுகள்-துணுக்குறவோ, திடுக்கிடவோ செய்து விட்டன. ‘ஜெயா' மற்றும் ‘சன்' தொலைக்காட்சிகள் மட்டும் மார்கழி மாதத்து ‘பஜனை' போல, இக்காட்சிகளை தமிழ்ச் சமூகத்தின் ஆபாச நுகர்வுக் கலாச்சாரம் துய்க்கத் துய்க்க தீனியாக்கி வந்தன. “ஈவு இரக்கமற்ற கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. மாணவர்கள் தேர்தலில் கூட, ஜாதி மற்றும் கட்சி வாரியாக மோதல்கள் நடக்கின்றன. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை இனி வேறு எங்குமே கல்வி பயில முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/dalithmurasu/nov08/law_student_340.jpg" alt="law_student" width="313" align="left" border="0" height="340" /&gt;&lt;br /&gt;வட மாவட்டங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்கள் மீது வன்னியப் பெருமக்கள் ஈவு இரக்கமற்ற கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும்-நடத்தி வருவதும் ‘சில நிமிட' நேரம் அல்ல; பல்லாயிரக்கணக்கான மணி நேர ஆவணங்களாக, காட்சிகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உதிரத்துள் உறைந்துள்ளதை அவர் அறிவாரா? ஜாதி சங்கத்தையே அரசியல் கட்சியாக நடத்தி வரும் உங்கள் கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பயில வரும் மாணவர்கள் சிலேட்டு, புத்தகங்களுடன் சாதியத்தையும் சுமந்துதானே வருகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் வன்மத்தையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் இதே அவையில், “இந்த மாணவர்கள் பயின்று வெளியில் வந்தால் நீதியின் நிலை என்னவாகும் என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அரசு அனுமதிக்கக் கூடாது. இவர்களால் நாட்டுக்குக் கேடாகத்தான் அமையும்'' ("தினத்தந்தி', 14.11.2008) என, விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினரும், நாடறிந்த தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமார் எங்ஙனம் பேசத் தளைப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நீதியின் நிலை, நாட்டிற்கு விளையும் கேடு ஆகியன பற்றி அவருக்குத்தான் எவ்வளவு கவலை! காங்கிரஸ்காரர்கள் தோற்றார்கள் போங்கள்! மேலும் அவர் தனது உரையில், “சாதியத் தலைவர்களின் பிறந்த நாள் போன்ற விழாக்களை கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதித் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்கச் சொல்லும் ரவிக்குமார், நெல்லை மண்ணுரிமை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்- ‘தேவர்' பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து- ‘அரிஜன ஆலயப் பிரவேச நாளாகவும் அனுஷ்டிக்கும்படி' அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வரிடம் நேரிலேயே நகல் வழங்கியதை மறந்து விட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஜெயக்குமார் (அ.தி.மு.க.) மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இ. கம்யூனிஸ்ட்), ராமக்கிருஷ்ணன் (ம.தி.மு.க), ஞானசேகரன் (காங்கிரஸ்) ஆகியோரும் சட்டமன்றத்தில் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அனைத்துக் கட்சிகளின் ‘சாதி இந்து ஒற்றுமை'யைக் குறிப்பிட மறந்து விடக் கூடாதல்லவா? அது மட்டுமா? தலித்துகள் நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போதும், பாமரர்கள் கை பிசைந்து நிற்கும் போதும்-சவத்தைப் போல உறங்கும் மாநில மனித உரிமை ஆணையம், பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில், தன்னிச்சையாக இந்நிகழ்வை வழக்காக எடுத்துக் கொண்டு, நீதிபதி ஏ.எஸ். வெங்கடாச்சலமூர்த்தி தலைமையிலான "முழு பெஞ்ச்' விசாரணையை மேற்கொண்டுள்ளது. இப்பிரச்சனையின் முழு விவரங்களையும் மாநில காவல் துறைத் தலைவர் இரண்டு வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி, ஆணையத்தின் முன் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென அவருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/dalithmurasu/nov08/poster_484.jpg" alt="poster" width="400" align="right" border="0" height="484" /&gt; இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர். காயமடைந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப் பற்றி சட்டமன்ற விவாதத்தின்போது அமைச்சர் துரைமுருகன், “புகார் தரவில்லை என்பதற்காக காவல் துறை வேடிக்கை பார்த்தது குற்றம்தான். ஆனால் யாரும் புகார் தராமலேயே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரு முறை சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து (தலித்) மாணவர்களைக் காட்டுமிராண்டித் தனமாகக் காவல் துறை தாக்கியது'' என நினைவுபடுத்தியபோது, ஜெ-சசிகலா கும்பலின் தேவர் சாதி சார்பு அ.தி.மு.க.வும், அதன் வாலாகிப் போன ம.தி.மு.க.வும் கூச்சலிட்டு "அவை' வெளிநடப்பு செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“இக்கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். இது போன்ற வன்முறைக் காட்சிகள், மக்களின் மனநிலையை மேலும் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். ஏற்கனவே இந்த அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எந்தக் கதியை அடைந்தனவோ, அதே கதியைத் தான் இதுவும் அடையப் போகிறது'' என அறிக்கை ("தினத்தந்தி' 14.11.08) விடுத்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் மனநிலை பாதிக்க வேண்டும்-சாதி வன்மம் தலை தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொலைக்காட்சியில் தொடர்ந்து இக்காட்சிகளை ஒளிபரப்பச் சொல்லி விட்டு, தனது அறிக்கையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறது இப்பாசிச பூதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டப்பூர்வ நியாயங்களுக்காக நாம் விசாரணை ஆணையங்களை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், நீதி விசாரணை தொடங்கப்படும் முன்பாகவே, இந்தப் பிரச்சனைக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தை ஜெயலலிதா நிராகரித்து விட்டதை, நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த விசாரணை ஆணையம் அரசுத் தரப்பையோ, காவல் துறையையோ காப்பாற்ற முயலலாம். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக அது ஒருபோதும் அறிக்கை தரப்போவதில்லை. இருந்தும் இந்த ஆணையத்தை ஜெயலலிதா நிராகரிக்க வேண்டிய நோக்கம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களை இயக்கி வரும் "தேவர்' சாதி பின்புலமும், அதற்கு ஊக்கமளித்து வரும் ஜெ–சசிகலா ஆதிக்க சாதி வெறிக் கும்பலின் அரசியலும் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற பதற்றமே. ஆனாலும், இது ஊரறிந்த ரகசியம் தானே? இந்த அரசின் விசாரணை ஆணையங்களின் மீது நம்பிக்கை இல்லாத அவர், மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்த மறியலின்போது இ. கோட்டைப்பட்டி தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையத்தை நிராகரிக்க மாட்டார். காரணம் வெளிப்படையானது. இப்பிரச்சனை காவல் துறை (அரசு)க்கும் தலித் மக்களுக்கும் இடையிலானது. விசாரணை அறிக்கை யாரைக் குற்றம் சாட்டினாலும் அரசியல் லாபம், வஞ்சக இன்பம் என ஜெயலலிதாவுக்குக் கிடைப்பதோ இரட்டைக் கனிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;“தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும், உள்நோக்கம் கொண்ட வகுப்பவாத பிற்போக்கு சக்திகளின் பின்னணி மற்றும் சதி முயற்சி பற்றியும் தமிழக அரசு விசாரித்து அறிவிக்க வேண்டும்'' என, கடந்த காலத்தில் "கை' சின்னத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகிய தா. பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அறிக்கை விடுத்தார். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் பிள்ளை சாதியினருக்குப் பின்னிருந்து வன்முறைகளை ஏவியும், சாதிக் கலவரத்தைத் தூண்டியும் வருகிற தா. பாண்டியனின் உறவுக்கார உசிலம்பட்டி கள்ளர்களின் பிற்போக்கு நடவடிக்கைகள், சதி முயற்சிகள் பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அவர் அறிக்கை தருவாரா? இவரது கட்சியைச் சேர்ந்த சிவ புண்ணியமும் சட்ட மன்றத்தில், “திட்டமிட்டு நடந்த சம்பவமோ என்ற அச்சம் ஏற்படுகிறது'' என பயம் கொள்கிறார். வர்ணாசிரம தத்துவமும், பார்ப்பனிய அரசியலும், ஆதிக்க சாதி மனநிலையும் அன்றி, இதில் பின்னணி-சதித்திட்டம் பற்றி ஆராய என்ன "எழவு' இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/dalithmurasu/nov08/poster_700.jpg" alt="poster" width="400" align="left" border="0" height="510" /&gt; ‘ஓட்டுப் பொறுக்கி'களுக்குத் ‘தேவை'யிருக்கலாம். ஆனால் உலக ‘வியாக்யானம்' செய்கிற அறிவுஜீவிகளும் தங்களுக்கிடையிலான மாச்சரியங்களை விடுத்து கைகோத்து வருகின்றனர். ‘குமுதம்' ‘ஓ' பக்கங்கள் ஞாநியும், பா.ஜ.க.வின் எச். ராஜாவும் இன்னொரு அ.தி.மு.க. பிரமுகரும் உடனிருக்க, ஜெயா தொலைக்காட்சியில் "உலக அறிவாளி' ரபி பெர்னார்ட் உடன் இப்பிரச்சனைக்காக உரையாடி மகிழ்ந்தனர். காவல் துறையின் நம்பகத் தன்மை-மேலாண்மை-புனிதத்துவம் என இவர்கள் பேசப்பேச புல்லரித்துத்தான் போனது. “காவல் துறையை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும்'' என ஞானி, அரசுக்கு ஆலோசனை சொன்னார். பெரியாரிய முகமூடி இட்டுக் கொண்ட நாத்திகப் பார்ப்பனர் ஞாநியும், பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்' என்றே மேடைகளில் எப்பொழுதும் விளிக்கும் ஆத்திகப் பார்ப்பனர் எச். ராஜாவும்-ஒருவரையொருவர் கட்டித் தழுவாத குறையாக, இப்பிரச்சனை குறித்தான "ஜெயா' (16.11.08) விவாதத்தில் கூடிக் குலவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஏறத்தாழ காவல் துறை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாகவே இயங்கும். அதையே சட்டப்பூர்வமாக்கச் சொல்கிறார் ஞாநி. காலனிய ஆதிக்கத்திற்குப் பிந்øதய காலங்களில் நிகழ்த்தப்பட்ட சரிபாதியளவு அரசு வன்கொடுமைகளுக்கு கருவியாகச் செயல்பட்டதும் இதே காவல் துறைதான். எம்.ஜி.ஆர். காலத்திய அரசியலும், அப்போது காவலர் தேர்வுத் துறையில் அய்.ஜி.யாகப் பணியாற்றி பின்னாளில் ‘தேவர் பேரவை'யை நிறுவியவருமான பொன். பரமகுரு, தன் பதவிக் காலத்தில் தன் சாதியினரைப் பெருமளவில் காவல் துறைக்குள் நுழைத்தார். அதன் பிறகே சாதி இந்துக்களின் வன்மத் துறையாக அது உருமாறி-தலித்துகளையும், முஸ்லிம்களையும் வேட்டையாடி வருகிறது. இத்தகைய காவல் துறையை, தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக நிலை நிறுத்தினாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கேடும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் விரோதி என்றோ, சாதி இந்து ஆதரவாளர் என்றோ ஞாநியைக் குற்றம் சுமத்த இயலாது. ஆனால் அவரது ‘நடுநிலை' வழுவாமை கேள்விக்கிடமற்றது அல்ல. ‘ரத்தம் ஒரே நிறம்' என்ற தலைப்பில் ("குமுதம்' 26.11.2008) அவரால் நிரப்பப்பட்டுள்ள "ஓ' பக்கங்களிலிருந்து சில கேள்விகள். "பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் சாதி உணர்ச்சி' என்று அவர் எழுதுகிறார், அது கிராமங்களில் மட்டும் தானா? கும்பகோணம், மயிலாப்பூர், நங்கநல்லூர் போன்ற மாநகரங்களில் ஊட்டப்படுவதெல்லாம் ஆட்டுப்பாலா-"ஆ'வின் பாலா? ஏன் நியூஜெர்சியில் இருக்கும் அம்பிகள் பிறக்கும் போதே பெப்சி-கோக் தானா?&lt;br /&gt;&lt;br /&gt;“ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லக்கண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை'' என்கிறீர்கள். ஜாதி அமைப்புகள் எப்போதும் மாமனிதர்களை உருவாக்க முடியாது. ஆனால் சமூகங்கள் தான் மனிதர்களை உருவாக்குகின்றன. மனிதர்களாக மட்டுமே எடுத்துக் கொண்டால், நல்லக்கண்ணுவை உருவாக்கியது, அவரது சாதி அல்ல; கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் கே.ஆர். நாராயணனை உருவாக்கியது அவர் பிறந்த சமூகம். சாதி வெறியர்கள் மனிதர்களாக உருவாக்கப்படுவதற்கு அச்சாதிகளில் இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமே பதற்றத்தில் ஆழ்ந்திருந்த போதும், சென்னை எருக்கஞ்சேரி சிக்னல் அருகே அரசுப் பேருந்து ஒன்றை நவம்பர் 13 அன்று அதிகாலையில் தீ வைத்துக் கொளுத்தியதாக ‘அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்' என்ற அமைப்பின் மாநில செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பத்து தலித் தோழர்களை காவல் துறை கைது செய்தது. “எங்கள் இன மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீ வைத்தேன்'' என அவர்களில் ஒருவர் வாக்குமூலம் தந்திருப்பதாக ("தினத்தந்தி' 14.11.08) காவல் துறை வழக்குப் பதிந்தது. தாக்கப்பட்டவர்கள் சாதி இந்துக்கள்; தாக்கியவர்கள் தலித்துகள் என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டிற்குள் (‘தேவர்' நூற்றாண்டு கொண்டாடப்பட்ட காலம்) மட்டும் இக்கலவரத்தில் படுகாயமுற்ற பாரதி கண்ணன் தலைமையிலான சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களைத் தாக்க திட்டம் தீட்டி, முயன்று முடியாமல் கடைசி முயற்சியில்தான் இக்கலவரம் வெடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/dalithmurasu/nov08/Poster_400.jpg" alt="poster" width="400" align="right" border="0" height="361" /&gt; எண்ணிக்கை அளவில் தலித் மாணவர்கள் அதிகமாயிருந்தும் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதலுக்குத் தயாராக வந்த சாதி இந்து மாணவர்கள் அப்பாவிகள் அல்ல. திருப்பித் தாக்கியிராவிட்டால் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை' என சட்டக் கல்லூரிக்குள் அமைப்பு நடத்தி வந்திருக்கும் பாரதி கண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் பத்து தலித் மாணவர்களையாவது தாக்கியிருக்க முடியும். அப்படி தாக்குதலுக்கு உள்ளானவர்தான் தலித் மாணவர் சித்திரைச் செல்வன். கல்லூரிக்குள் கத்தியோடு தேர்வு எழுத வந்ததையும், கலவரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சில ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கலவரத்தின் மூல காரணமாக நிலை கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சொல்வதானால்-பசும்பொன் முத்துராமலிங்கத்தின் "குருபூஜை' கொண்டாட்டங்களே. சாதி வெறிக் கொண்டாட்டமாக, தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகளைக் கட்டவிழ்ப்பதற்கென்றே ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இக்கொண்டாட்டத்தைத் தடை செய்ய அல்லது குறைந்த பட்சம் அரசு எந்திரம் இதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதென கடந்த ஆண்டு "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, முத்துராமலிங்கம் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக பரமக்குடி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து முதுகுளத்தூரில் தலித் ஆசிரியர் வின்சென்ட் கொல்லப்பட்டதும் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது மக்களுக்கு சாதி வெறியூட்டவே, அரசியல் ரீதியாக தேவர் சாதித் தலைவர்கள் இவ்விழாவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இதன் விளைவை "தேவர் திருமகனாரின்' வளர்ப்புப் புதல்வி செல்வி ஜெயலலிதாவே அனுபவிக்க நேர்ந்தது அவலம்தான். இத்தலைவர்களின் அரசியல்-பொருளியல் பயன்களுக்காகப் பலிகடா ஆக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அம்மக்களே. தன்னைத் தாக்க வந்தவர்கள் தி.மு.க. வினர் என "புரட்சித் தலைவி' குற்றம் சுமத்தினாலும்-அவர்களும் தேவர் சாதியினரே என்பதை மூடிமறைக்க இயலுமா? என்ன செய்வது, வளர்த்த கடா மார்பிலே பாய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, தேவர் சாதியினரின் திட்டமிட்ட வன்முறைகள்-பசும்பொன் முத்துராமலிங்கம் காலத்திலிருந்து, அரை நூற்றாண்டிற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் காவு வாங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பட்டியலிட்டு மாளா. ஆனாலும் தென் மாவட்ட தலித் மக்கள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் காலத்திலிருந்து ஒருங்கிணைந்து திருப்பித் தாக்கத் தொடங்கி, இன்று வரையான தேவர் சாதி வெறியர்களின் ‘விழுப்புண்'களை செய்தி ஊடகங்கள் சேகரித்து இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டால்-தேவர் சமூகத்தின் "வீரம்' வீதிக்கு வரும். எல்லா சாதிகளிலும் தனிப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள் உருவாகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி இந்துக்களின் குற்றங்கள், சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு நெடுக நிகழ்ந்து வரும் தங்களின் விடுதலைக்கானப் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அறம் வழுவி நிற்பதில்லை. ‘நிகரற்ற' கொடுமையாகப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் நீங்கா இடம் பெற்று விட்ட சட்டக் கல்லூரி சம்பவத்தில் கூட, எவரும் கொலை செய்யப்படவில்லை-அதற்கான வாய்ப்பிருந்த போதும். எதிர்வினை செய்யும் போதும் "ஒடுக்கப்பட்ட மனம்' கொலை வெறியுடன் செயல்படுவதில்லை. மனிதாபிமானிகளே! இந்தக் கோட்பாடு உங்கள் "மூளை'க்கு உறைக்கிறதா? உயிர்ப் பிறப்பின் இத்தார்மீக நெறியே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பலமும் பலவீனமும் மட்டுமல்ல; இருப்பும் வீழ்ச்சியும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வன்முறையை ஒரு "காட்சி இன்பமாக' தமிழ்த் திரைப்படங்கள் கட்டமைத்து வெகுநாட்களாகிவிட்டன. அந்த இன்பத்தில் ஊறித் திளைத்திருக்கும் சாதியத் தமிழ்ச் சமூகத்திற்கு இப்பதற்றம் கூட, சில நாட்களில் அதே வகையான இன்பமாகவும் மாறக்கூடும்.இலங்கை இனப்படுகொலை, பூகம்ப சரிவுகள், சுனாமி பிணங்கள், நாள்தோறும் அரங்கேறும் குண்டு வெடிப்புகள் என வண்ணமயமான, வகைவகையான காட்சிப் படிமங்களில் ஊறித் திளைத்து நுகர்வு வெறி கொண்டலையும் சமூகமல்லவா இது. "ஜாதி' எனும் உணர்வே, பேரின்பமாக ஊறித் ததும்பும் இந்த சமூகத்திற்கு, இக்காட்சிகள் வெறியூட்டுவதற்கு மாறாக, குற்ற உணர்ச்சியையும், ஜாதி (தன்) வரலாற்றின் மீதான மறுபரிசீலனையையும் எழுப்புவதுதான் நியாயமாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி இந்துக்கள் என்ற வகையினத்துள் வரும் அனைத்து சாதிகளும் "மனு' விதிகளின்படி தீண்டாமை விலக்குப் பெறுவதால் கிடைக்கும் சமூக பலத்தை அனுபவித்தே வருகின்றன. இந்த சமூக பலத்தினையும்-இருப்பையும் இழக்காதவரை, எந்தவொரு தனி மனித சாதி இந்துவுக்கும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் துயரமும் வலியும்-புரிதலுக்கும் உணர்தலுக்கும் அப்பாற்பட்டதே. ஏனெனில், அது முழுமையாகவும் இறுதியாகவும் அனுபவித்தே பெறப்படுவது. தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதி இந்துவாகப் பிறக்க நேர்வதும், வாழ்வதும் ஒருவருக்கு இந்திய (இந்து) சமூகம் தரும் முதல் தர பாதுகாப்பு வளையம். அதிலும் பார்ப்பனராகப் பிறப்பதோ பெரும் பேறு! ஒடுக்கப்பட்ட மக்கள் பிறப்பிலேயே பாதுகாப்பற்றவர்களாக, சமூக பலம் இழந்தவர்களாக, தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக "வாழ' நிர்பந்திக்கப்படுகிறார்கள். சேரியில் அல்லது வாழப் பொருத்தமற்ற இடங்களில் உழல நேர்ந்தால் மட்டுமே இதை உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/dalithmurasu/nov08/ambed.jpg" alt="ambed" width="256" align="left" border="0" height="400" /&gt; இறுதியாக, இக்கட்டுரையின் முடிவுரையாகவோ அல்லது தலித் இளைஞர்களுக்கான பின் குறிப்பாகவோ இது இருக்கட்டும். தலித் வரலாற்று மாதங்களைக் காகிதங்களில் பதிவு செய்து, காயம் படாமல் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ரவிக்குமார்களின் அறிவுரைகளிலோ, எழுச்சித் தமிழர்களின் "தேசிய இன' அதிர்ச்சிகளிலோ கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. சொந்த மக்களிடமே நாணிக் கோணி, வம்பு வழக்குகளில் "சாதியவாதி'யாகி, விற்று விலை பேச சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கலாம். பிழைப்புவாதம் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. ஆளும் வர்க்கம் அள்ளித்தரும்; ஆதிக்க சாதியினர் அரவணைத்துக் கொள்வர் என்ற மாய்மாலங்களில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்களை, விடுதலைப் பாதைக்கு அழைத்து வர வேண்டியது போராளிகளின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;மய்ய நீரோட்ட அரசியலின் "கீழான' அனைத்து உபாயங்களையும் அவர்தம் அரசியல் அணிகள் கற்றுத் தேறுவது, சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை உருத்தெரியாமல் அழிக்க வகை செய்கிறதே என்ற சமூகப் பதற்றமும் அறச் சினமும் தான் நமக்கிருக்கிறதேயன்றி வேறல்ல. நம் மக்களின் பசி வரலாற்றுப் பசி; நம் தார்மீகக் கோபம் வரலாற்றுக் கோபம்; நம் தலைமுறையின் தாகம்; வரலாற்றுத் தாகம். சமரசமற்ற விடுதலைப் போராட்டமே தலித் மக்களின் முன் நிபந்தனை. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைப் பாத்திரம் அரசியல் நிபந்தனை. நமக்குத் தேவை முற்று முழுதான விடுதலை. அதற்கு ஒரு முழு தலைமுறையும் தியாகம் செய்ய வேண்டுமென்றார் அம்பேத்கர். அடிமைகள், விடுதலையைப் பிச்சையாகப் பெற இயலாது என்றும் அறிவுறுத்தினார். நம் மூதாதையரைத் தாக்கி விட்டு, எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை வழியெங்கும் சேகரித்துக் கொண்டு-நமது விடுதலைக்கான களம் நோக்கிப் பயணிப்போம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;-&lt;span style="font-weight: bold;"&gt;தலித் முரசு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt; நவம்பர் 2008&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-2496176160325279623?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/2496176160325279623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=2496176160325279623' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/2496176160325279623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/2496176160325279623'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2009/03/blog-post.html' title='வன்முறையின் வேர் எது?'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-3462612476082331785</id><published>2008-12-15T23:33:00.003+05:30</published><updated>2009-08-26T01:06:27.929+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>‘வரலாற்றை எழுதுதல்’</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(68, 68, 68); line-height: 21px;font-family:'Lucida Grande';font-size:100%;"  &gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;&lt;strong style="margin: 0px; padding: 0px;"&gt;&lt;span class="bltxtbold1" style="margin: 0px; padding: 0px;"&gt;- இளம்பரிதி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;எந்தவொரு பொருளின் இருத்தலும் தனித்த ஒன்றல்ல; அதன் இயக்கமும் கூட. ஒரு பொருளின் இருத்தல் மற்றும் இயக்கத்தின் புலனுணர்வே சிந்தனை கருத்து உருக்கொள்ள ஆதாரமாகின்றது. ஒன்று பிறிதொன்றைத் தழுவியதாக மற்றதைச் சார்ந்ததாகவே பொருட்களின் இருத்தலும் அவற்றின் அசைவியக்கங்களும். இங்கு பொருள் என்பதன் உயர்திணை வடிவமாக மனித உயிர் உடல் கவனம் கொள்ளப்படுகிறது. எல்லா மனித உயிர்களும் ஒரே மதிப்புடையன என்பது, பொது அறங்களுக்கான அளவுகோல். ஆனால் பொது அறங்கள் என்பவை அவை எழுதப்பட்ட காலங்களிலிருந்து இன்று வரையும் பொது நிலையில் இவ்வுலகில் எங்குமே நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;பொருட்களின் இருத்தலும் இயக்கமும் மனித சிந்தனைக்கு வித்தூன்ற, கருத்துகள் தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டன. தத்துவங்கள் மதங்களைத் தோற்றுவித்தன. மதங்கள் அரசியல் வகையினங்களாக உருப்பெற்றன. மனித இனங்களின் உயிர் வாழ்தலுக்கான தொடர் போராட்டங்களுக்கிடையே அறங்களின் மனித மதிப்புகள் அளவிடற்கரிய தூர இடைவெளிகளைக் கொண்டிருந்தன- கொண்டிருக்கின்றன. இத்தகைய இடைவெளிகளுக்கிடையில் தான் மனித வரலாறு கட்டியெழுப்பப்பட்டது. அறங்களின் பொது மதிப்பீடுகளின் பொய்த் தோற்றங்களைத் தழுவியே, மனித இன வரலாற்றில் எழுதப்பட்ட பிரதிகளின் மீதான அவ நம்பிக்கைகளும் மெல்ல தோற்றம் கொண்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;வரலாறு என்பது அதனளவில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பான செய்யுட்பகுதி என்ற போதிலும், வரலாற்று உண்மைகள் என்பன அக்குறிப்பிட்ட செய்யுட்பகுதிக்குள் மட்டுமே காணக்கிடைப்பன அல்ல. புராணங்கள், காவியங்கள், பழங்கதைகள், வாய்மொழி வழக்காறுகள், கல்வெட்டுகள், நாட்குறிப்புகள், ரகசிய ஆவணங்கள், இன்னும் அகழ்ந்தெடுக்கப்படாத இடங்கள் மற்றும் பொருட்கள் என வரலாற்றின் உண்மைகள் எங்கெங்கும் விரவிக் கிடக்கின்றன. தேடிக் கண்டடையும் உண்மைகளின் வழியில் ‘வரலாற்றை எழுதுதல்’ நிகழ்ந்த வண்ணமிருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;பிரபஞ்ச வரலாறு, உலக வரலாறு, மனித இனங்களின் வரலாறு என யாவற்றிலும் ‘வரலாற்றை எழுதுதல்’ என்பது அறிவியல் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப நாள்தோறும் மாற்றங்களை - மறுப்புகளை - மாற்று முன்மொழிவுகளை உள்ளடக்கியே தீர வேண்டிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மார்க்சிய வார்த்தைகளில் சொல்வதானால் இத்தகைய நெருக்கடி, கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஒரு வரலாற்று முரண். பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஒரு வரலாற்றுத் தேவை. வரலாற்று முரணும் வரலாற்றுத் தேவையும் ஒன்றையொன்று நேர்கோட்டில் சந்திக்கும் இரு அணிகளாகக் களமிறங்க, மனித இன வரலாறு இரு எதிர்வுகளின் வரலாறாகவே, தன் வரலாற்றை எக்காலமும் எழுதி வந்து கொண்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;உலக வரலாறு ஒருபுறமிருக்க, நாம் கவனம் குவிக்க வேண்டிய இந்திய வரலாறு அதன் வரலாற்றுக் காலம் தொட்டு எங்கிருந்து, யாருக்காக, யாரால் எழுதப்பட்டது? பாஹியான், யுவான் சுவாங் முதல் அராபிய வணிகர்கள், கிறித்துவ துறவிகள், போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேய காலனிய அறிஞர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சிந்தனைகள் வரை, இந்திய வரலாற்றின் மீதான உண்மைகளின் குறுக்கீடுகளால் இந்திய வரலாறு தன்னை மீளாய்வு செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல இயலாவிடினும் மறுப்பதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பல திசைகளிலும் பரவிய மார்க்சிய வெளிச்சத்தில் இந்திய இடதுசாரி அறிஞர்களால் கவனம் கொள்ளப்பட்ட இந்திய வரலாறு, இருபதாம் நூற்றாண்டில் வடிவ ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதே. இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இடதுசாரி அறிஞர்களின் மீளாய்வுகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;மேலைச் சிந்தனை மயக்கங்களில் மூழ்கி விடாமலும், இந்திய வைதீக மரபை முற்றாகப் புறந்தள்ளியும் இந்திய வரலாற்றின் தொல் மரபை மீட்டு, வரலாற்றை எழுதுவதற்கான உண்மையான வழிகளைக் கண்டடைந்தவர் பேரறிஞர் அம்பேத்கர். வரலாற்றுக் காலம் தொட்டு, உலக வரலாறு மதங்களின் வரலாறு என்று அளவிடப்பட்டது போல, இந்திய வரலாறு ‘சாதிய வரலாறு’ என வரையறுத்தவர் அம்பேத்கர். ஆரிய-திராவிட போர்களுக்கு முன் நாகர்களின் மூதாதையரைத் தேடிப் பயணித்தவர். நேருவைப் போன்றவர்கள் பருந்துப் பார்வையில் வரலாற்றை நோக்கியவர்கள் எனில், அம்பேத்கர் தம் வரலாற்றைத் தேடி சொந்த நிலத்தில் பயணித்தவர்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;‘வரலாற்றை எழுதுதல்’ என்பதும் அறிஞர்களாக வாழ்வது என்பதும் இங்கு பலருக்கும் காற்றடைத்த பலூன்களில் நிலத்தின் மீது பறந்து திரியும் உல்லாசமும் சாகசமும் ஒருங்கே அமையும் செயல்பாடு. வரலாற்றை மீளாய்வு செய்வதென்பது நிலத்தை உழுது, தோண்டி, செப்பனிட்டு தன் வாழ்க்கைக்கான அலகாகப் புனரமைப்பது. இத்தகைய நோக்குநிலைச் செயல்பாட்டில் அம்பேத்கர் தனித்ததொருவர் எனினும், தனியொருவர் அல்ல. கடந்த இரு நூற்றாண்டுகளில் ஜோதிபா புலே, நாராயணகுரு, தந்தை பெரியார் என அவருக்கு இணக்கமான ஓர் இயக்கமே உண்டு. இந்து மத மரபினால் கடும் எதிர்ப்புக்குள்ளான இவர்களை இடதுசாரி அறிஞர் மரபும் புறந்தள்ளியே வைத்ததற்கான உடனடிக் காரணம் ஆராய்ச்சிக்குரிய தொன்றும் அல்ல. ஆம், அது இவர்கள் அனைவரின் செயல்பாடுகளிலும் நீரோட்டமாக அமைந்திருந்த ‘பார்ப்பனிய எதிர் மரபு’ அதாவது பவுத்த மரபு.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;மொழி, பண்பாடு, அரசியல் கோட்பாடு ஆகிய அறிவியக்கச் செயற்தளங்களில் இந்துமத எதிர் மரபை உள்வாங்கி, பவுத்த மரபின் அடியொற்றி தமிழகத்தில் இயங்கியவர் அயோத்திதாசப் பண்டிதர். காலத்தால் அம்பேத்கருக்கு முன்னவராக இருந்தும், எல்லா தொல்குடி மரபினருக்கும் வாய்க்கப்பெற்ற அடையாள மறுப்பே அயோத்திதாசருக்கும் நிகழ்ந்தது. சாதி இந்துக்களாக சிந்திக்கப் பழகிய அறிஞர்களாலும் இந்திய பகுத்தறிவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஆரிய-திராவிட போர்க் குரல்களுக்கிடையில் அம்பேத்கரும் அயோத்திதாசரும் கவனம் கொள்ளப்படாமல் இருந்ததொன்றும் வியப்புக்குரியதல்ல. நிலப்பிரபுத்துவத்தால் ‘அரிசனங்கள்’ என்றும் காலனியவாதிகளால் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்றும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரால் ‘பட்டியல் இனத்தவரெ’ன்றும் அழைக்கப்பட்ட இந்திய தொல்குடி மக்களின் அரசியல் பங்கேற்பும் அதிகார மீட்பும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் பார்ப்பன - சூத்திர அதிகார வர்க்கத்தினருக்கு இருந்த ஓர்மையுணர்வே அன்றி வேறு காரணமல்ல.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;தீண்டாமை, வன்கொடுமைகள், சாதியின் பெயராலான சுரண்டல்கள் ஆகியவற்றிற்கெதிராக தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் இரு நூற்றாண்டுகள் அளவிலான போராட்டங்களின் வரலாறு, ஆவணப்படுத்தப்படாமலும் அறிஞர் குழுமங்களுக்குள் விவாதிக்கப்படாமலும் அம்மக்களின் மீதான புறந்தள்ளலைப் போலவே கவனம் கொள்ளப்படாமலும் இருந்தது. 1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி இந்திய தொல்குடி மக்களிடையே எழுந்த அரசியல் புத்தெழுச்சியே, அம்பேத்கரின் எழுத்துகள் தொகுக்கப்படவும் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படவும் காரணமாக அமைந்தது. இப்புத்தெழுச்சிக்குப் பிறகே, புலே, நாராயணகுரு முதல் அயோத்திதாசப் பண்டிதர் வரை பதிப்பிக்கப்படவும் வாசிக்கப்படவும் வாய்ப்புகள் உருவாகின.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;அயோத்திதாசரின் ‘தமிழன்’ பத்திரிகையின் நூற்றாண்டை ஒட்டி, எழுத்தாளர் ரவிக்குமார் போன்றவர்களால் முன்மொழியப்பட்ட ‘தலித் வரலாற்று மாதம்’ - வேனிற்கால வெப்பம் போல கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே நிகழ்வுகளைக் கட்டமைத்து வருகிறது. ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். மதுரையில் இளம்பரிதி (இக்கட்டுரையாளர்), ஸ்டாலின் ராஜாங்கம், அசோக், ஜெகநாதன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ‘அம்பேத்கர் படிப்பு வட்டம்’ என்ற அமைப்பே ‘தலித் வரலாற்று மாதம்’ தொடர் நிகழ்வாகியிருப்பதற்கான தொடக்கம் எனலாம். அம்பேத்கர் படிப்பு வட்டம், அயோத்திதாசர் சிந்தனைகளின் மீதான நான்கு நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ‘அயோத்திதாசர்-அம்பேத்கர் ஆய்வு மாணவர் வட்டம்’ என்ற அமைப்பின் கீழ் 19.4.2008 அன்று ‘தலித் வரலாற்று மாதம்’ சென்னை ‘அய்க்கப்’ அரங்கில் ஒரு நிகழ்வானது.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;இந்நிகழ்வில் விரிவுரையாளர் பாலமுருகன் தமது ஆய்வுரையில், “சோழர் கால கல்வெட்டுகளை அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காணக் கிடைத்த கல்வெட்டுகளை முன் வைத்து பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் தமது ஆய்வு நூலில் முன் வைக்கும் விவாதங்களுக்கு மாற்றாக, நான் வாசித்த வரையில் இக்கல்வெட்டுகளின் தன்மை பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உள்ளடக்கியதாக பவுத்த மரபைக் கொண்டதாக இருக்கிறது. முற்காலப் பாண்டியர் காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில், பாண்டிய மன்னன் தன் உறவினருக்கு பவுத்த அறவியலைக் கற்றுத் தந்ததற்காக, ஓர் பவுத்த துறவிக்கு விகார் கட்டிக் கொடுத்ததாகக் காணக் கிடைக்கிறது. இது பவுத்தம் அன்றைக்கே நிறுவனமாகி இருந்தது என்பதையே சுட்டுகிறது” என்றார்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;இடங்கை வலங்கைப் பிரிவு சோழர்கால ஆட்சியியல் வகையினம் என்றும் இடங்கைப் பிரிவில் பள்ளர், அருந்ததியர், கம்மாளர் மற்றும் சேவைச் சாதியினர் உள்ளடங்கியிருந்தனர் என்றும் வலங்கைப் பிரிவில் பார்ப்பனர், வெள்ளாளர், கள்ளர் இவர்களோடு பறையர்களும் இருந்தனர் என்றும் இப்பிரிவினருக்கு இடையேயான மோதல்களே இடங்கை வலங்கை சண்டைகளாகக் குறிப்பிடப்படுகின்றன எனவும் இதுவரையான வாசிப்புகள் (கல்வெட்டுகள்) தெரிவித்து வந்தன. பாலமுருகன் இக்கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக, சோழர் காலத்திய நிலவுடைமைச் சமூகத்தில், குடிப்படையாக ‘நாடு’’ எனும் அமைப்பின் காவலர்களாகவும் அதற்காக ‘தேவதான’ நிலம் பெற்றவர்களாகவும் ஆளும் வர்க்க விசுவாசிகளாகவும் பறையர்கள் இருந்தனர் என மெய்ப்பிக்கின்றார்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;சமூக அணிசேர்க்கையின் இயல்பில் இடங்கைப் பிரிவினர் ஒடுக்கப்படுகிற சுரண்டப்படுகிற குடிமக்கள் பிரிவினராகவும் வலங்கைப் பிரிவினர் ஒடுக்கும் அரசதிகார ஆளும் வர்க்கமாகவும் நிலைப்பெற்றிருந்தனர். சோழர் கால ஒடுக்குமுறைக்கு எதிராக அணியமாகிய உழைக்கும் மக்கள் பிரிவினராக இடங்கைப் பிரிவினரைக் கொள்ள முடிகிறது. சுரண்டிப் பிழைத்த ஆளும் வர்க்க ஆதிக்க சாதி பிரிவினருக்கு ஊழியம் செய்யவே பறையர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘பறையர் அடிமைப்பட்டு இருக்கவில்லை’’ என நிறுவ முயற்சிக்கும் பாலமுருகன், நிலவுடைமை பிற்போக்குச் சமூகத்தின் வரலாற்று இருப்பை எங்ஙனம் வகைப்படுத்த முனைகிறார்? இது தலித் வரலாற்றியல் நோக்காக இருக்க முடியுமா?&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;அடுத்துப் பேச வந்த ஆய்வாளர் ரகுபதி, “1950க்கு முன்பு வரை சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன், வீரையன், சகஜானந்தா ஆகியோரிடம் இருந்த கூட்டுணர்வும் நேர்மையான அரசியல் செயல்பாடும், தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இல்லாமல் போய்விட்டது. சுதந்திரத்திற்குப் பின் தேர்தல் அரசியலில் இடஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் கட்சி நலனை சார்ந்ததாக மாறிவிட்டது. தலித் இயக்கங்கள் வளர்நிலை அடைந்து விடுதலைக்கான போராட்டங்கள் விரிவடைவதற்குப் பதிலாக சுருங்கிக் கொண்டே வருகின்றன. தேர்தல் கூட்டணி என்ற பெயரில் அரசியல் கட்சிகளோடு தலித் இயக்கங்கள் சமரசம் செய்து கொள்கின்றன” என விமர்சனங்களை முன் வைத்தார்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு மாணவரான பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்ட கிராமமான திருப்பணி கரிசல்குளத்தை முன்னிறுத்தி, தன் ஆய்வுகளை முன்வைத்தார். திருப்பணி கரிசல்குளம் தமிழகத்தின் ஒரு சோற்றுப் பதம். ஒடுக்கப்பட்ட மக்களே மண்ணின் மைந்தர்கள் என்றும், ஆதிக்க சாதியினராலும் வந்தேறிகளாலும் மய்யத்திலிருந்து விரட்டப்பட்டு விளிம்பு நிலைக்கு வந்தவர்கள் என்றும், கடின உழைப்பு ஒன்றையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு, தமது இருத்தலுக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் என்றும் மய்ய நீரோட்ட வாழ்வில் அரசியலில் தம்மை இணைத்துக் கொள்ள முனைபவர்கள் என்றும் நாம் அறிந்த வரலாற்றுச் சித்திரம் ஒன்றையே மீண்டும் மீள்வாசிப்பு&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(68, 68, 68); line-height: 21px;font-family:'Lucida Grande';font-size:100%;"  &gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;செய்தார் பாலசுப்பிரமணியன்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;நாடார்கள் சாதி இந்துக்களின் அணிக்குச் சென்று விட்டனர். ஓர் அரசியல் கட்சிக்குத் தேவையான உழைப்பு எதுவுமின்றி அவர்களின் பொருளியல் பின்புலமே அவர்களின் அடித்தளம் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும்,தி.மு.க.விலும் லகுவாகப் பதவிகளைப் பெற்றுத் (சரத்குமார், ராதிகா செல்வி, பூங்கோதை) தரும். பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான இணக்கம், இன்றைக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இவர்கள் இருவரிடமிருந்தும் அருந்ததியர்கள் வெகுதூரத்தில் விலகி இருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;ஆனால் விட்டு விலகிப் போன நாடார்களையும், நீண்ட கால எதிர் அணியிலிருக்கும் முக்குலத்தோரையும் ‘தமிழர்’’ எனும் அடையாளத்தில் இருத்தி, மய்ய நீரோட்ட அரசியலில் அதிகார மீட்சி பெறலாம் எனும் விடுதலைச் சிறுத்தைகளின் கனவு பலனளிக்குமா? நம்மால் அவர்களுக்கு ஆகப்போவது எதுவுமில்லை. அதிகாரப் பங்கீடு என்பது ஏற்கனவே அவர்களிடம் நடைமுறையில் இருக்கிறது. மய்ய நீரோட்ட சமூக வாழ்வுக்கான (சமூக சமத்துவத்திற்கான) வழி, மய்ய நீரோட்ட அரசியலில் நீக்கமற நிறைவது அல்லது சரணடைவது என்பது, தலித் வரலாற்று மீட்புவாதமாக வரும் காலங்களில் முன்வைக்கப்படும் எனும் ஆபத்தை முன்னறிவிக்கக் கடமைப்பட்டவனாகிறேன்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;அடுத்துப் பேச வந்த பல்கலைக்கழக மாணவி ரத்னமாலா, தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற அரச பயங்கரவாதம் குறித்து ஊடகங்களின் பார்வையைப் பதிவு செய்தார். இப்படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகான ஒரு மாத கால பத்திரிகைகளை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இப்படுகொலை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மோகன் ஆணையக் குழு அறிக்கையிலும், இறந்து போனவர்களின் முதல் தகவல் அறிக்கையிலும் சொல்லப்பட்டிருந்த ‘நீரில் மூழ்கி இறந்தனர்’ என்ற ‘முன் முடிவை’ ‘தினத்தந்தி’ முன்கூட்டியே செய்தி எனும் போர்வையில் வெளியிட்டிருந்தது. மொத்தத்தில் தாமிரபரணி படுகொலைகள் குறித்த உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை” என ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அவர்களின் போராட்டங்கள் குறித்தும் கொண்டிருக்கும் ஒவ்வாமையை (கருத்தியல் தீண்டாமை) அம்பலப்படுத்தினார். ஆனால், ஊடகங்களின் உணர்ச்சியற்ற செய்தி அறிக்கையைப் போலவே ரத்னமாலா, தன் ஆய்வுக் குறிப்புகளையும் தயாரித்து வழங்கியதாகவே இருந்தது.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;அடுத்துப் பேசிய ஸ்டாலின் ராஜாங்கம் தனது உரையில், “புராணங்களே இந்தியாவின் வரலாறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பார் அம்பேத்கர். முன் தீர்மானிக்கப்பட்ட நமது மனநிலை நம்முடைய வரலாற்றையே வேறொரு கோணத்தில் பார்க்கத் தவறி விடுகிறது. அயோத்திதாசர் நந்தனை ஒரு மன்னனாக சித்தரிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள நமக்கு மனத்தடைகள் இருக்கலாம். நந்தனை சாமானிய மனிதனாக தெய்வத்தோடு கலந்து விட்டதாகக் கதையளந்தார்கள். ஆனால் மதுரை மேலூர் அருகிலுள்ள வஞ்சி நகரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கந்தன், இன்று அம்மக்கள் நடுவே நடுகல் தெய்வமாகி இருக்கிறார். இன்றைய சூழலில் இவரைப் போன்றவர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது” என தலித் வரலாறு எங்ஙனம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு இத்தகையதாக ஆவணப்படுத்தப்பட, அம்மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையின் திசை வழியைத் தீர்மானிக்க வேண்டியவர்களாக நாமிருக்கிறோம்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;இறுதியாகப் பேச வந்த அயோத்திதாசர் சிந்தனைகளின் தொகுப்பாசிரியர் ஜி. அலாய்சியஸ், “பல்கலைக் கழகத்திற்கு வெளியே தன்முனைப்புடன் சில மாணவர்கள் கூடி இப்படியொரு நிகழ்வை சாதிப்பது, வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. நம் மாணவர்களின் திறன் அயோத்திதாசர் குறிப்பிடுவது போல, ‘கண்டுபடிப்பது தான் படிப்பு, மீதமெல்லாம் தெண்டப்படிப்பு.’ தலித் இயக்கங்களின் இருப்பைக் கடந்து, தலித் மக்களின் அரசியல் அடித்தளமும் சமூக உணர்வும் விரிவடைந்து சரியாகவே இருக்கிறது. இச்சூழலை நாம் சரியாக மதிப்பிட வேண்டும்” எனக் கூறி மாணவர்களின் இந்த அறிவியக்கத்தை ஊக்கப்படுத்தினார். பல்கலைக்கழக மாணவர் பொன்னுசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;சமரசமற்ற போராட்டங்களும், அளப்பரிய தியாகங்களுமே பேரறிஞர் அம்பேத்கர் நமக்குக் கையளித்துச் சென்ற அரசியல் திசை வழி என்பதை, தலித் வரலாற்று மாதத்தை முன்னெடுக்கும் இச்சூழலில் உணர்வோம். ‘வரலாற்றை எழுதுதல்’’ எனும் நிறுவன இருப்பின் மீதான மறு வாசிப்பையும் தொல்குடி மக்களின் வரலாற்று மீட்பையும் நிகழ்த்துவோம்.&lt;strong style="margin: 0px; padding: 0px;"&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 13px 0px; padding: 0px;"&gt;&lt;span style="margin: 0px; padding: 0px; color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong style="margin: 0px; padding: 0px;"&gt;- தலித்முரசு - ஏப்ரல் 2008&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-3462612476082331785?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/3462612476082331785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=3462612476082331785' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/3462612476082331785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/3462612476082331785'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2008/12/blog-post.html' title='‘வரலாற்றை எழுதுதல்’'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-3896935201180876648</id><published>2008-11-02T14:08:00.008+05:30</published><updated>2009-08-26T01:04:46.169+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு...</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:large;"&gt;சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு…&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SQ113w0WvCI/AAAAAAAAAB8/p9-Gc5uSFjk/s1600-h/tamilselvan9.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 250px; height: 336px;" src="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SQ113w0WvCI/AAAAAAAAAB8/p9-Gc5uSFjk/s400/tamilselvan9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5263993140323728418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்டு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்ற ஈழ விடுதலைப்போரின் ஈகை வரலாற்றில் இன்னும் எத்தனை மாமணிகளை தாரை வார்க்க நாம் சித்தமாய் இருக்கிறோம்&lt;span&gt;।&lt;/span&gt; தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே – நம் குலை பதறுகிறது. திலீபன், கிட்டு, தாணு... இன்று சுப.தமிழ்ச்செல்வன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலிகளின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும் ஈழப்போராட்டம் குறித்து பாராமுகம் கொள்பவர்களையும் கூட தமது வசீகரப் புன்னகையால் கவர்ந்து, ‘தமிழீழ தாயகம் ஈழ மக்களின் தாகம்’ என்பதை மொழி கடந்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்றவர் சுப&lt;span&gt;।&lt;/span&gt;தமிழ்ச்செல்வன். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உலகத்தின் கவனம் பெற்ற ஒரு கெரில்லா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் தோழர்.தமிழ்ச்செல்வன் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது ஆற்றொணாத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள எமக்கு வார்த்தைகள் இல்லை. இலங்கை இனவெறி அரசின் வான்வழித் தாக்குதலுக்குப் பலியான போராளிகளுக்கு ஏகலைவன் தோழமையின் வீரவணக்கங்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஈழ (தமிழின்) செல்வனே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எம் கண்களின் முன்னே&lt;br /&gt;உமிழ்கிறது...&lt;br /&gt;உன் புன்னகையின் வசீகரம்&lt;br /&gt;ஒற்றைக்கால் தாங்கி&lt;br /&gt;நீ பயணித்த திசைகளில்&lt;br /&gt;சமாதானத்தின் தூது செல்ல&lt;br /&gt;உன் விரல் படர்ந்த&lt;br /&gt;ஊன்று கோல் மட்டுமே இனி...&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையின் நீண்ட பாதையில்&lt;br /&gt;துவண்டு வீழாமல்&lt;br /&gt;தோழர்கள் நடைபயில&lt;br /&gt;உடன்வரும் உன் நினைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;செவ்வணக்கம் தோழனே&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கா।இளம்பரிதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;(இக்கவிதை சென்ற வருடம் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவின் போது எழுதியது)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-3896935201180876648?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/3896935201180876648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=3896935201180876648' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/3896935201180876648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/3896935201180876648'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2008/11/blog-post.html' title='சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு...'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/SQ113w0WvCI/AAAAAAAAAB8/p9-Gc5uSFjk/s72-c/tamilselvan9.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-1091468484594868259</id><published>2008-02-22T22:32:00.001+05:30</published><updated>2009-08-26T01:03:45.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மரண தண்டனை ஒழிக : MY BELOVED MAGDALENE</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;&lt;span class="bltxt"&gt;- இளம்பரிதி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மனமுவந்து ஏற்கிறேன். . .&lt;br /&gt;உலகின் இரட்சகன் நானென&lt;br /&gt;நல் மேய்ப்பன் நானென&lt;br /&gt;பிரகடனம் செய்த கொடுங் குற்றத்தின் பொருட்டு&lt;br /&gt;இப் பெருந் தண்டனையை -&lt;/p&gt; &lt;p&gt;நீதி பரிபாலனம் வழுவாத&lt;br /&gt;உங்கள் சட்டப் புத்தக நெறிவழி&lt;br /&gt;முன்னரே தீர்மானிக்கப்பட்ட&lt;br /&gt;முறைமைகள்&lt;br /&gt;பல உண்டெனினும்&lt;br /&gt;எனக்கான தண்டனை முறைமையை&lt;br /&gt;தெரிவு செய்யும் உரிமையைக் கூட&lt;br /&gt;நான்&lt;br /&gt;இழக்கப் போவதில்லை உங்களிடம் -&lt;/p&gt; &lt;p&gt;மின்சார நாற்காலியைப் புறக்கணிக்கிறேன்&lt;br /&gt;நீங்கள் பரிகசித்த போதும் -&lt;/p&gt; &lt;p&gt;தண்டனைக்காகும் மின் அளவைப் பெருக்கி&lt;br /&gt;நான் இரட்சிக்க நினைத்த&lt;br /&gt;விளக்கு நெய்தூர்ந்து இருண்டுறங்கும்&lt;br /&gt;எண்ணிறந்த பாவக்குடிகளின்&lt;br /&gt;ஓலைக் குடில்களுக்கு அளியுங்கள் -&lt;/p&gt; &lt;p&gt;ஒளியும்&lt;br /&gt;ஜீவனுமாயிருப்பவன் நானே;&lt;/p&gt; &lt;p&gt;தூக்குக் கயிற்றைப் புறக்கணிக்கிறேன்&lt;br /&gt;நீங்கள் ஏளனம் செய்தாலும் -&lt;/p&gt; &lt;p&gt;மாற்றுடுப்பும் உறையுளுமில்லாத&lt;br /&gt;நான் கற்பிக்க விழைந்த&lt;br /&gt;பாவ நிழல் படியாத&lt;br /&gt;கருப்பு&lt;br /&gt;வெள்ளை மஞ்சள் பழுப்பு இளஞ்சிவப்புக்&lt;br /&gt;குழந்தைகள் துயில&lt;br /&gt;தூளிக் கயிறும் தொட்டில் துணிக்கு&lt;br /&gt;அவிழ்ந்த என் அங்கியும் தாருங்கள் -&lt;/p&gt; &lt;p&gt;மேய்ப்பனின் மடி உறங்கும்&lt;br /&gt;நல்லாடுகள் குழந்தைகளே;&lt;/p&gt; &lt;p&gt;கில்லட்டினைப் புறக்கணிக்கிறேன்&lt;br /&gt;நீங்கள் எள்ளி நகையாடினாலும் -&lt;br /&gt;யெருசலேம் வீதியெங்கும் அரற்றி நிற்கும்&lt;br /&gt;அடிமை விலங்கு உடைபடா&lt;br /&gt;யூதப் பெண்டிரின் அரசனுக்கு&lt;br /&gt;மடிய மனமொப்பவில்லை&lt;br /&gt;தலை துண்டித்த உடலமாய்;&lt;/p&gt; &lt;p&gt;இது கிறித்துவின் குருதி&lt;br /&gt;யாவரும் பருகக் கையளியுங்கள்&lt;br /&gt;இது பரிசுத்த உடலம்&lt;br /&gt;யாவரும் புசிக்கப் பரிமாறுங்கள்&lt;/p&gt; &lt;p&gt;நானே சுமந்துவருவேன்&lt;br /&gt;எனக்கான கொலைக்கருவியை -&lt;/p&gt; &lt;p&gt;எம் குலத்தொழிற் பட்டறையில்&lt;br /&gt;எஞ்சிய மரத் தூணிலிருந்து&lt;br /&gt;நானே செதுக்கிய&lt;br /&gt;சிலுவை;&lt;/p&gt; &lt;p&gt;அளவும் எடையும் உறுதிசெய்யப்பட்ட&lt;br /&gt;குற்றங்களுக்கொப்ப உள்ளதாவென&lt;br /&gt;நேர்செய்து கொள்ளும்&lt;br /&gt;உங்கள் உரிமையில்&lt;br /&gt;தலையிடப் போவதில்லை நான் -&lt;/p&gt; &lt;p&gt;என் இறுதி விருப்பம்&lt;br /&gt;அறிந்து கொள்வீர்க ளெனில்&lt;br /&gt;. . . .&lt;br /&gt;குழந்தைகள் உறங்க அங்கியை இழந்த&lt;br /&gt;என் அம்மணம் மறைக்க&lt;br /&gt;இடுப்பளவு துணியைத் தருவீர்க&lt;br /&gt;ளென்பதுவே -&lt;/p&gt; &lt;p&gt;ஆயினும் அது எளிதல்ல&lt;/p&gt; &lt;p&gt;என் அன்புக்குரியவள் முக்காடிட்டு அணிந்திருக்கும்&lt;br /&gt;படைப்பின் உண்மைகள் பொதிந்த&lt;br /&gt;நிறமற்ற அத்துணி&lt;br /&gt;உங்களிடம் கிட்டும் வரை&lt;br /&gt;என் தண்டனையின் நிகழ்வுக்குக்&lt;br /&gt;காத்திருக்கட்டும் காலம் -&lt;/p&gt; &lt;p&gt;அதுவரை&lt;br /&gt;எனக்கான முள்முடி பின்ன&lt;br /&gt;உங்களுக்குத் தடை யேதுமில்லை&lt;/p&gt; &lt;p&gt;&lt;b&gt;புதியகாற்று - ஜனவரி 2007&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-1091468484594868259?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/1091468484594868259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=1091468484594868259' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/1091468484594868259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/1091468484594868259'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2008/02/my-beloved-magdalene.html' title='மரண தண்டனை ஒழிக : MY BELOVED MAGDALENE'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-5238888428649347468</id><published>2008-01-05T11:49:00.005+05:30</published><updated>2008-04-30T13:35:07.478+05:30</updated><title type='text'>‘தலித்முரசு முடிவை நோக்கி...’</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;‘தலித்முரசு முடிவை நோக்கி...’&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக – ஆவணப்படுத்தப்படும் அச்சு வடிவமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தலித் முரசு’ இதழின் முக்கியத்துவம் குறித்து சமகால வாசகர்கள் யாவரும் அறிவர்। கடந்த நவம்பர்2007 இதழில் ‘தலித்முரசு முடிவை நோக்கி...’என்ற வேதனைமிகு அறிவிப்பு ஒன்றை அவ்விதழின் ஆசிரியர் எழுதியிருந்தார். பெரிதும் வணிகமயமாகி வரும் நமது சமூக சூழலில் தார்மீக நெறிகளுக்கு மாறாக, தம் அடிப்படைக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் எந்த ஒரு தனிமனிதனும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தனி மனிதர்களையும் தாண்டி நிறுவனங்கள், துறைகள், சமூக குழுமங்கள், அரசியல் அமைப்புகள், அறநெறிகள் என நேரிய பாதையில் பயணிக்க விழையும் அரிதான சிலவற்றையும் விட்டுவைக்கவில்லை. வேரடி மண்ணோடு வீழ்த்திவிட துடிக்கிறது வணிக மோகமும் நுகர்வு வெறியும் கொண்டலையும் சமகால சமூகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ‘நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்ற வார்த்தைகளில் அறநெறிகளை, மதிப்புமிகு விழுமியங்களை, அழிவுறாத உண்மைகளைப் பேசியும் எழுதியும் காத்தும் வரும் தலைமுறை முற்றாக அழிந்துவிடுவதில்லை. 90 விழுக்காட்டு சமூகக் கழிவுகளை சுத்தம் செய்து, தன் வலிபொறுக்கும் 10 விழுக்காட்டு சமூக ஆற்றல்களை புசிக்க அலையும் பெருந்தீனி சமூகத்தின் முகத்தில் காறி உமிழ வேண்டாமா? சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட ஒவ்வொருவரின் கடமையாக 10 விழுக்காடேயான உண்மைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. அவ்வகையான செயல்களில் ஒன்றே ‘தலித் முரசு’ போன்ற இதழ்களைத் தாங்கிப் பிடிப்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் முரசு என்று பெயர் தாங்கி இருப்பதாலேயே இவ்விதழ் தலித் மக்களின் உணர்வுகளை – நியாயங்களை மட்டும் பேசி வந்ததில்லை என்பதை தொடர்ந்து இவ்விதழின் வாசிப்பாளர்களாக இருப்பவர்கள் அறிவர்। சாதி, மதம், வர்க்கம், இனம், பால் என அனைத்து தளங்களிலும் நிலவும் ஆதிக்க – அதிகார வன்முறைகளை எதிர்த்தும், மறுதலிக்கப்படும் குரல்களை உயர்த்திப் பிடித்தும் வந்திருக்கிறது தலித் முரசு। நமது சமகாலத்தின் குரலாக, ஒடுக்கப்பட்ட மனங்களின் பதிவாக இது போன்ற இதழ்களை உயிர்த்திருக்கச் செய்ய வேண்டியது நம் கடமையென உணர்வோம்.ஒவ்வொருவரும் ஆண்டுக்கட்டணம் (சந்தா) செலுத்தி உறுப்பினராவோம். நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவோம். ‘சத்தியவான் பலவான்’ என நிலைநிறுத்துவோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆண்டுக் கட்டணம்: ரூ.100&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;வாழ்நாள் கட்டணம்: ரூ.1000 &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தொடர்பு முகவரி:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;புனித பாண்டியன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆசிரியர் - தலித்முரசு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;203, ஜெயம் பிரிவு - சித்ரா அடுக்ககம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;9, சூளைமேடு நெடுஞ்சாலை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;சென்னை-600 094&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;தொலைப்பேசி: 044-2374 5473&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-5238888428649347468?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/5238888428649347468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=5238888428649347468' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/5238888428649347468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/5238888428649347468'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2008/01/blog-post.html' title='‘தலித்முரசு முடிவை நோக்கி...’'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-7959967786709743564</id><published>2007-12-26T21:25:00.004+05:30</published><updated>2009-08-26T01:03:10.472+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேவர் ஜெயந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துராமலிங்கம்'/><title type='text'>ஜாதி வெறி கொண்டாட்டங்கள்</title><content type='html'>&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:180%;" &gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- கா.இளம்பரிதி&lt;/span&gt;&lt;br /&gt;(தலித் முரசு நவம்பர் 2007)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் படுகொலை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல், கடந்த அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை, தென்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 பேர் மீது வழக்குகள் புனைவு என்பதாக, முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கி வைத்த வன்முறைகள், ஜாதி/கோஷ்டி மோதல்களாக வழக்கம் போல் கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன। தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருவர் தவறாமல் ஒட்டுமொத்தமாகக் கலந்து கொண்ட இவ்விழாவின் மூலம், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/R3J6SZMzI3I/AAAAAAAAABE/KLCxR_UH2Rs/s1600-h/karunanidhi.jpg"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன। அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 3&lt;a href="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/R3J6SZMzI3I/AAAAAAAAABE/KLCxR_UH2Rs/s1600-h/karunanidhi.jpg"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5148311780458701682" style="margin: 0px 0px 10px 10px; float: right; width: 365px; height: 274px;" alt="" src="http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/R3J6SZMzI3I/AAAAAAAAABE/KLCxR_UH2Rs/s320/karunanidhi.jpg" width="313" border="0" height="192" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;0 ஆகிய மூன்று நாட்கள் ‘தேவர் ஜெயந்தி விழா' கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்' என்றும் ‘தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்' என்றும் "போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;முத்துராமலிங்கம் நூற்றாண்டுக்கு 2 கோடி ஒதுக்கியது யார்? 3 கோடி ஒதுக்கியது யார்? என கருணாநிதியும் ஜெயலலிதாவும் பட்டிமன்றம் நடத்தினர்। ஆனால், அரசுத் துறைகளின் மேற்சொன்ன ஒருவார கால ‘திட்டத்தில் வராத' (மக்கள் நலத் திட்டங்களில்) செலவினங்கள் எத்தனை கோடி எனக் கேட்கத்தான் இங்கு எவருமில்லை. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி முத்துராமலிங்கத்தின் நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தமிழக முதல்வரே பசும்பொன் விழாவில் கூறியிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இவ்விழாவின் பக்க விளைவாக, பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த 75 தலித் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்। அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரி வித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் ‘நிரந்தரமற்றது' என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. மேலும், முத்துராமலிங்கம் இறந்து போன மதுரை பசுமலையில் அவரது நினைவு மண்டபத்தைக் கட்ட அரசு முடிவு செய்து, அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இந்நினைவு மண்டபம் கட்டத் தேவைப்படும் இடத்திற்காகப் பசுமலையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஒரு மேல்நிலைப் பள்ளியின் இடத்தையும் அரசு கேட்டுள்ளது। இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அரசிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார். ‘முத்துராமலிங்கத்தை ஒரு தேசியத் தலைவராகவும் தலித் மக்களை அழைத்துக் கொண்டு அவர் ஆலயப் பிரவேசம் செய்ததாகவும், அப்படிப்பட்டவருக்கு இடம் தர பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்' எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதியரசர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம்-நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக் கூடத்தை மய்யப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர் நீதிமன்றம்। பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை வேண்டாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு நூற்றாண்டு விழா எடுப்பதைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகயிருந்த ஜீவா, ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றன। ஆனால், இவ்விழாக்கள் ஒரு நாள் மட்டுமே அரசால் நடத்தப்பட்டன. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மிக வலிமையான அரசியல் கட்சியாகவும் அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தும், சுமார் நூறு பேர்கள் அளவிலே வந்திருந்ததால்தான்-அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பகத்சிங்கை வழிபாட்டு உருவாக மட்டுமே உயர்த்திப் பிடித்து, போர்க்குணத்துடன் அரசியல் அரங்குகளுக்கு வரும் இளைஞர்களை தமது நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் அணியமாக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட, இவ்விழாவிற்கு தமது இளைஞர் பட்டாளத்தை அனுப்பி வைக்கவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் ‘பொது அடையாளம்' அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் ‘தேசியத் தலைவர்' என்றும் "அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர்' என்றும் ‘சுதந்திரப் போராட்டத் தியாகி' என்றும் ‘தலித் மக்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தவர்; தனது நிலங்களை தலித் மக்களுக்குப் பிரித்து வழங்கியவர்' என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குடிமகனாகப் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர, பிற அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை। சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், காலம் அனைத்தையும் அர்ப்பணித்து, காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, கடும் இன்னல்களை சந்தித்து மறைந்தவர் வ.உ. சிதம்பரனார் அவர்கள். அவருக்கு ‘தேசியத் தலைவர்' அடையாளம் வழங்கப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்டு- சொந்த சாதி மக்களைத் தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி, சாதி வெறியூட்டி, தமிழகத்தில் ‘சாதிக் கலவரம்' என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு (முத்துராமலிங்கத்திற்கு) இப்பட்டம் சூட்டப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசு அதை அங்கீகரிக்கலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;முத்துராமலிங்கம் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகவோ, அதற்கு உதவியதாகவோ வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை। நில உச்சவரம்புச் சட்டத்திற்குப் பயந்து தனது சொத்துகளை அவர் பதினாறு பங்காகப் பிரித்து, தன் விசுவாசிகளின் பெயரில் பினாமி சொத்துகளாக மாற்றினார். இதில் பதினைந்து பினாமிகள் அவரது சொந்த சாதியினர். ஒருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது ஏவலுக்கு சேவகம் புரிந்த சோலைக் குடும்பன் போன்ற ஒரு விசுவாசியை பினாமியாக்கி-தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அவர்தம் துதிபாடிகள், தலித் மக்களுக்கு அவர் தன் நிலங்களைப் பிரித்துக் கொடுத்ததாகக் காலந்தோறும் கதையளந்து வருகின்றனர். சொத்துத் தகராறுக்காகத் தனது நெருங்கிய உறவினரைத் தாக்கியவர் என்பதும் குடும்ப வழி சொத்துகளுக்காக தன் தந்தையின் மீதே வழக்குத் தொடுத்தவர் என்பதும், முத்துராமலிங்கம் என்னும் பிற்போக்கு நிலவுடைமையாளரின் மறைக்கப்படும் பக்கங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;1957இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகக் கருதிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட முத்துராமலிங்கத்தைத் தான் – தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சாதி வேற்றுமைகளைச் சாடியவர் என்றும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உட்படப் பலரும் வாய்கூசாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்। காமராஜரை பொதுமேடைகளில் ‘சாணான்' என இழிவுபடுத்திப் பேசியவர் என்பதும், சீனிவாசய்யங்கார், ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்களையே தனது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டிருந்தவர் என்பதும் அவரது இந்துத்துவ-சாதிய சார்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று முழங்கிய முத்துராமலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒருசேர வழிபடும் தலைவராக இருக்கும் முரண் பகை முரண் அல்ல। சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் போகிற போக்கில் "நாலு நல்ல வார்த்தைகள்' பேசிவிட்டால் போதும், எவரொருவரையும் துதி பாடி கொண்டாடக் காத்திருக்கிறது பிழைப்புவாத அரசியல் நடத்தும் சாதி இந்துக்களின் கூட்டம். காங்கிரஸ் கட்சியில் தான் விரும்பிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதால் தான் முத்துராமலிங்கம் நேதாஜி அணியில் இணைந்து கொண்டாரே ஒழிய, சுபாஷின் அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றியவராக அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மேற்கு வங்கத்தில் பார்வர்டு பிளாக் கட்சி, இடதுசாரி கூட்டணியிலுள்ள ஒரு சோஷலிஸ்டு கட்சியாம் (!) தமிழகத்திலோ ஒரு சாதிச் சங்கம் என்ற அளவிற்கு அக்கட்சியைத் தரம் தாழ்த்தியதும், அதிலும் சாதி வெறியர்கள் ‘குரங்குகள் அப்பம் பிட்ட கதை' யாக அதை எட்டுக் குழுக்களாகப் பிரித்து, கட்டைப் பஞ்சாயத்து கும்பல்களாகப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் உருவாக்கிய ‘பெருமை'யும் முத்துராமலிங்கத்தையே சாரும்। தற்பொழுது, கழிசடை சினிமாக்காரன் கார்த்திக் ஒரு கும்பலுக்குத் தலைவனாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பிற்போக்குத்தனமான நிலவுடைமை அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், பொது சமூகத்தின் நலன் கருதி மறவர் மற்றும் பிரன்மலைக் கள்ளர் ஆகிய 16 சாதியினர் மீது ‘கை ரேகைச் சட்டத்தைப் பிரயோகிப்பவர்களாகவும் ஆங்கிலேய ஆட்சியினர் இருந்த காரணத்தால்தான் முத்துராமலிங்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய அவசியத்திற்குள்ளானார்। தனது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு, நேதாஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட முத்துராமலிங்கத்திற்கு வீர சாவர்க்கர், கோல்வால்கர், திலகர், நாதுராம் கோட்சே போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகள்தான் ஆதர்ச தலைவர்கள். இதற்கு நேர்மாறாக, காங்கிரசின் மிதவாத அரசியலை உள்வாங்கிக் கொண்டாலும், காமராஜரின் அடித்தட்டு வர்க்க உணர்வோட்டத்தைப் புரிந்து கொண்டவராக, தீண்டாமை சாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் சமரசமற்ற போர்க்குணத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கியவராக விளங்கியவர் இம்மானுவேல் சேகரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;‘முதுகுளத்தூர் கலவரம்' தொடர்பாக கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டிய முத்தரப்பு சமாதானக் கூட்டத்தில் தனக்கு இணையாக, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கையில் அமர வைக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக, தனது அடியாட்களை ஏவி, இம்மானுவேலைக் கொலை செய்தவர் முத்துராமலிங்கம்। இக்கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டாலும் இம்மானுவேல் கொலைக்குக் காரணமானவர் என்ற வடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் தீராத வலியாய் தேங்கிப் போயுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தலித் மக்கள் மீதான தீண்டாமை ஒதுக்கலையும் சாதிப் பாகுபாடுகளையும் வெளிப்படுத்துவதில் சாதி இந்துக்களில் எந்தவொரு தனித்த சாதியினரும் குறைவானவர்கள் அல்ல। ஆனால், எண்ணிக்கையில் அதிகமான குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே, தலித் மக்கள் மீதான நிரந்தர வன்முறையாளர்களாகத் தங்களை நிறுவிக் கொண்டுள்ளனர்। தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ‘முக்குலத்தோர்' என்று அழைக்கப்படும் மூன்று சாதியினரும், வடமாவட்டங்களில் வன்னிய சாதிக் குழுமமும், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கொங்கு வேளாளக் கவுண்டர்களும், பரவலாக நாயுடு சாதியினரும் தான் பெரும்பான்மையான இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இதற்கான காரணங்கள் ஆய்வுக்குரியவை அல்ல। மேற்குறிப்பிட்ட இச்சாதியினர் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களாக இருப்பதும், தத்தம் பகுதிகளில் சாதிய அரசியல் அதிகார மய்யங்களில் செல்வாக்கு மிக்கவர்களாகத் தங்களை நிரந்தரப்படுத்திக் கொள்ள எத்தனிப்பதுமே, இத்தகைய வன்முறைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதிலுள்ள அடிப்படை நோக்கம். தனக்குக் கீழேயுள்ள பலவீனமான பிரிவினரை ஒடுக்கி, பொது சமூக வெளியில் அச்சத்தையும் பிற சமூகத்தினருக்கு எச்சரிக்கையையும் ஊட்டுவதன் மூலம் தங்கள் ஆதிக்கம் வலுப்படும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி, மய்ய நீரோட்ட அரசியலில் தமக்கென வலுவான இடத்தை நிறுவிக் கொண்டவர்கள் வன்னியர்கள்। ராமசாமி படையாச்சி முதல் மருத்துவர் ராமதாஸ் வரை, இதற்கான உந்துவிசையாகப் பயன்பட்டவர் முத்துராமலிங்கத் (தேவர்) என்றால், அது மிகையல்ல. தென்மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, அதன் வழியே மய்ய நீரோட்ட அரசியலில் மற்றெந்த சாதியினரை விடவும் தங்களை உச்சபட்ச அதிகாரத்தில் இருத்திக் கொண்டிருப்பவர்கள், முக்குலத்தோர் எனப்படும் மூன்று சாதிக் கூட்டணியினர்தான். தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியில் கூட முக்கியப் பொறுப்புகளில் இவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். வலுவான சாதிக் கூட்டணி உருவாகியுள்ளது. இதை மூடி மறைக்க, அவ்வப்போது தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும் ஆதிக்க சாதிக் கூட்டணிக்கு, தொல் தமிழர்களே சாமரம் வீசிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இத்தகைய பேராபத்தான ஆதிக்க சாதி அரசியல் கூட்டணி உருவாகியுள்ள சூழலில் தான், எச்சரிக்கை செய்யும் முகமாக, முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து – ‘ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி'யின் மாநில அமைப்பாளர் அ। சிம்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (w.p.No. 33699/2007) ஒன்றை கடந்த அக்டோபர் 23 அன்று தொடுத்தார். தமிழ் நாடு அரசு, ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவருக்கு அரசு சார்பில் விழா எடுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய கூறுகளுக்கு எதிரானது என்றும், விதி 17க்கு எதிரானது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளாகக் கூறப்பட்டுள்ள விதி 51 A(c&amp;amp;e)க்கு எதிரானது என்றும், எனவே அந்த விழாவை இல்லா நிலையது மற்றும் சட்டப் புறம்பானது (Null and void and illegal) என அறிவிக்கக் கோரியும், எதிர்காலத்தில் எந்த தனிப்பட்ட சாதியத் தலைவருக்கும் மக்கள் நல அரசு விழாக்கள் நடத்தக் கூடாது என்றும் கோரப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, தலைமை நீதிபதி வழக்கை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்। தமிழக முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த எம். பக்தவச்சலம் 26.10.1957 அன்று தமிழக சட்டப் பேரவையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் மீது குற்றம் சாட்டி தாக்கல் செய்திருந்த அறிக்கையின் சில பகுதிகளை வாதியின் வழக்குரைஞர் படித்துக் காட்டிய பிறகே, தலைமை நீதிபதி வழக்கை அனுமதித்தார். அப்போது அவர் அரசு வழக்குரைஞரிடம், "21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தீண்டாமை போன்ற கொடிய குற்றங்களை ஒழிக்க வேண்டும். அரசே இவ்வாறு நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன'' என்று கூறினார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, பதில் தர வேண்டுமென அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மேலும், இந்த விழா எடுப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு வருவதற்கும், தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது। முத்துராமலிங்கம் காலத்திலிருந்தே தென் மாவட்ட தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக ஆதிக்க சாதியினர் மேற்கொண்டு வரும் வன்முறைகள் (மேலவளவு முருகேசன் படுகொலை உட்பட) பலவும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. தற்பொழுது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அரசு திட்டமிட்டவாறு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் விழாவை நடத்தி முடித்துள்ளது. அதன் விளைவாக, வழக்கில் சுட்டிக் காட்டியவாறு இன்றுவரையும் தென்மாவட்டப் பகுதிகளில் சமூகப் பதற்றமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ளது. இதற்கான சூழலை அரசே உருவாக்கியதன் தொடக்கப் புள்ளியாக,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள தலித் மக்கள் வாழும் வீரம்பலுக்கும் மறவர் சமூகத்தினர் வாழும் இளஞ்செம்பூருக்கும் இடையே மோதல் கருக்கொண்டது। முதுகுளத்தூருக்குப் படிக்கச் செல்லும் வீரம்பல் பள்ளி மாணவர்கள் சிலரை அடித்தும், மாணவிகளைக் கேலி பேசியும் இளஞ்செம்பூர் மறவர்கள் அச்சுறுத்தி யுள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்ட பிறகும், ‘சேதுநாடு தெய்வீகப் பேரவை' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவிற்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இவ்விழாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள், திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தின் தலைவரான பி.டி. குமாரும், ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவரான பூவலிங்கம் என்பவருமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தவர் தான், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி। 1993 முதல் பரமக்குடியிலிருந்து பொன்னையாபுரம்-கீழத்தூவல்-கீழக்கன்னிச்சேரி வழியாகப் பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் இவ்வழியில் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பதற்றமான நேரங்களில் தடை நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான பூவலிங்கம், பரமக்குடி அய்ந்து முனை சாலையில் கிருஷ்ணசாமிக்கு பி.டி. குமார் மாலை அணிவித்து சந்திக்க வைத்த ("நக்கீரன்' 7.11.2007) பிறகு, அனைவரும் ஏறத்தாழ 20 கார்களில் இவ்வழியிலேயே பயணம் செய்துள்ளனர். கீழத்தூவலுக்கும் கீழக்கன்னிச்சேரிக்கும் இடையில் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட நாளிலிருந்து, அனைத்து தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் "மர்மக் கும்பல்' ஒன்று தாக்கியதாகவே செய்தி வெளியிட்டு வந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஆனால், காவல் துறையோ ஊகத்தின் அடிப்படையிலேயே கீழக்கன்னிச் சேரியைச் சேர்ந்த 59 தலித்துகள் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை 13 நபர்களைக் கைது செய்துள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்படும்போது, அடுத்த காரில் இருந்த பி.டி. குமார் தப்பித்து வேறு காரில் ஓடிவிட்டதாக, அவர் தந்த வாக்குமூலத்தையே ஊடகங்கள் எழுதி வருகின்றன. ஆனால், தலித் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட பி.டி. குமார்-பூவலிங்கம் சாதிவெறிக் கும்பல் முன்னேற்பாடாக இச்சதிச் செயலை செய்திருக்கக் கூடாதா என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சியிலேயே பலருக்கும் எழுந்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வீரம்பல், கீழக்கன்னிச்சேரி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, முதுகுளத்தூர் பகுதியின் சமூக சூழலை விசாரணை செய்யும் முகமாக, ‘வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர் மய்யம்' என்ற அமைப்பின் கீழ் வழக்குரைஞர்கள் இன்குலாப், பகத்சிங், வையவன், முருகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அசோக், சுரேஷ், இருளாண்டி உள்ளிட்ட பதினாறு பேர் கொண்ட குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது।&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;அதில், "கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் பி।டி. குமார் மற்றும் பூவலிங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதற்கு, போதுமான நியாயம் உள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக இரவு 8.30 மணியளவில் பி.டி. குமார் தாக்கப்பட்டதாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்தியால், முதுகுளத்தூரில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவரும், அப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவருமான வின்சென்ட் சாம்சனை, 25க்கும் மேற்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இக்கொலை வெறித்தாக்குதல் பி.டி. குமாரின் திட்டமிட்ட சதியால் நடந்துள்ளது என்பதற்குப் போதிய காரணங்கள் உள்ளன'' என்று கூறியுள்ளனர். கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்து அரசுக்கு அறிக்கை தர நியமிக்கப்பட்டுள்ள அய்.ஏ.எஸ். அதிகாரியான பரூக்கி, நாம் எழுப்பும் சந்தேகங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;நிறைமாத கர்ப்பிணியான வின்சென்ட்டின் மனைவி கெர்சியாள் சகுந்தலா, கொலையில் தொடர்புடையவர்களின் பெயர்களை நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தும் இவர்களைக் கைது செய்வதில் காவல் துறை, மெத்தனம் காட்டுகிறது। முதுகுளத்தூர் வட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமுள்ள தலித் கிராமங்களில் விசாரணை என்ற பெயரிலும் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரிலும் நள்ளிரவிலும் அத்துமீறி பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றனர். 30.10.2007 அன்று இரவு 8 மணியளவில் நுழைந்து பெண்களை மிரட்டியுள்ளனர். 31.10.07 அதிகாலை 5 மணியளவிலும் கீழக்கன்னிச்சேரி கிராமத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினர், தலித் பெண்களிடம் மிகவும் கேவலமாகப் பேசியுள்ளனர். சில வீடுகளையும் அங்கிருந்த உடைமைகளை யும் அடித்து நொறுக்கி, காவல் துறை அராஜகத்திற்கு நிரந்தர சாட்சியமான ‘கொடியங்குள'த்தை நினைவுபடுத்திச் சென்றுள்ளனர். முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தலித் மக்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இன்றுவரை இப்பகுதியில் நிகழ்ந்து வரும் காவல் துறை அத்துமீறல்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வியல் நெருக்கடிகளையும் துளியளவும் கண்டு கொள்ளாத தமிழக அரசுக்குத் துணை போவதாகவே, ஊடகங்களின் மவுனத்தைக் கருத முடிகிறது। "ஏற்கனவே தேவர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவரான ஒரு ஆசிரியரை வெட்டிக் கொன்றனர்'' என ‘நக்கீரன்' 7.11.07 இதழில் அதன் இணையாசிரியரே எழுதுகிறார். வின்சென்ட் வெட்டிக் கொல்லப்பட்டதற்கான தேவர் சாதி மன உணர்வை நியாயப்படுத்தும் விதமாகவே, போகிற போக்கில் எவ்வித ஆதாரங்களுமின்றி அழுத்தம் திருத்தமாக ‘நக்கீரன்' காமராஜ் எழுதிச் செல்கிறார். ஆனால், ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், முதுகுளத்தூரில் வசித்து வந்த மறவர் சாதியினரோடு நட்புறவோடும் பழகி வந்தவரான வின்சென்ட் மீது இப்படியொரு குற்றச்சாட்டோ, அது குறித்த வழக்குகளோ இல்லை. "நக்கீரன்' 10.11.07 இதழில் வின்சென்ட் மனைவியும் இதை உறுதி செய்திருக்கிறார். ‘நக்கீரன்' வருத்தம் தெரிவிப்பதே அதன் பத்திரிகை தர்மமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கலவர ஈரம் காயக்கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறதா என சந்தேகிக்கும் வகையில், பசும்பொன் கிராமத்தில் பேசும் போது, ‘மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட ஆவன செய்வேன்' என்றும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவில் ‘முக்குலத்தோர் ஒரு மனதாக விரும்பினால் "தேவரினம்' என ஒரே பெயரில் அழைக்கப்பட அரசு ஆணை வெளியிடப்படும்' என்று இரு முக்கிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர்। தளபதி சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்துக் கழகம் ஒன்றிற்கு சூட்டிய காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முன்வராத ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்கியதன் விளைவாக மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சூட்டப்பட்டிருந்த (டாக்டர் அம்பேத்கர் பெயர் உட்பட) அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் அரசால் நீக்கப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் பெருந்தன்மை, பிற சமூகத்தினருக்கு இருப்பதில்லை என்பதையே சுந்தரலிங்கம் பெயர் நீக்க நிகழ்வுகள் உணர்த்தின। ஆனால், காலப்போக்கில் மக்களுக்கு நேரும் மறதியை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் இதே வகையான சமூகச் சூழலை ஆளும் அரசே ஏற்படுத்துவது என்ன நியாயம்? (30 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தந்தை பெரியாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இவர்கள் முயலவில்லை என்பது வெட்கக்கேடு.) மேலும், நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு இணையாக முத்துராமலிங்கம் உருவச்சிலை நிறுவவும், அவருக்கு ‘பாரதரத்னா' விருது தர அரசியல் ரீதியாக வலு சேர்க்கவும் அக்குறிப்பிட்ட சாதியினர் முயன்று வருவதையும் நாம் அறிகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இவற்றிற்கு இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், ‘இரண்டாம் படை வீடு' என்ற பெயரில் கோயில் கட்டி ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் வழிபாட்டு உணர்வை ஆதிக்க சாதி வெறியூட்டி வளர்க்கவும் ஜெயலலிதா-சசிகலா-சேதுராமன் கூட்டணியினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்। இந்நேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஆனால் ‘தேவர்' பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தி।மு.க. அரசால் முன்மொழியப்படும் இச்சூழலில்தான், தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும் அவற்றை அப்புறப்படுத்த காவல் துறை ஓடிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் ஒரு வகையில் ஆதிக்க சாதியினருக்கு எதிரான பண்பை தன்னியல்பில் கொண்டுள்ள தலித் மக்களின் சுயமரியாதை உணர்வையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இயக்கம் உருவாக்கி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் வீரமரபையும் உயர்த்திப் பிடிக்கும் சமரசமற்ற கலகச் செயல்பாடுகளாகவே இருக்கின்றன. இவ்வகையான கலகங்களின் வாயிலாகத்தான் சாதி ஒழிப்பை மய்யப்படுத்தும் சமூக விடுதலைப் போராட்டங்கள் உயிர்ப்புடன் இருப்பதை நாம் உணர முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டு காலமாக அரசியல் நடந்து வருகிறது। 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும் அரசியல் உரிமைகளுக்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச் சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை ‘தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்திற்குப் பிறகு இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஓர் ஊரில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூட இதுவரையில் எந்த அரசுகளும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;நடுநிலையாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்கூட, சாதி தீண்டாமை எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை। அனைவரும் போலிகள் எனத் தோலுரிந்து போன நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களமிறங்கி, தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சமூகக் கொடுமை களுக்கெதிராக அமைப்பாகவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டைத் தழுவி தலித் மக்களிடம் கிளர்ந்த எழுச்சி, ஒரு தேக்க நிலையை- பின்னடைவை- சரிவை சந்தித்து விட்டதாக அறிவுஜீவிகள் விவாதித்து வரும் நிலையில், புதிய அணுகுமுறையுடனும், மாற்று செயல்திட்டங்களுடனும் தலித் மக்கள் எழுச்சி பெற்றுப் போராட வேண்டிய அவசியத்தையும் நெருக்கடியை யும் ‘தேவர் நூற்றாண்டு' வன்முறைகள் ஏற்படுத்தியுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இச்சூழலில், ‘சூத்திரன் பட்டம்' நீங்கப் போராடும் பிற்படுத்தப் பட்ட சாதியினர், ‘பஞ்சமன்' என ஆயிரம் ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்டு வரும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும் காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் ‘தேவர் ஜெயந்தி' போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன।&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1399179069264489867-7959967786709743564?l=egalaiva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://egalaiva.blogspot.com/feeds/7959967786709743564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1399179069264489867&amp;postID=7959967786709743564' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7959967786709743564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1399179069264489867/posts/default/7959967786709743564'/><link rel='alternate' type='text/html' href='http://egalaiva.blogspot.com/2007/12/blog-post.html' title='ஜாதி வெறி கொண்டாட்டங்கள்'/><author><name>ஏகலைவா</name><uri>http://www.blogger.com/profile/17463845315638665895</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2Q2oH_Q0ed8/R3J6SZMzI3I/AAAAAAAAABE/KLCxR_UH2Rs/s72-c/karunanidhi.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1399179069264489867.post-5375679884702377239</id><published>2007-12-22T22:31:00.001+05:30</published><updated>2009-08-26T00:28:17.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>விபத்துகள் தற்செயலானவை படுகொலைகள் திட்டமிட்டவை</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="bltxt"&gt;- இளம்பரிதி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span mce_ style="color:#ffffff;"&gt;_&lt;/span&gt;&lt;br /&gt;&lt;i&gt;இனியும் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது&lt;br /&gt;இரத்தத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை&lt;br /&gt;வாசிப்பது பேரரசருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்குமானால்&lt;br /&gt;இழுக்கற்றதாகக் கிடக்கட்டும் எங்கள் பிணங்கள்&lt;/i&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;- விக்டர் செகலென்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கருப்பு ஞாயிறுகளின் வரலாறு தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் ‘சுனாமி’ எனும் கடற்கோள் அழிவு துவக்கி வைத்த மரண ஓலம், இந்த ஆண்டின் இறுதியில் சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளத்தால் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பெருமழை தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றியதன் விளைவு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலத்தினின்று பெயர்ந்து நீரில் அமைந்தது. தற்காலிகமாகவே எனினும் வெள்ள நீரால் வீடுகள், வயல்வெளிகள், பயிர்கள், சாலைகள் என அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாகி இயல்பு வாழ்க்கை சீர்கெட்டது. மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை முன்னூரைத் தாண்டியது. பட்டுக் கோட்டைக்கு அருகிலும் இராமநாதபுரம் மாவட்டம் சனவேலிக்கு அருகிலும் இரண்டு பேருந்துகள் வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்தது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னே, மனித எதிர்வினை செயலற்றுப் போனது. இது புரிந்து கொள்ளவும் ப
